1200px-Sathya_gnana_sabha,_vadalur_1
cropped-vad-1.jpg
Tirukappitta Arai
previous arrow
next arrow

இன்றைய தகவல்

வள்ளல் பெருமானின் அருள் ஆசியால் கீழ்கண்ட லட்சியங்களை அடிப்படையாக கொண்டு சமூக சேவையாக இந்த அறக்கட்டளை செயல்படும். கடந்த 30 ஆண்டுகளாக ஆன்மீக இல்லற சன்மார்க்க அருள் அரசாட்சி செய்து வந்த மகாமந்திரபீடம் 21-02-2024 முதல் கீழ்கண்ட பணிகளை படிப்படியாக செய்ய ஆரம்பிக்க மகாமந்திரபீட அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது.
  • அன்னதானம்: முதற்க்கட்டமாக காலை ஒரு வேளை உணவு ஆரம்பிக்கப்பட உள்ளது. சிறிது காலத்தில் அனைவருக்கும் மூன்று வேளை உயர்தர உணவு ஏற்பாடு செய்ய மகாமந்திரபீடம் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
  • மொழித்திறன்: அன்பர்களின் ஆளுமை திறனை உயர்த்தும் பொருட்டு தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிரதம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வல்லுநர்களை கொண்டு மொழிதிறன் பயிற்சி அந்தந்த மொழியை ஆரம்பிக்க மக்கள் கொள்ளும் ஈடுபாடு அடிப்படையில் வகுப்பு ஆரம்பிக்கப்படும்.
  • கல்வி: ஏழை பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள், நோட்டு, பேனா, பென்சில், புத்தகப்பை வழங்கப்படும்.

Latest Posts

கட்டுரைகள்

ஜோதிமைந்தனின் சொல்லோவியம் – 1

இல்லாத ஊருக்கு வழி கேட்பதும், சொல்லாத வார்த்தைக்கு விளக்கம் கேட்பதும், கல்லாத மனிதனை கட்டளை யிடுவதும், நில்லாத காலத்தை நினைக்காமல் இருப்பதும், கல்லாக மனதை கட்டி போடுவதும், தள்ளாத வயதில் துள்ளி யாடுவதும், முள்ளாக இருந்து பிறர் முன்னேற்றத்தை தடுப்பதும், வல்லார்கள் செயலை புல்லாய் நினைப்பதும், நல்லார்கள் மனதை நடுங்க செய்வதும் என்றும் ஆபத்தானது, நேற்றைய செயல் இன்று திருந்தச்சொல்லும் தவறினால், இன்றைய செயல் நாளை வருந்தச் சொல்லும், கருடன் பார்வை பாம்பின் மீது, பாம்பின் பார்வை தவளையின் மீது, தவளையின் பார்வை பூச்சியின் மீது, பூச்சியின் பார்வை புழுவின் மீது, புழுவின் பார்வை புல்லின் மீது, புல்லின் பார்வை கல்லின் மீது, கல்லின் மீதும் கடவுளின் உருவம், கருடனின் மீதும் கடவுளின் உருவம், கடவுளின் பார்வை அனைத்தின் மீதும், அறியா விட்டால் அனைத்தும் வீழும், அறிந்து கொண்டால் அனைத்தும் வாழும். —ஜோதிமைந்தன் சோ. பழநி

