30-01-2025
கருணைமிகு ஆன்மநேய அன்பர்களுக்கு வந்தனம் வள்ளல் பெருமானின் ஆசிகள்.அடுத்து புத்தாண்டு விசுவாவசு சித்திரை முதல் நாளுக்கு இன்னும் இடையில் எழுபத்தி இரண்டு நாட்களே உள்ளன.சத்யயுகம் பூரணமாக ஆரம்பிக்க எழுபத்தைந்து வருடங்களே உள்ளது.இந்த நிலையில் வரக்கூடிய தமிழ் புத்தாண்டு மிக முக்கிய பங்காற்ற உள்ளது.யாம் சொல்வதை புறந்தள்ளாமல் அவரவர் நம்பிக்கையை பெற்ற ஆன்மநேய பெரியவர்களிடம் சத்விசாரம் செய்து ஈடுபாட்டுடன் கடவுளிடம் தம்மை வழிநடத்த வேண்டுங்கள்.புத்தாண்டு அன்று மீனராசியில் பூரட்டாதி நான்காம் பாதத்தில் ஒரு புள்ளியில் அதாவது 331பாகை48.5கலையில் சனியும் இராகுவும் சந்திக்கின்றன.இதன் விளைவு நல்வினையாளர்களுக்கு கோடீஸ்வர யோகம் கூட கிடைக்க கூடும் தீவினையாளர்களுக்கு மரணம் அளவுக்கு கூட விதியமையலாம் யாருக்கு தீவினை அதிகமுள்ளது யாருக்கு நல்வினை அதிகமுள்ளது என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும்.அவரவர் மனதிற்கு கூட எட்டாத ஆணவமாயை உள்ள கலியுகத்தின் சந்தி காலம் இது.அன்பர்கள் இந்த நிகழ்வில் கடவுள் நம்பிக்கைக்கும் நல்வினைக்கும் சாட்சியமாக அமைய இந்த வருட பிறப்பிற்கு முன்பாக அருட்பெருஞ்ஜோதி அகவல் படிக்கும் அன்பர்கள் நூற்றி எட்டுமுறை அகவல் படிக்கவும்.ருத்ரம் படிக்க தெரிந்த அன்பர்கள் நூற்றி இருபத்தியோரு முறை ருத்ரம் படிக்கவும்.இவ்விரண்டும் இயலாதவர்கள் தாங்கள் வணங்கும் இஷ்ட தெய்வங்கள் கோயிலில் சென்று தினசரி இருபத்தியோரு சுற்றுகள் வீதம் இருபத்தியோரு நாட்கள் சுற்றவும்.இவ்வாறு சுற்றுவதை திருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரங்கள் வரும் நாட்களில் ஆரம்பிக்கவும் இந்த வழிபாடு முறையே பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி நட்சத்திரங்களில் முடிவடையும்,இந்த வழிபாடு நவகிரகங்கள் அல்லது அவற்றுக்கும் மேலான படிநிலையிலுள்ள கோவில்களில் மட்டுமே பலனளிக்கும்,ஏவல் தெய்வங்கள் கோவிலில் உயிர்பலி கோவிலில் சுற்றினால் ஆன்மலாபம் கிட்டாது மனதிருப்தி மட்டுமே கிடைக்கக்கூடும்.இதில் ஜனன ஜாதகத்தில் கும்பராசியில் குரு இருப்பவர்கள் தயவு செய்து கண்டிப்பாக இதில் ஏதேனும் ஒரு பரிகாரத்தை முடித்து விடவும். புத்தாண்டிற்கு பிறகு இதற்கு விதியை மாற்ற இயலாது.இதன்மூலம் நன்மையடைபவர்கள் கண்டிப்பாக ஜீவகாருண்ய ஒழுக்கத்தையும் பரோபகாரத்தையும் கடைபிடிக்க வேண்டி கேட்கும்
ஜோதிமைந்தன்.
30/01/2025
24-01-2025
நற்கருமங்கள் செய்பவன் காலத்திற்காக காத்திருக்கிறான். துர்க்கருமங்கள் செய்பவனுக்கு காலம் காத்திருக்கிறது.ஆனால் இரண்டுமே தர்மத்தை நோக்கிய பயணமேயன்றி இதில் இறைவன் மனிதனுக்கு தற்சுதந்திரம் அளித்து விட்டதால் விதியை மனித மனமே நிர்ணயிக்கிறது.இறைவன் உள்ளத்தில் உறைவதா அல்லது வெளியே தேடுவதா என்பதை அவரவரின் ஒழுக்கமும்,சிந்தனைகளும்,செயல்களும் நிர்ணயம் செய்கின்றன.இதனால்தான் வள்ளல் பெருமானார் அவரவர் உள்ளத்தை திருச்சபையாக அலங்கரிக்க சொல்கிறார்.உள்ளத்தில் அமரும்படி வேண்டி விரும்பி அருட்பெருஞ்ஜோதியரை எழுந்தருள இறைஞ்சுகின்றார்.
ஜோதிமைந்தன்.
24/01/2025
08-01-2024
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளல் பெருமானின் ஆசிகள்.ஒரு கலாச்சாரம் என்று இருந்தால் அதை தொடர்ந்து பேணிகாப்பதற்காக உருவாக்கப்படும் தொகுதிகளும் பகுதிகளும் தான் சாதிகளாகவும் சமயங்களாகவும் மதங்களாகவும் உருவாகின அவற்றிற்கு இடையே உருவாகும் ஆதிக்க மனப்பான்மை ஒரு சிலரின் தவறான அணுகுமுறையால் பண்பாட்டையும் சமுதாயத்தையும் சீரழிக்கும் நிலை கால மாற்றத்தால் ஏற்படுகிறது.இதன் மூலகாரணமாக யாரேனும் ஒரு தனி மனிதனின் வக்கிர குணங்களே அடிப்படையாக இருக்கும் அந்த காலகட்டத்தில் நல்ல செயல்களுக்கான அடையாளமாக ஒருமனிதன் உருவாகி சீர்கெட்ட பண்பாடு கலாச்சாரத்தை ஒழுங்கு படுத்தி நிலைநிறுத்துவார். அது போன்ற மேன்மக்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். அவர்களை பாரத பண்பாட்டில் குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் சித்தர்கள் என்றும் அருளாளர்கள் என்றும் ஆழ்வார்கள் என்றும் நாயன்மார்கள் என்றும் ஞானிகள் என்றும் யோகிகள் என்றும் துறவிகள் என்றும் அவரவர் சீர்திருத்தம் செய்ய எடுத்துக் கொண்ட துறையை பொருத்து பெயர் கொடுத்தார்கள். அதிலும் ஒருசிலரின் பக்குவம் அடையாத நிலையில் ஏற்பட்ட தீர்க்க தரிசன வெளிப்பாடுகளும் பிற்காலத்தில் சமுதாய மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதுண்டு. காலத்தால் உருவான இது போன்ற மகான்களில் வள்ளல் பெருமான் பக்தி நிலையிலிருந்து ஞான நிலைக்கு உயர்ந்த பின் தமது கருத்துகளில் இது போன்ற குழப்பம் வந்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் அதையும் தெளிவுபட பல்வேறு வகையில் கூறியுள்ளார்.அதில் முக்கியமான விஷயம் பக்திநிலையில் இருக்கும் போது விபூதி தரித்தார்.ஞான நிலைக்கு உயர்ந்தவுடன் இறைவன் வழக்கமாக திருநீறு வழங்குவார் இன்று எனக்கு திருநீறுக்கு பதிலாக பூ வழங்கினார் அதைப்பற்றி கேட்டபோது நீயே திருநீராக உள்ளாய் அந்த நிலை கடந்த உனக்கு பூ மட்டுமே வழங்குவோம் எனக் கூறினதாக தமது திருவருட்பா பிரசாத மாலை பாடல்களில் குறிப்பிடுகிறார்அதன்பின் திருநீறு அணிவதை தவிர்த்தார்.மேலும் வழிபாட்டு முறைகளில் சந்தேகம் உருவாவதை தவிர்க்க உருவவழிபாடு அருவ வழிபாடு அவரவர் பக்குவ நிலைக்கு ஏற்ப செயல்படுங்கள்.என்று இதையே ஒரு குழப்பமாக முன்னிறுத்த வேண்டாம்.தனிப்பெருங்கருணையை முன்னிறுத்தும்படி கட்டளையிட்டார்.எல்லா காலங்களிலும்.எமது ஆன்மநேய ஒருமைப்பாட்டுக்கு தெரிந்தே கருத்துபேதம் உருவாக்கிகளங்கம் உருவாக்குபவர்களை ஆண்டவரிடம் விட்டு விடுவேன் என்றார்.சுபம்.
ஜோதிமைந்தன்.