தினம்தோறும் தேன்துளிகள்

தேன்துளிகள்-1

தேன்துளிகள்-1

30/01/2025 காலை- 5:55 மணி

        கருணைமிகு ஆன்மநேய அன்பர்களுக்கு வந்தனம் வள்ளல் பெருமானின் ஆசிகள்.அடுத்து புத்தாண்டு விசுவாவசு சித்திரை முதல் நாளுக்கு இன்னும் இடையில் எழுபத்தி இரண்டு நாட்களே உள்ளன.சத்யயுகம் பூரணமாக ஆரம்பிக்க எழுபத்தைந்து வருடங்களே உள்ளது.இந்த நிலையில் வரக்கூடிய தமிழ் புத்தாண்டு மிக முக்கிய பங்காற்ற உள்ளது.யாம் சொல்வதை புறந்தள்ளாமல் அவரவர் நம்பிக்கையை பெற்ற ஆன்மநேய பெரியவர்களிடம் சத்விசாரம் செய்து ஈடுபாட்டுடன் கடவுளிடம் தம்மை வழிநடத்த வேண்டுங்கள்.புத்தாண்டு அன்று மீனராசியில் பூரட்டாதி நான்காம் பாதத்தில் ஒரு புள்ளியில் அதாவது 331பாகை48.5கலையில் சனியும் இராகுவும் சந்திக்கின்றன.இதன் விளைவு நல்வினையாளர்களுக்கு கோடீஸ்வர யோகம் கூட கிடைக்க கூடும் தீவினையாளர்களுக்கு மரணம் அளவுக்கு கூட விதியமையலாம் யாருக்கு தீவினை அதிகமுள்ளது யாருக்கு நல்வினை அதிகமுள்ளது என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும்.அவரவர் மனதிற்கு கூட எட்டாத ஆணவமாயை உள்ள கலியுகத்தின் சந்தி காலம் இது.அன்பர்கள் இந்த நிகழ்வில் கடவுள் நம்பிக்கைக்கும் நல்வினைக்கும் சாட்சியமாக அமைய இந்த வருட பிறப்பிற்கு முன்பாக அருட்பெருஞ்ஜோதி அகவல் படிக்கும் அன்பர்கள் நூற்றி எட்டுமுறை அகவல் படிக்கவும்.ருத்ரம் படிக்க தெரிந்த அன்பர்கள் நூற்றி இருபத்தியோரு முறை ருத்ரம் படிக்கவும்.இவ்விரண்டும் இயலாதவர்கள் தாங்கள் வணங்கும் இஷ்ட தெய்வங்கள் கோயிலில் சென்று தினசரி இருபத்தியோரு சுற்றுகள் வீதம் இருபத்தியோரு நாட்கள் சுற்றவும்.இவ்வாறு சுற்றுவதை திருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரங்கள் வரும் நாட்களில் ஆரம்பிக்கவும் இந்த வழிபாடு முறையே பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி நட்சத்திரங்களில் முடிவடையும்,இந்த வழிபாடு நவகிரகங்கள் அல்லது அவற்றுக்கும் மேலான படிநிலையிலுள்ள கோவில்களில் மட்டுமே பலனளிக்கும்,ஏவல் தெய்வங்கள் கோவிலில் உயிர்பலி கோவிலில் சுற்றினால் ஆன்மலாபம் கிட்டாது மனதிருப்தி மட்டுமே கிடைக்கக்கூடும்.இதில் ஜனன ஜாதகத்தில் கும்பராசியில் குரு இருப்பவர்கள் தயவு செய்து கண்டிப்பாக இதில் ஏதேனும் ஒரு பரிகாரத்தை முடித்து விடவும். புத்தாண்டிற்கு பிறகு இதற்கு விதியை மாற்ற இயலாது.இதன்மூலம் நன்மையடைபவர்கள் கண்டிப்பாக ஜீவகாருண்ய ஒழுக்கத்தையும் பரோபகாரத்தையும் கடைபிடிக்க வேண்டி கேட்கும்
ஜோதிமைந்தன்.

-ஜோதிமைந்தன்.

மேலும் படிக்க

தேன்துளிகள்-2

தேன்துளிகள்-2

24/01/2025 காலை 5.55 மணி

நற்கருமங்கள் செய்பவன் காலத்திற்காக காத்திருக்கிறான். துர்க்கருமங்கள் செய்பவனுக்கு காலம் காத்திருக்கிறது.ஆனால் இரண்டுமே தர்மத்தை நோக்கிய பயணமேயன்றி இதில் இறைவன் மனிதனுக்கு தற்சுதந்திரம் அளித்து விட்டதால் விதியை மனித மனமே நிர்ணயிக்கிறது.இறைவன் உள்ளத்தில் உறைவதா அல்லது வெளியே தேடுவதா என்பதை அவரவரின் ஒழுக்கமும்,சிந்தனைகளும்,செயல்களும் நிர்ணயம் செய்கின்றன.இதனால்தான் வள்ளல் பெருமானார் அவரவர் உள்ளத்தை திருச்சபையாக அலங்கரிக்க சொல்கிறார்.உள்ளத்தில் அமரும்படி வேண்டி விரும்பி அருட்பெருஞ்ஜோதியரை எழுந்தருள இறைஞ்சுகின்றார்.

-ஜோதிமைந்தன்.

மேலும் படிக்க