07-01-2024
காலை 5.55 மணி
07-01-2024
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள்.யாம் கூறும் கருத்துக்கள் பழந்தமிழர் பண்பாடு எவையெல்லாம் சிறப்புடைய தன்மை கொண்டவைகளோ அவற்றை முன்னிறுத்துவதை அடிப்படையாக கொண்டவைகள். காரணம் வள்ளல் பெருமான் அவர்கள் சமயங்கள் தோன்றுவதற்கு முன்பிருந்த தமிழர் பண்பாட்டை அடிப்படையாக கொண்ட தமிழை தாய்மொழியாக கொண்ட மக்களால் பின்பற்றப்பட்ட பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு சன்மார்க்க சங்க இயல்பை வடிவமைத்ததுடன் பழந்தமிழர்களால் உருவாக்கப்பட்ட அண்டவியல் கோட்பாட்டையும் அணுவியல் கோட்பாட்டையும் ஆதாரமாக கொண்டு திருவருட்பா பாடல்களை எழுதினார்.கி.பி.எட்டாம் நூற்றாண்டில்தான் அவையெல்லாம் சமஸ்கிருதத்திற்கு மொழிமாற்றம் செய்யப் பட்டன.கலியுகம் தோன்றி ஐயாயிரம் ஆண்டுகளிலிருந்து படிப்படியாக பக்திமார்க்கம் வலிமை பெறும்போது தமிழ் ஞானிகளெல்லாம் கடவுளாக உருவாகி சிலையாகிபோயினர் அவர்களின் கண்டுபிடிப்புகள் ஸமஸ்கிருத மொழி வளமைக்கு ஏற்றவாறு மொழிமாற்றம் செய்யப் பட்டன.தோன்றிய சமயங்கள் சமயங்கடந்து வாழ்ந்த தமிழர் பண்பாட்டை அழித்தன.வேத சமயமும்,வைணவமும் மட்டும் பழந்தமிழர் பண்பாட்டில் வாழ்பவர்களை அழிக்காமல் தமது சமயத்தின் கீழ் கொண்டுவந்தனர்.யாம் நேர்மறை கருத்துக்களை மட்டுமே முன் வைத்து ஆன்மநேய ஒருமைப்பாட்டை வலியுறுத்த முனைவதால் மற்ற சமயங்கள் எவ்வாறு சமயங்கடந்த பண்பாட்டை அழித்தன என்ற வரலாற்றினுள் செல்லவில்லை.வள்ளல் பெருமான் அவர்களின் அருட்பெருஞ்ஜோதி அகவலை படித்தால் அதில் சமயங்கடந்த அணுவியல் மற்றும் அண்டவியல் கருத்துக்கள் புலனாகும்.ஐயாயிரம் ஆண்டுகளாக அணுவியல் கருத்துக்களை ஆய்வு செய்தவர்களை சிவன் என்றும் அண்டவியல் கருத்துக்களை ஆய்வு செய்தவர்களை விஷ்ணு என்றும் இந்த கருத்துக்களையும் மற்றுமுள்ள பல்வேறு கருத்துக்களை தொகுத்தவரை பிரம்மா என்றும் இந்த கோட்பாடுகளை அறிந்து அதிலிருந்து யாகம் ஹோமம் என்றகிரியைகளை உருவாக்கியவர்களை முருகன் என்றும் யோகசக்தியை பயன் படுத்தி செயல்படும் முறையை வழங்கியவர்களை விநாயகர் என்றும்.கடவுளர்களாக்கி அவர்களை நடுகல் வழிபாட்டை நவீனப்படுத்தி அதில் அவர்களின் தத்துவங்களை மனித ரூபத்தில் புகுத்தி சரியை வழிபாட்டை காலம் உருவாக்கி விட்டது.தமிழ் மறைகளும் முறைகளும் கவனிப்பாரின்றி மறைந்து போயின.தமிழ் எல்லையும் சுருங்கிவிட்டன.உலகநன்மைக்காக மீண்டும் சமயங்கடந்த தமிழர் பண்பாட்டை மீளுருவாக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்த பூவுலகில் வாழும் மனிதர்களுக்கு உள்ளது.அந்த பணியை வள்ளல் பெருமான் ஆரம்பித்து வைத்தார்.அவர் உருவாக்கிய பாதையில் நாமும் தொடர்வோம். சுபம்.
ஜோதிமைந்தன்.
07-01-2024
காலை 5.55 மணி
04-01-2024
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள்.இந்த யுக சந்தி காலத்தில் மனிதன் மனித சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு நொடியும் இறைவன் கொடுத்த வரம்.யுகசந்தி காலம் முடிவதற்குள் ஏறக்குறைய சுமார் 25% மானிட ஜனத்தொகை குறைந்து விடும்.அப்படி மானிட ஜனத்தொகை குறைய முதல் காரணி வியாதியாக இருக்கும் இரண்டாவது காரணி நாடுகளுக்கு இடையே நடக்கும் போராக இருக்கும்.வியாதிகளுக்கு முக்கிய காரணியாக உணவு அமையக் கூடும்.இப்படியாக குறையக் கூடிய மானிட ஆன்மாக்கள் தமது நிறைந்த பாவங்களால் ஆன்ம நிலையை இழந்து சிற்றணு பசு நிலை அடையக்கூடும்.அதிகப்படியானபுண்ணிய ங்களாலும் அருளுணவு கிரகித்ததாலும் தெய்வநிலை ஆன்மாக்களாக மாறக் கூடும். இதில் எந்த நிலை அடையலாம் என்பதை இறைவன் அவரவர்க்கு தற்சுதந்திரமாக வழங்கியுள்ளார். இந்த யுகசந்திகாலம் இன்னும் எழுபத்தாறு ஆண்டுகளே உள்ளன.அதன்பின் பூரண சத்ய யுகம் ஆரம்பிக்கும்.இந்த சூழலை மக்களுக்கு தெளிவுபடுத்தவே வள்ளல் பெருமான் அவர்கள் பசித்திரு தனித்திரு, விழித்திரு என்ற ஆன்ம இயல்பை வெளிப்படுத்தினார்.
சுபம்.
ஜோதிமைந்தன்.
04-01-2024
காலை 5.55 மணி
03-01-2024
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள் ஞானம் என்பது சமகாலத்திற்கு ஏற்றவாறு எது தர்மம் என்பதை புரிந்து தாம் பிறவியெடுத்த காரணத்தையும் புரிந்து கொண்டு முக்காலத்தையும் பகுத்தறிந்து இறைவனிடம் அருள் சக்தியை பெற்று அருளாளராக மாறுவதற்கு உபயோகமாகும் அறிவின் வெளிப்பாடு.இந்த வகையில் வரலாற்றில் இடம் பெற்ற மிக உயர்ந்த ஞானியும் அருளாளருமான திருவெண்காடர் எனும் பட்டினத்தார். அவரின் பரிபூரண வாழ்க்கையை முழுமையடைய செய்து இறைவன் தம்முள் அவரை ஐக்கிய படுத்திக் கொண்ட புண்ணிய ஸ்தலம் திருவொற்றியூர். அந்த ஸ்தலத்திலேயே வள்ளல் பெருமானுக்கு ஞானத்தை வழங்கி அவரின் ஞானவாழ்க்கையை ஆரம்பித்து வைக்கிறார் இறைவன்.ஒவ்வொரு மனிதனுக்கும் ஆரம்பம் என ஒன்றிருந்தால் பயணம் என்பதை அனுபவத்தால் பூர்த்தி செய்து வருங்கால சந்ததிகள் விரும்பி ஏற்றுக் கொள்ளும் தன்மையை தமது அனுபவத்தால் வெளிப்படுத்துவதே ஒரு உத்தம மனிதனின் கடமையாக விதியமைக்கிறான் இறைவன்.தற்காலத்தில் சனாதனம் என்ற வார்த்தையை குறித்த சத்விசாரம் செய்ய வேண்டிய விஷயத்தை சமுதாயம் சர்ச்சைக்குரிய விஷயமாக மாற்றியுள்ளது.உண்மையில் சனாதனம் என்றால் என்ன நமது பாரத பண்பாட்டு நாகரீகத்தில் தற்போதுள்ள சைவம் வைணவம் போன்ற சமயங்கள் கலியுக நியதியான சரியை வழிபாட்டிற்காக ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஞானிகளால் அவ்வப்போது காலத்திற்கேற்ற நியதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு சமயங்கள் தோன்றின.ஆனால் அதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பண்பாடுகளும் வழிபாடுகளும் உருவாகி விட்டன.வள்ளல் பெருமான் கலியுகம் முடிந்து கிருதயுகமாகிய சத்யயுகம் உருவாகி விட்டதால் அதை வடிவமைக்க இறைவனால் யுகபுருஷனாக அனுப்பப் பட்டவர். அவர் எந்த சமய சார்பாகவும் செயல்படாமல் எல்லா சமயதேவர்வர்களையும் கடந்து நான்கு யுகங்களிலும் மக்கள் வழிபடும் தன்மையை உருவாக்கி அருட்பெருஞ்ஜோதி என்றும் அந்த தன்மை தனிப்பெருங்கருணை உடைய இறைத்தன்மை என்றும் கூறி வழிபாட்டை மனித சமுதாயத்திற்கு வழங்கியுள்ளார்.சிலவகை வழிபாடுகள் சில யுகமாற்றத்தால் செயலிழக்கும் ஆனால் பாரதபண்பாட்டில் தமிழால் உருவாக்கப்பட்ட சன்மார்க்க வழிபாடு எல்லா காலங்களிலும் ஏற்புடைத்தது.எல்லாமனிதர்களாலும் சமயங்கடந்த நிலையில் ஏற்றுக்கொள்ள சமயங்கடந்த வழிபாட்டையும் ஒழுக்கங்களையும் உறுதி படுத்தியவர் வள்ளலா பெருமான் அவர்கள்.சமயங்கடந்த வாழ்க்கை இயல்பை காலத்தால் மாறுபட்டாலும் நிலையானது பாரத பண்பாட்டின் சனாதன நிலை.இந்திய வரலாற்றையும் பாரத ஞானிகளின் எண்ண எழுச்சிகளையும் முழுமையாக அறிந்தவர்கள் இந்த வள்ளல் பெருமானையும் புரிந்து கொள்வார்கள்.சுபம்.
ஜோதிமைந்தன்.
03-01-2024
காலை 5.55 மணி
02-01-2024
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள். நேற்று இந்தியா உட்பட அவரவர் ஊர்களில் இரவு பனிரெண்டு மணிக்கு ஆங்கில புத்தாண்டு கொண்டாடி தீர்த்தார்கள் ஆங்கிலேய கலாச்சாரம் புனித ஒயின் புனித ரொட்டி சாப்பிட்டு புத்தாண்டை வரவேற்பது இரவு கடைசி விருந்தில் இயேசு திராட்சை இரசத்தையும் அப்பமும் வழங்கியதால் அதை ஒரு மத சம்பிரதாயமாக ஆங்கிலேயர்கள் லண்டனில் கொண்டாடுவது நியாயம் இருக்கிறது. அவர்களுக்கு நள்ளிரவு பனிரெண்டு மணிஎன்பது நமக்கு சூரிய உதய காலமான காலை 5.30மணியாகிறது.நம்முடைய வானியல் அடிப்படையான ஜோதிட சாத்திரம் சூரிய உதய நேரத்தைதான் நாள்,மாதம்,வருடபிறப்புகளாக கொண்டாட வேண்டும்.காலப்பிறப்பு நேரங்கள் மாறாது லண்டன் பனிரெண்டு மணி என்பதை அவரவர் நாடுகள் ஊர்களுக்காக நேரம் குறித்து கொண்டாடினால் இறைவன் எந்த வடிவில் இருந்தாலும் மகிழ்வான் அல்லவா இதை கணக்கில் எடுக்காமல் நம்நாட்டு இரவு பனிரெண்டு மணிக்கு நமது கலாச்சார நம்பிக்கைகளுக்கு புறம்பாக சரியை வழிபாட்டு கோவில்களில் சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்வதும் அதை பொதுமக்கள் வரிசையில் நின்று பார்த்து சந்தோஷப்படுவதும், ஆங்கிலேயர்கள் வழிபாட்டுதலங்களில் புனிதமாக கருதி ஒயினையும் அப்பத்தையும் ஏற்பதை மதுபார்களில் சாராயம் அருந்தி தெருக்களில் மக்களை பிரச்சினை உருவாக்குவதும் நாம் நமது கலாச்சாரத்தையும் புறந்தள்ளி ஆங்கிலேய கலாச்சாரத்தையும் தம்மை அறியாமல் அவமானப்படுத்துவதாக அமைகின்றது. இதுபோன்ற தவறான மூட நம்பிக்கைகளை வள்ளல் பெருமான் சாடினார்.அவரை பின்பற்ற எண்ணுபவர்கள் சைவ உணவை கண்டிப்பாக கடைபிடித்து நீங்கள் இறைவனை எந்தவகையில் வழிபட்டாலும் அந்தந்த தன்மைக்கேற்ற பலன் அவரவர்க்கு கிடைக்கும் ஆனால் ஒழுக்க அடிப்படையான அவரவர் ஏற்றுக்கொண்ட பண்பாட்டை முறையாக பின்பற்றுக இதுபோன்ற தவறுகள் சமுதாயத்தில் ஏற்படும்போது விழிப்புணர்வு ஏற்படுத்துக.சுபம்.
ஜோதிமைந்தன்.
02-01-2024
காலை 5.55 மணி
01-01-2024
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள். இன்றைய யுகசந்தி காலத்தில் வள்ளல் பெருமான் அவர்கள் அருளாளர் வருகின்ற தருணமிது தோழி ஆயிரமாயிரம் அணிவிளக்கு ஏற்றிடுக என திருவருட்பாவில் பாடியுள்ளார்.மேலும் இதுமுதல் யாவர் உடலிலும் புகுந்து கொள்வோம் என்றுதான் கூறியுள்ளார்அத்துடன் இரண்டரை நாழிகையில் வருவேன் எனவும் கூறியுள்ளார்.மேலும் தம்மை ஒளியுடம்பாக பார்ப்பதை தவிர்த்து விக்கிரமாக ஆராதிப்பதை தவிர்க்கும் பொருட்டு தமது உருவச் சிலையை தாமே உடைத்துள்ளார்.சமயங்கடந்த தனிப்பொருள் வெளியாய் அவரவர் ஆன்மநிலையை பக்குவ படுத்தி மனதால் அகமும் வெளுத்த நிலையில் எத்துணையும் பேதமுறாது வாழ்க்கை இயல்பை கொண்டவர்கள் மனதில் எப்போதும் உறைகின்றார். அவர்களின் உணர்வில் உரைக்கின்றார். அவரை அவர் வாழ்ந்த சொரூபத்தில் பார்க்க வேண்டுமெனில் அந்த காட்சி எவ்வாறு கிட்டும் என்பதையும் அவரவர் ஆன்மாவை பரமாத்ம சொரூபமாக சயதரிசனமாகிய இறைதரிசனம் காணும் விவரத்தை எமது மெய்ஞானத்தை அடையும் வழி என்ற கட்டுரை தொகுப்பில் காண்க. அவரவர் குருநிலையில் வள்ளல் பெருமானை தரிசிக்க நினைத்தாலும் அருட்பெருஞ்ஜோதியாக தரிசனம் காணநினைத்தாலும் அவரவர் ஆன்மாவை சுயதரிசனம் காண நினைத்தாலும் இறை அருளால் விழித்திரு என்ற மகத்தான வாக்கை மனதில் வைத்து செயல் படுக உரிய நேரத்தில் காரியப்படும்.சுபம்.
ஜோதிமைந்தன்.
01-01-2024
காலை 5.55 மணி
31-12-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள். மனிதனுக்கு கலியுகத்தில் இறைவன் வழங்கியது பூரண ஆயுள் 120 வருடங்களாகும். இதில் பூரண ஆயுளை இன்பமாக அனுபவிக்க உணவில் கட்டுப்பாடு வேண்டும். முதல் முப்பது ஆண்டுகள் திட உணவுகளில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும்.அடுத்த முப்பது ஆண்டுகள் திரவ உணவில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும் அதில் எந்தெந்த திட உணவில் பற்றுக் கொண்டிருந்தோமோ அவற்றை கைவிட்டு பசிக்காக மட்டுமே புசிக்க வேண்டும்.மூன்றாவது முப்பது ஆண்டுகளில் திட,திரவ உணவுகளில் ருசியை கைவிட்டு வாயு உணவுகளில் முக்கியத்துவத்தை செலுத்த வேண்டும்.நான்காவது முப்பது ஆண்டுகளில் அருளுணவுக்கு முக்கியத்துவம் செலுத்தவேண்டும்.ருசியை கைவிட்டு பசியை கருதி உண்ண வேண்டும் அருளுணவை முதல் முப்பதிலேயே ஆரம்பித்து விட்டால் மற்ற உணவுகளில் உள்ள குறைபாடுகள் நிவர்த்தியாகும்.இதையை ஜோதிட கலையில் ஆயுள் காரகன் சனீஸ்வரன் என்றும் அவர் ஒரு சுற்று வருவதற்கு முப்பது ஆண்டுகள் ஆகிறது என்றும் அவர் முதல் சுற்றில் அவ்வளாக தாக்கம் ஏற்படுத்தாத மங்கு சனி என்றும் இரண்டாவது சுற்றில் வாழ்வியல் நியதியை முறைபடுத்தும் பொங்கு சனி என்றும் மூன்றாவது சுற்றில் அவரவர் கர்ம வினைக்கேற்ற முடிவுக்கு கொண்டு செல்லும் மரண சனி என்றும் கணித்து வைத்தார்கள்.இறைவன் முதல் மூன்று உணவுகளின் தேவையை அறிய பசிப்பிணியை வைத்தார்.அருளுணவை தற்சுதந்திரமாக வைத்தார்.அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வள்ளல் பெருமான் பசித்திரு என்றார்.சுபம்.
ஜோதிமைந்தன்.
31-12-2023
காலை 5.55 மணி
30-12-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள். மனிதனுக்கு கலியுகத்தில் இறைவன் வழங்கியது பூரண ஆயுள் 120 வருடங்களாகும். இதில் பூரண ஆயுளை இன்பமாக அனுபவிக்க உணவில் கட்டுப்பாடு வேண்டும். முதல் முப்பது ஆண்டுகள் திட உணவுகளில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும்.அடுத்த முப்பது ஆண்டுகள் திரவ உணவில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும் அதில் எந்தெந்த திட உணவில் பற்றுக் கொண்டிருந்தோமோ அவற்றை கைவிட்டு பசிக்காக மட்டுமே புசிக்க வேண்டும்.மூன்றாவது முப்பது ஆண்டுகளில் திட,திரவ உணவுகளில் ருசியை கைவிட்டு வாயு உணவுகளில் முக்கியத்துவத்தை செலுத்த வேண்டும்.நான்காவது முப்பது ஆண்டுகளில் அருளுணவுக்கு முக்கியத்துவம் செலுத்தவேண்டும்.ருசியை கைவிட்டு பசியை கருதி உண்ண வேண்டும் அருளுணவை முதல் முப்பதிலேயே ஆரம்பித்து விட்டால் மற்ற உணவுகளில் உள்ள குறைபாடுகள் நிவர்த்தியாகும்.இதையை ஜோதிட கலையில் ஆயுள் காரகன் சனீஸ்வரன் என்றும் அவர் ஒரு சுற்று வருவதற்கு முப்பது ஆண்டுகள் ஆகிறது என்றும் அவர் முதல் சுற்றில் அவ்வளாக தாக்கம் ஏற்படுத்தாத மங்கு சனி என்றும் இரண்டாவது சுற்றில் வாழ்வியல் நியதியை முறைபடுத்தும் பொங்கு சனி என்றும் மூன்றாவது சுற்றில் அவரவர் கர்ம வினைக்கேற்ற முடிவுக்கு கொண்டு செல்லும் மரண சனி என்றும் கணித்து வைத்தார்கள்.இறைவன் முதல் மூன்று உணவுகளின் தேவையை அறிய பசிப்பிணியை வைத்தார்.அருளுணவை தற்சுதந்திரமாக வைத்தார்.அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வள்ளல் பெருமான் பசித்திரு என்றார்.சுபம்.
ஜோதிமைந்தன்.
30-12-2023
காலை 5.55 மணி
29-12-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள்.ஆதி சங்கரர் அவர்கள் தாம் வாழ்ந்த காலத்தில் பாரத நாட்டில் நிலவியபலநூறு சமய நம்பிக்கைகளை ஒன்றிணைத்தார் அவர் காலத்தில் நரபலி இடுவது கூட சமய நம்பிக்கையாக இருந்தது அதையெல்லாம் மாற்றி கும்பாபிஷேக முறையை கொண்டுவந்து காணாபத்யம்,கௌமாரம்,சைவம்,வைணவம்,சாக்தம்,சௌரம் என்றஆறு சமயங்களாக பாரத பண்பாட்டை வடிவமைத்தார்.ஆனால் அந்த சமயங்களுக்குள்ளும் போட்டிகள் இருந்தன.இந்த போட்டிகளில் சமணமும் பௌத்தமும் கூட பங்கு வகித்தன அத்துடன் நில்லாமல் நான்கு வேதங்களை அடிப்படையாக கொண்ட முறைகளும்போட்டியில் மக்களை பிரித்தன. இதையெல்லாம் சரி செய்ய இறைவனால் வள்ளல் பெருமான் வருவிக்க உற்றார்.வள்ளல்பெருமான் சைவ சமய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் இறைவன் ஒருவரே பண்பாடும் ஒன்றே சமயங்களும் சமய தேவர்களும் ஒரே இறைவனை நோக்கி செல்லும் வழிகளே என்பதை மனதில் வைத்து இந்த பண்பாட்டை அடிப்படையாக வாழ்ந்த ஒருஇல்,ஒருசொல்,ஒருவில் என்ற ஒழுக்க நாயகனாக விளங்கும் வைணவர்களால் பிரம்ம சொரூபமாக வணங்கப்படும் ஸ்ரீஇராமருக்கும் தமது திருவருட்பாவில் போற்றி பாடினார். சைவம் வைணவம் போன்ற சமயங்களில் வேற்றுமை பாராட்டாமல் வேத சன்மார்க்க சங்கம் என்பதை தோற்றுவித்தார்.ஆனால் அவர் அனைத்து சமயங்களையும் ஒன்றாக கருதி ஸ்ரீஇராமர் மேல் பாடல் எழுதியதும் கூட அவரை பக்குவமற்ற சில சமயவாதிகள் எதிர்க்க பல்வேறு காரணங்களில் ஒன்றாக அமைந்தது.இந்த சூழலில் புறச்சமயங்களை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பக்குவமற்ற கல்வியாளர்களை வள்ளலாரை எதிர்க்க ஊக்குவித்தனர் வள்ளல் பெருமானின் கருத்துக்களை அனைவரும் பின்பற்ற ஆரம்பித்தால் புறச்சமயங்களை பாரத நாட்டில் பரப்ப முடியாது என்ற உள்நோக்கம் காரணமானது.மெக்காலே என்ற ஆங்கிலேய கல்வி வடிவமைப்பாளரின் நோக்கம் பாரத பண்பாட்டை சிதைத்து மக்களிடம் அடிமைத்தனத்தை வேறூன்ற செய்ய பிரம்மத்தை உணர்ந்த பிராமண சமுதாயத்தை மறைமுகமாக எதிர்க்க வள்ளலாரின் ஏக இறை தத்துவத்தை முன் வைத்து வள்ளலார் பிராமணர்களுக்கு எதிரானவர் என்ற பொய் வதந்தியை பரப்பினார்கள்.ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள பக்குவமற்ற மனிதர்களும் இதை சிரமேற்கொண்டு பெருமானாரின் நல்லெண்ண செயல்பாட்டை சிதைத்தனர். இன்றுவரை அந்த பணி தொடர்கிறது.வள்ளல் பெருமானார் தமது சன்மார்க்க சங்கத்தை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் எனப் பெயரிட்டு தெய்வீக சங்கமாக மாற்றினார்.வள்ளல் பெருமானை பொறுத்தவரை எந்த சமயத்திற்கோ,சாதி அமைப்புகளுக்கோ எதிராக செயல் படாமல் அவற்றையெல்லாம் கடந்து ஒற்றுமையாக இருங்கள் என்பதையே வலியுறுத்தினார்.பாரத பண்பாட்டின் மறுமலர்ச்சியாளர் என்பதே வரலாற்று உண்மை சுபம்.
ஜோதிமைந்தன்.
29-12-2023
காலை 5.55 மணி
28-12-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள் மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களுக்கும் முன்னேறக்கருதி செய்யும் செயல்பாடுகளுக்குஏற்படும் தடங்கல் களுக்கும் முக்கிய காரணம் அவரவர்க்கு மனதில் உள்ள அதீதஆசையே என்பதை அறிக.ஆசை என்பது தாமரை இலை மேல் உள்ள நீரை போன்று இருக்க வேண்டும்.அது வெறியாக மாறும்போது அந்த பேராசை ஆனது மாரகத்தை கூட வருந்தி அழைக்கும் தன்மையுடைய விதியாக மாறும்.அதையும் நமது முன்னோர்களும் ரிஷிகளும் அறிந்து ஆசை அதிகமில்லாத பக்குவத்தை மானிடர்க்கு கற்பித்தார்கள். மேலும் முக்காலத்தை உணரக் கூடியதாக உள்ள ஜோதிடக் கலையில் மேஷம்,கடகம்,துலாம்,மகரம் ஆகிய லக்கினத்தை உடையவர்கள் பொன்னாசையும் அதாவது கருப்புப்பணம்,லஞ்சம் போன்ற அசையும் சொத்துக்களில் அதீத ஆசை கொண்டு சேர்ப்பதும் ,ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் ஆகிய லக்கினக்காரர்கள்,மண்ணாசை எனும் அதிகப்படியான செல்வ வளத்தை வீடு மனை,நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வது ரியல் எஸ்டேட் துறை மற்றும் பிறர் சொத்தை அபகரிப்பது போன்ற அசையா சொத்துக்களை அதீத ஆசைகொண்டு செயல் படுவதும்,மிதுனம்,கன்னி,தனுசு,மீனம் லக்கின காரர்கள் பெண்ணாசை வகையை சேர்ந்த ஆணானால் மனைவி,பெண்ணானால் கணவன் மற்றும் நண்பர்கள் உறவினர்கள்முக்கியமாக வாரிசுகள் இவர்கள் மேல் அதீத பாசம் வைத்து அவர்களுக்கு நன்மை செய்வதாக கருதி பலவகையில் அவர்களுக்கும் அதர்ம வழியில் ஈடுபட்டு வளமான வாழ்க்கை வழங்குவதாக நினைத்து செயல்படுவது கடைசியில் மீள முடியாத துன்பத்தையே வழங்கும்.இந்த அதீத ஆசைகளின் பலன் பிறவிதோறும் எதிர் வினையாக மாறி அடுத்த பிறவி மனிதநிலைக்கும் கீழான நிலையாகக் கூட விதி அமையும்.ஆசையின் வெளிப்பாடு பிடிவாதம் அகங்காரம் உயர்வுமனப்பான்மை ஆகியவை இவற்றை தவிர்க்க சுயமாக சத்விசாரம் செய்வது அது கடினமானால் வள்ளலாரின் மனுமுறை கண்ட வாசகத்தை படித்து தந்நிலை உணர்தல்.சுபம்.
ஜோதிமைந்தன்.
28-12-2023
காலை 5.55 மணி
27-12-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள்.மஞ்சள் என்ற மூலிகைக்கும் தங்கம் என்ற உலோகத்திற்கும் தொடர்புண்டு தங்கம் எல்லாவகையான நேர்மறை மற்றும் எதிர் மறை சக்திகளையும் கிரகித்து தம்முள் வைத்துக் கொள்ளும் அதைவிட குறைவான கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் வெள்ளி செம்பு போன்ற உலோகங்களில் உண்டு.மஞ்சள் என்ற மூலிகையில் தீயசக்திகளான எதிர்மறை ஆற்றலைஅழிக்கும் ஆற்றலும் நேர்மறை ஆற்றலை கிரகிக்கும் ஆற்றலும் இருக்கும்.சந்தனத்திற்கும் அந்த ஆற்றல் இருக்கும்.அதனால்தான் சரியை வழிபாட்டு கோவில்களில் தங்க மற்றும் வெள்ளி கவசங்களால் ஆண் தெய்வங்களுக்கு சந்தனமும் பெண் தெய்வங்களுக்கு மஞ்சளும் காப்பிட்டு அதன் மேல் கவசமிடப்படுகிறது. மேலும் தமிழர் பண்பாட்டில் பெண்கள் மஞ்சள் பூசி அதன்மேல் தங்க நகை அணிவதும் ஆண்கள் மார்பில் சந்தனம் பூசி தங்க சங்கிலி போன்ற அணிகலன்களை அணிவதும் மரபு ஆனது.மேலும் தங்க அணிகலன்களை செல்வ செழிப்பு உள்ளது என்பதற்காக தொப்புளுக்கு கீழாக அணியக் கூடியகால் சலங்கை,தண்டை போன்ற அணிகலன்களை தங்கத்தில் அணிய கூடாது வெள்ளி போன்ற உலோகங்களால் செய்தவைகளை தான் அணிய வேண்டும்.பண்டைய காலத்தில் அரசர்கள் தமது கழுத்தில் தங்க சங்கிலிகளையும் ஆரங்களையும் அணிந்ததின் காரணம் தாம் ஒரு சந்தோஷமா ன சம்பவத்தை தெரிந்தபின் தமது சந்தோஷத்தை பிறருடன் பகிர்ந்து கொள்ள உடனடியாக தங்க அணிகலன்களை தானம் செய்து வாழ்த்து பெறுவார்கள்.தானம் செய்வதையும் ஒரு முறையான செயல்பாடாக நடத்தினார்கள்.அவ்வாறு செய்த அரசர்கள் வள்ளல்கள் என்று வரலாற்றில் இடம் பெற்றார்கள்.அவர்களெல்லாம் பொருள்சக்தியை வாரி வழங்கியவர்கள்.அருள்சக்தியை அபரிமிதமாக வழங்கியதாலும் அன்னதானம் வழங்கியதாலும் நமது ஞானகுரு இராமலிங்கம் அவர்கள் திருவருட்பிரகாச வள்ளலார் என்று வரலாற்றில் இடம் பெற்றார்.மேலும் அருள் சக்தியை தற்காலத்திலும் அபரிமிதமாக வழங்கி கொண்டிருக்கிறார்.எதிர்காலத்திலும் வழங்குவார்.சுபம்.
ஜோதிமைந்தன்.
27-12-2023
காலை 5.55 மணி
26-12-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள்வரலாற்றில் சில நிகழ்வுகள் மருத்துவமே ஆன்மீக நம்பிக்கையாக மக்களுக்கு போதிக்கப் பட்டது.அவற்றில் ஒன்று மஞ்சள் பூசிகுளிப்பது. தற்கால பெண்களுக்கு அதை காலம் மூடநம்பிக்கையாக உருவகப் படுத்தி விட்டது.மேநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் அழகு சாதனப் பொருட்கள் அனைத்தும் இந்திய பண்பாட்டுக்கு எதிராக உள்ள மிருக கொழுப்புகளால் உருவாக்கப்பட்டு சந்தைக்கு வருகின்றன.அவற்றைஇந்திய மக்கள் பயன்படுத்த ஆரம்பித்த உடன் இந்திய பெண்களின் ஆரோக்கியத்திற்கு மூலாதாரமான மஞ்சளுக்கு மேநாட்டினர் காப்புரிமை பெற்றுவிட்டு தற்போது இந்த அழகு சாதன பொருளில் மஞ்சள் உள்ளது இது உங்களை மேனி எழிலை பாதுகாக்கும் என்று விளம்பரத்தை பார்த்து ஐநூறு ரூபாய் கொடுத்து மஞ்சளும் மிருக கொழுப்பும் கலந்த கிரீமை வாங்கி பயன்படுத்தும் ஆர்வம் பெண்களிடம் இருக்கும் அளவுக்கு மஞ்சள் நேரிடையாக ஐம்பது ரூபாயில் கிடைப்பதை பயன் படுத்தும் ஆர்வம் இல்லை.பதினெட்டாம் நூற்றாண்டில் துப்பாக்கி தோட்டாக்களில் பன்றியின் கொழுப்பும் பசுவின் கொழுப்பும் பயன் படுத்தப்படுகிறது என்ற செய்தி பரவியதால் அதுவரை ஒருவரை ஒருவர்பரஸ்பரம் சண்டையிட்டுக் கொண்டிருந்த இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றிணைந்து ஆங்கில அரசை எதிர்த்து அவரவர் கலாச்சாரத்தை பாதிப்பதாக கூறிபோராடினார்கள். அது வரலாற்றில் சிப்பாய் கலகம் என்று வர்ணிக்கப்படுகிறது.இந்த நிலையில் தற்காலத்தில் இந்த கிரீம்கள் ஐரோப்பிய மக்களுக்கு தேவையானதாக இருக்கலாம்.அவர்கள் கலாச்சார வாழ்க்கைக்கு அது அனுசரித்த விஷயம் ஏனெனில் அவர்கள் பன்றி,பசு இரண்டின் மாமிசத்தையும் உண்ணக் கூடியவர்கள் அதனால் அவற்றின் கொழுப்பால் தயாரிக்கப்பட்ட கிரீம்களை பயன் படுத்துவது ஆரோக்கியமாக இருக்கலாம்.அவர்களே தற்காலத்தில் வேகன் என்ற இயக்கத்தை ஆரம்பித்து அந்த இயக்கம் உலக முழுக்க வேகமாக பரவி வருகிறது.நம் பண்பாட்டை பொறுத்தவரை மனிதர்கள் வாழ்வதற்கு அருளுணவும் ஆண் பெண் இருவருக்கும் தேவை அதற்கு இன்றியமையாத மஞ்சளை நேரிடையாக பயன் படுத்துவது தெய்வத்தன்மையை கொடுப்பதுடன் பொருளாதார சிக்கனமும் கிடைக்கும்.
சுபம்.
ஜோதிமைந்தன்.
26-12-2023
காலை 5.55 மணி
25-12-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளல் பெருமானின் ஆசிகள் சதுர்யுகங்களின் முதல் யுகமான க்ருத யுகத்தில் வான சாத்திரம் விஷ்ணுபடிநிலை வரை உயர்ந்து கர்த்தாவான மகான் ஒருவரால் வடிவமைக்கப் பட்டது அது சமயம் தமது யோக சக்தியால் உயர்ந்த மனிதர்களின் ஆன்மாவிற்கு கோள்கள் கேந்திரமாக வழங்கப் பட்டன முதன் முதலில் விஷ்ணு படிநிலையடைந்த சித்தரால் பிரபஞ்சம் இருபத்தியெட்டு பகுதிகளாக பிரிக்கப் பட்டது.அதனடிப்படையில் அடுத்து வந்த ஞானிகளும் சித்தர்களும் வானசாத்திரத்தை வடிவமைத்து கிரகங்களை கேந்திரமாக கொண்ட நாயகர்களுக்கு ஜோதிட கலையை உருவாக்கி அதனடிப்படையில் மனிதர்கள் உட்பட இந்த சூரிய குடும்பத்தை இயக்கும் விதியை யோக சக்தியால் சட்டமியற்றினர் அதனடிப்படையில் இந்த பூமியில் வாழ்ந்த மனிதர்களும் துல்லியமாக தமது வாழ்க்கையை வடிவமைத்து தர்மம் என்பதை ஆதாரப்பூர்வமாக கொண்டு வாழ்ந்து வந்தனர் அவ்வப்போது தரும நெறி தவறுபவர்களையும் அருளரசாட்சிபெற்ற ஆன்மாக்கள் சரிசெய்து ஆன்மாக்களுக்கு உயர்நிலை வழங்கினர்.இந்த சூழலில் சதுர்யுகத்தின் நான்காவது யுகமான கலியுகத்தின் ஆரம்பத்தில் கலியுக புருஷரான ஸ்ரீகிருஷ்ணர் தமது யுகத்தில் அதர்மங்கள் வரம்புமீறும் அதுசமயம் இப்போது இருக்கும் விண்ணியல்பு விதியான ஜோதிட சாத்திரம் அப்படியே இருந்தால் துல்லியமாக கால கணக்கிட்டு உயிர்களை துன்பத்தில் ஆழ்த்தக்கூடிய எதிர்மறை சக்திகளை கட்டுப் படுத்த இயலாத சூழல் ஏற்படும் என்றறிந்து தம்முடைய விஷ்ணு அம்சத்தைக் கொண்டு இருபத்தெட்டாக பிரித்து வடிவமைக்கப்பட்ட ஜோதிட சாத்திரத்தை இருபத்திஏழாக பிரித்து நட்சத்திர பெயர்களை வழங்கினார்.மேலும் சித்தர்கள் ஞானிகளிடம் வெற்றிக்கு உதவும் நட்சத்திரத்தை மறைத்து அதை பரப்ரம்மம் என்றும் அருட்பெருஞ்ஜோதியர் என்றும் ஞானிகளால்குறிப்பிடப்படும் இயற்கை உண்மை தெய்வத்தை அறிந்த கர்த்தாக்களின் அருளரசாட்சிக்கு உரியவிதியில் அந்த நட்சத்திரம் இயங்கும் எனவும் கூறி அந்த நட்சத்திரத்தின் ஆளுமைத் தன்மையை ஓங்காரத்தாலும் அதை தொடர்ந்து விஷ்ணு படிநிலை வரை கடந்து வந்த ஆன்மாக்கள் பயன்படும் வகையில் விதியமைத்தார்.புராணங்கள் தமது மயிலிறகால் வெற்றி நட்சத்திரத்தை மறைத்தார் என்று கூறுவதாக அறிந்தோம் வெற்றி நட்சத்திரத்தை மறைத்த அடையாளமாகவே ஸ்ரீகிருஷ்ணரின் சிரசுப்பகுதியில் மயிலிறகால் அலங்கரிக்கப்பட்ட வடிவங்கள் சரியை வழிப்பாட்டில் கடைபிடிக்கப் படுகிறது.மேலும் யுக சந்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இன்றைய காலகட்டத்தில் கலியுக வாசிகளுக்கு தற்போதுள்ள ஜோதிட சாத்திரப்படி விதியமையும் சத்யயுக மனிதர்களுக்கு அதாவது ஜீவகாருண்ய ஒழுக்கத்திலுள்ள எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எனும் எண்ணமுள்ள மனிதர்களுக்கு தர்ம நெறிமுறையை கருத்தில் கொண்டு வாழும் மனிதர்களுக்கு எவ்வளவு கடினமான நவகிரக விதிப்படியான வாழ்க்கை அமைக்கப் பட்டிருந்தாலும் அதைமாற்றும் உரிமை உண்டு.மயிலிறகு மிக உயர்ந்த யோக சக்தியின் வெளிப்பாடு. வள்ளல் பெருமான் அவர்கள் வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் மயில் குயில் ஆச்சுதடி என்ற தமது அனுபவத்தை பாடல்மூலமாக வெளிப்படுத்தி சத்ய யுகத்திற்காக மறைத்த வெற்றி விதியை சத்யயுக புருஷராக இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட வள்ளல் பெருமானால் தமது அருள் வாக்கினால் விதியை சத்யயுக வாசிகளுக்காக மாற்றப்படும் என்று பிரகடனப் படுத்துகிறார். எனவே அன்பர்கள் அவரவர் விதியை பரமாத்மாவின் உருவகமாக பாவிக்கும் ஜோதியின் முன் அமர்ந்து தம்மை சத்ய யுக வாழ்க்கையில் வாழவும் விதியமைத்து தற்போது தாம் அடையும் துன்பங்களை நீக்க விண்ணப்பிக்கலாம்.நவகிரக அவயோக பாதிப்புகள் சுபயோகமாக மாறும்.சுபம்
ஜோதிமைந்தன்.
25-12-2023
காலை 5.55 மணி
24-12-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள் யாம் சமயங்கடந்து சுத்த சன்மார்க்க வாழ்க்கை இயல்பை இல்லற சன்மார்க்கமாக ஏற்றுக் கொண்ட தருணம் ஒருமனிதன் குடும்பத்துடன் சன்மார்க்க இயல்பை ஏற்று வாழும் இலக்கணத்தை மனித நிலையில் உன்மூலமாக உருவாக்க வேண்டும் என விதி அமைக்க யாம் முயற்சிக்கிறோம் எனவே எந்த வித எதிர்பார்ப்புமின்றி யாம் சொல்வதை கடைபிடித்துவரவும் என்றார். தொடர்ந்த சத்விசாரத்தில் இந்த உலகில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் புறச் சமயங்களில் ஒன்று முற்றிலுமாக செயலிழக்க உள்ளது அந்த நேரத்தில் அந்தசமயத்தை சேர்ந்த உண்மையான கடவுள் நம்பிக்கையாளர்கள் பின்பற்ற ஒரு உலகப் பொதுவான ஒரு சமயஙககடந்த ஒரு மார்க்கமாக சன்மார்க்கம் வேண்டும்.எனவே சன்மார்க்கத்தில் யாரையும் வருந்தி அழைக்க வேண்டாம் நாடி வருபவர்களுக்கு விளக்கமளிக்கவே உமக்கு அனுபவ ரீதியாக இல்லற சன்மார்க்கத்தை உருவாக்குக என அன்பு கட்டளை வழங்கினார்.மேலும் புறச் சமயத்தாரால் போற்றப் படும் ஒரு புனித நகரமானது அணுக்கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டு அந்த புனிதபூமி மனிதர்கள் அணுகத் தகாத இடமாக மாறும் அதுமுதல் உலகை ஆதிக்கம் செய்ய எண்ணும் புறச்சமயங்கள் செயலிழந்து போகும் இது யுகசந்தியின் காலநியதியில் ஒன்று.
சுபம்.
ஜோதிமைந்தன்.
24-12-2023
காலை 5.55 மணி
23-12-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள் நமது முன்னோர்கள் ஒவ்வொரு இடத்திற்கும் தமது தவவலிமையால் ஒவ்வொரு சிறப்பை உருவாக்கி வைத்தார்கள்.ஆன்மீக ரீதியாக காசியிலும் இராமேஸ்வரத்திலும் நீராடினால் முக்தி என்றும் திருவண்ணாமலையில் நினைத்தாலே முக்தி என்றும் தவவலிமையால் நம்பிக்கையை உருவாக்கினார்கள்.அதுபோல் முன்னொரு காலத்தில் குரு என்ற மன்னர் வாழ்ந்து வந்தார்.அவருக்கு மிகவும் சிறந்த ஏழு புதல்வர்கள் இருந்தார்கள்.வழக்கமான முறையில் மூத்த மகனுக்கு அரசபதவி வழங்க மற்ற புதல்வர்கள் ஏற்றுக் கொள்ளாமல் ஒவ்வொருவரும் மற்ற ஆறுபேரை எதிர்த்து ஒரு பொட்டல் வெளியில் அவரவர் படைகளின் துணையுடன் சண்டையிட்டனர்.வீரர்கள் நிறையபேர் மரண மடைந்தனர்.உடனே அரசர் குரு தலையிட்டு அனைவருக்கும் தமது நாட்டை சமமாக பிரித்துக் கொடுப்பதாக வாக்களித்து சண்டையை நிறுத்திசமாதானத்தை ஏற்படுத்தினார்.ஏழுசகோதரர்களுக்கும் சந்தோஷம் ஏற்பட்டது.ஆனால் எந்த எதிர்பார்ப்புமின்றி பல்லாயிரம் பேர் இறந்து போனார்கள். அதைக்கண்டு வருந்திய குரு தவம் புரிந்து அங்கு எந்த எதிர் பார்ப்புமின்றி தலைவனாக உள்ளவர்களின் கட்டளையை ஏற்று போரில் வீரமரணம் அடைபவர்களுக்கு அவரவர் வாரிசுகள் நீர்கடன் செலுத்த வேண்டியதில்லை பண்பாட்டிற்காக தர்மத்திற்காக போரிடுபவர்களுக்கு மற்ற வீரர்கள் இறுதிக்கடன் செலுத்தினால்போதுமானது இறந்தவர் வீரசொர்க்கம் அடையலாம் என்று இறைவனிடம் வரம் பெற்றார்.அதுமுதல் அந்த இடம் குருஷேத்திரம் என பெயர் வழங்கலானது.பிற்காலத்தில் அதே இடத்தில் குரு வம்ச வாரிசுகளான கௌரவர்களும் பாண்டவர்களும் பாரதப்போர் நடத்தினர்.நவீன காலத்தில் அந்த இடத்தில் கடந்த ஐநூறு ஆண்டுகளுக்குள் மூன்று போர்கள் ஏற்பட்டு பாரத பண்பாட்டிற்கு சீரழிவு ஏற்பட்டது.அந்த இடம் பானிப்பட்டு போர்கள் என்ற பெயர் பெற்றன.முதலாம் பானிப்பட்டு போர் நடந்த ஆண்டு கி.பி.1526.சுபம்.
ஜோதிமைந்தன்.
23-12-2023
காலை 5.55 மணி
22-12-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள் யாம் பழந்தமிழர் பண்பாட்டை ஒட்டியே வள்ளல் பெருமான் சன்மார்க்கத்தை வடிவமைத்தார் கருத்தை வலியுறுத்தி வருகிறோம்.தமிழர் பண்பாட்டில் சைவம் வைணவம் போன்ற சமயங்கள் தோன்றுவதற்கு அடிப்படை ஆதாரமாக இருந்த தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல் முக்கிய இயல்பாக கொள்ளப்பட்டது.அதையே சமஸ்கிருதத்தில் அதிதி தேவோ பவ என்று கூறி விருந்தினர் யாராக இருப்பினும் அவரை உபசரிப்பது ஒரு கடவுள் வழிபாடு என்றனர்.அதனாலேயே தமிழர்கள் வீடு கட்டும்போது தம் இல்லத்தை நாடி வருபவர் யாராயினும் வந்தவுடன்முதலில் அமர்வதற்கு திண்ணை என்ற மேடையை அமைத்தனர்.இந்த பண்பாட்டின் தாக்கமே மகாபாரத போர் நடக்கும்போது தமிழ் மன்னர்களான பாண்டியர்கள் யுத்தத்தின்போது போரில் நேரிடையாக கலந்து கொள்ளாமல் தமது உறவினர்களான பாண்டவர்களின் படைக்கு உணவு வழங்கியும் சேரமன்னர் கௌரவர் படைகளுக்கு உணவு வழங்கியும் தமது கடமையை தமிழர் இயல்பாக வெளிப்படுத்தினார்கள்வள்ளல் பெருமான் அவர்களும் எல்லா வாழ்க்கையின் இடர்பாடுகளுக்கும் அன்னதானமே தீர்வு என்பதை வலியுறுத்தி தாமே அதை நடத்தியும் காட்டினார்.சுபம்.
ஜோதிமைந்தன்.
22-12-2023
காலை 5.55 மணி
21-12-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள் நாம் ஏற்கனவே பலமுறை காலத்தின் சுழற்சியின் பெருமையை அதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியுள்ளோம். சமகால நிகழ்வில் இன்றைக்கு ஏற்பட்ட திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரைகளில் நடந்த இயற்கை பேரழிவு 1923 டிசம்பர் 20ம்தேதியும் நடந்துள்ளது.ஆச்சரியமான காலசுழற்சியின் வலிமையாக கொள்ளலாம்.அதுபோல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கிபி 1014இல் பட்டதிற்கு வந்த இராஜந்திர சோழன் பண்பாட்டின் கலாச்சார எழுச்சியாக உலகில் பெரும்பாலான நாடுகளை வென்று தமிழர் பண்பாட்டை நிலை நிறுத்தினான்.தற்போது 2014இல் பாரத நாட்டின் பிரதமராக மக்களால் தேர்வு செய்யப்பட்ட நரேந்திரரும் உலக மக்களின் மனதையும் அரசியல் ஆதிக்கத்தையும் வென்று முதன்மை ஆட்சியாளராக காலம் உருவாக்கி விட்டது.இரண்டு பேருமே சரித்திரத்தை உண்மையாக ஆய்வு செய்தால் பிறரால் ஒப்பாய்வு செய்ய இயலாத மனிதர்களாக திகழ்கிறார்கள் என்பது காலநியதி.சுபம்.
ஜோதிமைந்தன்.
20-12-2023
காலை 5.55 மணி
20-12-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள் உலகில் தோன்றிய மொழிகளில் தற்போதுள்ள மொழிகளில் மிகப் பழமையானது மற்றும் ஒழுக்கங்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடியது தமிழும் அதன் மாற்று மொழியான சமஸ்கிருதமும் என்றால் அது மிகையல்ல இரண்டும் தர்ம நியதிகளை அடிப்படையாகக் கொண்டது.சமஸ்கிருதம் பொறுத்தவரை தனக்கான தனி எழுத்து வடிவம் இல்லை என்றாலும் பாரத நாட்டில் பரவலாக அவரவர் தாய் மொழியுடன் பலகலைகளின் வெளிப்பாட்டு மொழியாக சமஸ்கிருதம் பயன்பட்டதால் அதில் காலக்கிரமத்தில் அவ்வப்போது உருவான நூல்கள் செயல்பாட்டுவழக்கில் உள்ளன தமிழில் எல்லா வளமும் இருந்தாலும் பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட தற்போது சுனாமி என்று பெயர் சூட்டப்பட்ட இயற்கை பேரிடர்களால் நிலப்பகுதி நீரில் மூழ்கியது பல தமிழ் மொழியாலான கலைகளும் மங்கிப் போயின. தமிழர்களைப் பொறுத்தவரை தமிழ் சமஸ்கிருதம் இரண்டையும் கற்றவர்களையே புலவர்களாக அங்கீகரித்தனர். வெள்ளையர்களால் திட்டமிட்டு தமிழர்களிடம் இருந்த சமஸ்கிருத பற்றை நீக்கி அந்த இடத்தில் ஆங்கிலத்தை முன்னிறுத்தினர். சமஸ்கிருத மொழியறிவு இந்தியர்களிடம் மங்கிப் போனது.தமிழ்,சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை புரிந்து கொண்டு இதிலுள்ள அறிவு நூல்களை புரிந்து கொண்டு அதை தமது நாடுகளுக்கு ஏற்றவாறு மொழிமாற்றம் செய்வனெல்லாம் ஆங்கிலேயர்களின் நாட்டில் கண்டுபிடிப்பாளர்களாக கௌரவம் வழங்கப்பட்டார்கள். இன்று தமிழின் நிலை மிகவும் கடினமாக உள்ளது வள்ளல் பெருமான் அவர்களின் வழிபாட்டு முறையும்,கல்விமுறையும் பண்டைய தமிழர்களின் கற்பித்தலை அடிப்படையாகக் கொண்டது என்பதை புரிய வைப்பது மிகவும் சிரமமாக உள்ளது தமிழை முழுமையாக கற்றவர்கள் சமஸ்கிருத மொழியை புறந்தள்ள மாட்டார்கள்.சமஸ்கிருதத்தை முழுமையாக கற்றவர்கள் தமிழ் மொழியை அவமதிக்க மாட்டார்கள்.இரண்டின் அருமை தெரிந்ததால்தான் வள்ளல் பெருமான் தமது மும்மொழி பாடசாலையில் தமிழ்,சமஸ்கிருதம்,ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளை கற்பித்தார். ஆனால் இன்று இந்திய திருநாட்டில் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட பதினெட்டு பல்கலை கழகங்கள் உள்ளன.தமிழுக்கு ஒரே ஒரு பல்கலைக்கழகம் மட்டுமே உள்ளது அதை கருதி நிறைய தமிழுக்கான பல்கலை கழகங்களை திறந்து அதில் சுவடிகளாகவும் கல்வெட்டுகளாகவும் உள்ள தமிழ் பொக்கிஷங்களை அச்சில் ஏற்றும் மகான்களை சரித்திரம் போற்றும். சுபம்
ஜோதிமைந்தன்.
20-12-2023
காலை 5.55 மணி
19-12-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள்.காலம் என்பது மிகவும் நேர்த்தியாக இறைவனால் வடிவமைக்கப் பட்டது.கடந்த வாரம் யாம் கூறிய கடற்கரை நகரங்களாக காஞ்சிபுரம் வடலூர் சிதம்பரம் நாகர்கோவில் ஆகிய நகரங்கள் மாறும் என்ற கருத்தை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எம்மிடம் வள்ளல் பெருமான் கூறியிருந்தார் அது பூரண சத்யயுகம் ஆரம்பிக்க வேண்டிய தருணத்தில் இவை நடக்கும் எனக்கூறியிருந்தார்.அதை கடந்த வாரம் மீண்டும் வெளிப்படுத்த கூறி வெளிப்படுத்தினார்.இந்த கணப்பொழுது பரியந்தம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் உணர்த்தி அதை வெளிப்படுத்தினார்.இந்த வாக்கின் தாக்கத்தை கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பொருட்படுத்தவில்லையானால் கவலை வேண்டாம் உண்மையான ஆன்மீகவாதிகள். இந்த வாக்கை அனுபவபூர்வமாக உணரும்பொருட்டான அடையாளமாக இயற்கை சீற்றம் தமது பூர்வாங்க பணியை இந்த வாரம் செய்து வருகிறது.மனிதநிலையில் சுமாராக தற்போதுள்ள கடற்கறையிலிருந்து முப்பது மைல் நிலத்தின் உள்நோக்கிவந்து கடற்கரை அமைய வாய்ப்புள்ளது அது சமயம் சில புனித இடங்கள் தீவாக மாறலாம் அல்லது பூம்புகார் போல் காணாமல் போகலாம்.அது அங்குள்ள மக்களின் அன்றைய தருமநெறி முறைப்படியான வாழ்க்கையை பொருத்தது. ஸ்ரீலங்கா அழிவு பட்டியலில் இடம் பெற்றதின் காரணம் அங்கு அகால மரண மடைந்த மூன்றுலட்சம் மனித ஆன்மாக்களின் சாபம்.
ஜோதிமைந்தன்.
19-12-2023
காலை 5.55 மணி
18-12-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள் பாரத பண்பாட்டில் குறிப்பாக தமிழகத்தில் சௌரம் சமயமானது சைவம்,வைணவம்,சாக்தம் போன்ற எல்லா சமயங்களுக்கும் கிரியா ஊக்கியாக செயல்படுகிறது.குறிப்பாக சனி,குரு,இராகுகேது பெயர்ச்சிகளின் போது நவகிரக பரிகாரதலங்களாக விளங்கிவரும் சரியை திருக்கோயில்களில் கூட்டம் நிர்வகிக்க சிரமமாகும் அளவிற்கு அன்பர்கள் கூடுவார்கள்.இந்த பக்தர்களை பரவலாக்கும் தன்மையில் பொருளாதார பரவலாக்கத்தையும் மேற்கொண்டு அன்பர்களின் பக்தியையும் பரவலாக்கும் வகையில் நவகிரக வழிபாட்டிற்கு பரிகாரம் சொல்லும் போது ஜோதிடகலை விற்பன்னர்கள் பெரும்பாலும் குறிப்பாகசனிபெயர்ச்சி என்று வந்துவிட்டால் பரிகார தலமாக திருநள்ளாறு தலத்தை மட்டுமே குறிப்பிடுகிறார்கள்.இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்திநிலையை அன்பர்கள் இழக்கிறார்கள்.எனவே கருணைகூர்ந்து ஜோதிடவிற்பன்னர்கள் தம்மை தனிப்பட்ட முறையில் நாடிவரும் பக்தர்களுக்கு பரிகாரம் சொல்லும்போதாவது சனீஸ்வரருக்கு பரிகாரம் சொன்னால் சனீஸ்வர பரிகார ஸ்தலங்களான குச்சனூர்,திருகொள்ளிக்காடு,ஸ்ரீவைகுண்டம்,அரிகேசநல்லூர்,ஈரோடு கபாலீஸ்வரர் திருக்கோயில்,ஆம்பூர் ஆஞ்சநேயர்கோயில்,பெருங்குளம் மாயகூத்தன் கோயில் ஆகியகோயில்களை பரிந்துரைக்கலாம் இவையனைத்தும் தமிழகத்தில் உள்ளன.போக்குவரத்து பிரச்னைகள் குறைவு.திருநள்ளாறு தமிழ்நாட்டில் இருந்தாலும் வேறு மாநிலம் என்பதால் நிறைய தர்மசங்கடங்கள் மனித நிலையில் ஏற்படுகின்றன.அடுத்து நாளை மறுதினம் சனிப் பெயர்ச்சி வருகிறது எனவே இந்த கருத்து சரியை வழிபாட்டில் நாட்டமுள்ள அன்பர்களுக்காக வெளிப்படுத்தப்பட்டது.சுபம்.
ஜோதிமைந்தன்.
17-12-2023
காலை 5.55 மணி
17-12-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள். காலம் என்பது ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கை பயணத்திலும் மிக மிக முக்கியமானது.அதைவிட காலத்தின் சுழற்சியில் அவரவர் நிலை என்ன என்று உணர்வது அத்தியாவசியமானது.ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையும் மாயை எனும் தூக்கத்தில் ஆன்மாவின் பயணம் நிர்ணயிக்கப் படுகிறது அந்த ஆன்மாவின் பயணம் சூக்கும தேகத்தில்தான் வாழ்வின் பலனை அடைய முடிகிறது.கனவில் கண்ட பணம் கனவில் மட்டுமே பயன் படுத்த இயலும் என்பதை போன்று இந்த இப்பிறவியில் வாழ்க்கை வசதிகள் உற்றார் உறவினர்கள் ஆகிய அனைத்து பயன்பாடும் இந்த பிறவியில் மட்டுமே அனுபவிக்க இயலும் இந்த பிறவியில் நியாயமாக உன்னுடைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொதுநன்மை கருதியதாக இருந்தால் ஆன்ம வேகமும் இருந்தால் இப்பிறவியிலேயே கிடைக்க வாய்ப்புண்டு ஆன்ம வேகம் இல்லை என்றாலும் அடுத்த பிறவியிலாவது நல்லெண்ணத்தின் பதிவு ஈடேறும்.ஒருமனிதன் தர்ம நெறிமுறைப்படி உழைத்தோ அல்லது பணம் படைத்தவர்கள் குடும்பத்தில் பிறவி எடுத்தோ ஆன்மாவின் எதிர்பார்ப்பு ஈடேறும் அவன் எப்படி எப்படி வாழ்ந்தால் ஆன்மா உயர்நிலை அடையலாம் என்பதை முன்கூட்டியே தெரிந்து விதியை மதியால் வெல்லும் வாய்ப்பை மனிதனுக்கு வழங்குவதே ஜோதிடக் கலை. அந்த கலையை உணர்ந்தவன் ஆரவாரத்தன்மை உடையவனாக இருக்க மாட்டான். இன்று மார்கழிமாதம் காலசுழற்சியின் நியதிப்படி இது இந்த ஆண்டின் பிரம்ம முகூர்த்த காலம்.இந்த மாதத்தை முழுமையாக இறை சிந்தனைக்காக ஒதுக்க வேண்டிய மாதம். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என இறைவன் கூறுவதாக பகவத் கீதை உரைக்கின்றது. இந்த சூழ்நிலையை புரிந்து கொண்டு இந்த மாதத்திலாவது வள்ளல் பெருமான் கூறும் நற்குணங்கள், நற்சிந்தனைகள், நற்செயல்பாடுகள் அது சம்பந்தமான சத்விசாரங்கள்,பரோபகாரங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டால் இம்மை மறுமை இரண்டிற்கும் பயனுள்ளதாக இருக்கும்.வள்ளல் பெருமான் வாழ்க்கை முழுதும் இந்த இயல்புகளை வலியுறுத்திதான் வாழ்ந்து காட்டினார்.சுபம்.
ஜோதிமைந்தன்.
17-12-2023
காலை 5.55 மணி
16-12-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள் ஒரு ஜீவராசிக்கு பிறப்பு என்று இருந்தால் இறப்பு என்ற ஒன்றையும் இறைவன் இயற்கையாகவே உருவாக்கி வைத்துள்ளான்.இதில் மனிதன் மட்டும் இயற்கை உண்மை நியதிக்கு புறம்பாக தனக்கு விதிக்கப்பட்ட படாத உணவுகளையும் உட்கொண்டு இறப்பையும் தவிர்க்க நினைக்கிறான்.அதற்கு வைத்தியத்தை நாடுகிறான். மனித சமுதாயத்தில் இயற்கை உண்மை இறைவனின் துணையோடு இறப்பை தவிர்த்து மரணமிலா பெரு வாழ்வு என்ற தத்துவ உண்மைக்கு மெய்ஞானத்தின் மூலம் உதாரணமானவர் வள்ளல் பெருமான் அவர்கள்.இது விஞ்ஞானத்தின் மூலமும் சாத்தியமாகலாம். அதற்கு கலியுகம் முழுமையாக விலகி பூரண சத்யயுகம் உருவாகி இருக்க வேண்டும். அதற்கு இன்னும் குறைந்த பட்சம் எழுபத்து ஏழு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் அதுவரைக்கும் இந்த யுகசந்தியில் வாழும் மக்கள் மரணமிலா பெறு வாழ்வை வாழ மெய்ஞானத்தின் மூலம் முயற்சிக்கலாம்.மெய்ஞானத்திற்கு இரண்டு துறைகள் முக்கிய மானவை விண்ஞானம் எனும் வானசாஸ்திரத்துடன் இணைந்த விதியை அறியும் ஜோதிடக்கலை உணவுடன் இணைந்த வைத்தியக்கலை. இந்த கலையில் முதலில் நம்பிக்கை வரவேண்டும்.இந்தகலைகளில் முழுதும் அறியாதவர்கள் இருக்கலாம் ஆனால் இந்தகலைகள் பொய்யானவைகள் அல்ல.மெய்ஞானவழியில் மரணமிலாபெருவாழ்வில் முதற்படியாக அறிய வேண்டிய இந்த கலைகளில் உண்மையானநிபுணத்துவம் பெற்று பிறகு ஸ்தூல உடலை பல படுத்த வேண்டும்.வைத்தியகலையில் தேவவைத்தியம், மனித வைத்தியம்,அசுர வைத்தியம் என மூன்று வகை உள்ளது.இதில் அசுர வைத்தியம் ஸ்தூல உடலை பக்குவ படுத்த பயன் படாது.மனித வைத்தியமும், அதை தொடர்ந்த தேவ வைத்தியமுமே ஸ்தூல உடலை ஒளியுடலாக மாற்ற பயன்படும்.சுபம்.
ஜோதிமைந்தன்.
16-12-2023
காலை 5.55 மணி
15-12-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள் ஒரு ஜீவராசிக்கு பிறப்பு என்று இருந்தால் இறப்பு என்ற ஒன்றையும் இறைவன் இயற்கையாகவே உருவாக்கி வைத்துள்ளான்.இதில் மனிதன் மட்டும் இயற்கை உண்மை நியதிக்கு புறம்பாக தனக்கு விதிக்கப்பட்ட படாத உணவுகளையும் உட்கொண்டு இறப்பையும் தவிர்க்க நினைக்கிறான்.அதற்கு வைத்தியத்தை நாடுகிறான். மனித சமுதாயத்தில் இயற்கை உண்மை இறைவனின் துணையோடு இறப்பை தவிர்த்து மரணமிலா பெரு வாழ்வு என்ற தத்துவ உண்மைக்கு மெய்ஞானத்தின் மூலம் உதாரணமானவர் வள்ளல் பெருமான் அவர்கள்.இது விஞ்ஞானத்தின் மூலமும் சாத்தியமாகலாம். அதற்கு கலியுகம் முழுமையாக விலகி பூரண சத்யயுகம் உருவாகி இருக்க வேண்டும். அதற்கு இன்னும் குறைந்த பட்சம் எழுபத்து ஏழு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் அதுவரைக்கும் இந்த யுகசந்தியில் வாழும் மக்கள் மரணமிலா பெறு வாழ்வை வாழ மெய்ஞானத்தின் மூலம் முயற்சிக்கலாம்.மெய்ஞானத்திற்கு இரண்டு துறைகள் முக்கிய மானவை விண்ஞானம் எனும் வானசாஸ்திரத்துடன் இணைந்த விதியை அறியும் ஜோதிடக்கலை உணவுடன் இணைந்த வைத்தியக்கலை. இந்த கலையில் முதலில் நம்பிக்கை வரவேண்டும்.இந்தகலைகளில் முழுதும் அறியாதவர்கள் இருக்கலாம் ஆனால் இந்தகலைகள் பொய்யானவைகள் அல்ல.மெய்ஞானவழியில் மரணமிலாபெருவாழ்வில் முதற்படியாக அறிய வேண்டிய இந்த கலைகளில் உண்மையானநிபுணத்துவம் பெற்று பிறகு ஸ்தூல உடலை பல படுத்த வேண்டும்.வைத்தியகலையில் தேவவைத்தியம், மனித வைத்தியம்,அசுர வைத்தியம் என மூன்று வகை உள்ளது.இதில் அசுர வைத்தியம் ஸ்தூல உடலை பக்குவ படுத்த பயன் படாது.மனித வைத்தியமும், அதை தொடர்ந்த தேவ வைத்தியமுமே ஸ்தூல உடலை ஒளியுடலாக மாற்ற பயன்படும்.சுபம்.
ஜோதிமைந்தன்.
15-12-2023
காலை 5.55 மணி
14-12-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வந்தனம்.இந்த பாரத புண்ய பூமியில் வரலாற்று சுவடுகளில் இரண்டு தத்துவங்களை பல நூற்றுக்கணக்கான மகான்கள் தம் வாழ்நாளை அர்ப்பணித்து நிலை நிறுத்தினர் இருவேறு துருவங்களான அத்வைதம், துவைதம் எனும் பரமாத்மாவும் ஜுவாத்மாவும் ஒன்றே என்ற ஞான மார்க்கத்தை போதித்த ஆதி சங்கரரும், பரமாத்மாவும் அவரை வணங்கவேண்டிய கடமையிலுள்ள ஜீவாத்மாவும் இந்த பிரபஞ்சத்தின் நியதி என கூறி ஜீவாத்மாக்கள் அனைவரும் சமம் என்ற நியதியில் பக்தி மார்க்கத்தை வாழ்க்கை இயல்பை கொண்ட இராமானுஜரும் வரலாற்றில் முக்கியமான மாற்றத்தை வழங்கிய மகான்கள்.வள்ளல் பெருமான் அவர்கள் இந்த இரண்டு கருத்துக்களையும் தராசின் சமநிலையில் வைத்து இருவேறு கருத்துக் களுக்கும் தாமே சாட்சியமாக இருந்து வாழ்ந்து காட்டியவர்.கால சுழற்சியில் பக்தி மார்க்கத்தின் உச்சநிலை ஞானமார்க்கமாகவும், ஞானமார்க்கத்தின் உச்சநிலை பக்தி மார்க்கமாகவும் மாறும்.இந்த நிலையை அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும். இந்த நிலையை உணர ஜீவகாருண்யம்,சத்விசாரம்,பரோபகாரம் இந்த மன எழுச்சியே வழிகாட்டிகள்.சுபம்.
ஜோதிமைந்தன்.
14-12-2023
காலை 5.55 மணி
13-12-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள்.யுகசந்திகாலமான தற்போதைய நிகழ் காலத்தில் சத்யயுக பணிகள் தெய்வநிலையில் முறையாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது கலியுக முடிவின் பணியும் தெய்வநிலையில் நடந்துகொண்டுதான் உள்ளது. இதை ஞானிகள் அறிவார்கள்.சன்மார்க்க உலகம் புரிந்து கொண்டுதான் உள்ளது.ஆனால் இந்த புரிதல் போதுமானதல்ல. இன்னும் நிறைய சத்விசாரம் செய்ய வேண்டும்.வள்ளல் பெருமான் மனிதசமுதாயத்திற்கு நிறைய கூறி உள்ளார்.தனிமனிதனாக ஆன்மாவிற்கு பசித்திரு, தனித்திரு, விழித்திரு என தம்மை குருவாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு கூறியதுடன் வாழ்ந்தும் காட்டியுள்ளார்.அவரின் திருமுறை பாடல்களே அதற்கு ஆதாரமாக கொள்ளலாம்.தமது வாழ்க்கையின் வெற்றியின் உயர்வை தமது பேருபதேசத்திலும் சத்திய விண்ணப்பங்களிலும் வெளிப்படுத்துகிறார். சுயபரிசோதனைக்கு மனுமுறை கண்ட வாசகத்தை தொகுத்து வழங்கியுள்ளார்
அதன்மூலம் அவ்வப்போது ஆன்ம விசாரம் செய்து கொள்ளலாம்.இந்த செயல் முறைகளை வாழ்க்கையில் கடைபிடித்து ஞானசித்தர் காலமாகிய சத்ய யுகத்தில் பிரவேசிக்கவும். சுபம்.
ஜோதிமைந்தன்.
13-12-2023
காலை 5.55 மணி
12-12-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள் இது யுகசந்திகாலம் எந்த குழந்தையும் அதர்மரீதியில் சொத்து சேர்த்து வைக்க வேண்டிய நிர்பந்தத்தை பெற்றோருக்கு தருவவதில்லை சிறுவயது முதல் ஒழுக்கத்தையும் கடமையுணர்வையும் தேசபக்தியையும் நம்மை போல்தான் பிற உயிர்களும் எனும் எண்ணத்தையும் பனிரெண்டு வயதுக்குள் சொல்லாலும் செயலாலும் தமது வாரிசுகளுக்கு வழங்கும் பெற்றோர்களுக்கு முதியோர் இல்லம் தேவைப்படுவதில்லை.தற்போதைய கல்விமுறையில் நீதிபோதனை என்ற கல்விதிட்டமும் இல்லை.எனவே பெற்றோர்கள்கள் தான் வாரிசுகளின் மனதில் வளமையான வாழ்க்கையை வகுத்தளிக்க வேண்டும்.தர்மநெறிமுறையை கருத்தில் கொள்ளாமல் உருவாக்கும் பொருளாதாரம் அவரவர் வாரிசுகளை சத்யயுகத்தில் பொருளாதார பாதாள படுகுழியில் தள்ளிவிடும்.மறுமையிலும் கடைதேற முடியாது திருமூலரும் திருவள்ளுவரும் தாயுமானவரும் மாணிக்கவாசகரும் வள்ளல் பெருமானும் எழுதிவைத்த நியதிகளை தாம் எந்த அளவு கடைபிடிக்கிறோமோ இல்லையோ தமது குழந்தைகளுக்கு போதித்து வையுங்கள் அது அவர்களுக்கு தேவையான நேர்மறை மனோபலத்தை வழங்கும்.இராமாயணம்,மகாபாரதம்,சிலப்பதிகாரம் ஆகிய நூல்கள் வாழ்வியல் ஆளுமைத்தன்மையை வழங்கும்.சுபம்.
ஜோதிமைந்தன்.
12-12-2023
காலை 5.55 மணி
11-12-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள் வரலாறு என்பது கடந்தகால நமது முன்னோர்களின் அனுபவத்தில் எந்த செயல்களெல்லாம் சமுதாய நலனைத் தரும் எந்த செயல்களெல்லாம் மனித சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை சுட்டிக்காட்டும் குறிப்புகள் அன்றி வேறில்லை.வரலாற்று நிகழ்வுகளை பாடல்கள் மூலம் பதிந்து வைத்து வாரிசுகளுக்கு வழிகாட்டினார்கள் தமிழ் மொழியில் உலக மொழிகளை எல்லாம்விட அதிகமான புலவர்கள் வாழ்ந்தார்கள் அதில் போட்டி மனப்பாண்மை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் புலமையைக் கொண்டு இழித்தும் பழித்தும் பேசிதிரிந்தார்கள் அதன் விளைவு இன்று தமிழ் உலகில் சமுதாய நல்லெண்ணத்தில் வாழும் புலவர்களே தோன்றாமல் போய்விட்டார்கள்.அதன்விளைவு ஒழுக்கம் பாழ்பட வழிவகுத்தது.அது கலியுக முடிவாக அமைந்தது.இறைவனாக பட்டவர் ஒழுக்கமே சமுதாயத்தின் ஆதாரம் என்பதை அடிப்படையாக வைத்து வாழ்ந்துகாட்ட வள்ளல் பெருமானை யுகபுருஷராக வருவித்தார். அடுத்த இன்றைய சத்யயுக ஆதாரக் கொள்கையே ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.அதில் ஜீவ காருண்ய ஒழுக்கத்திற்கு முதலிடம்.மற்ற ஒழுக்கங்களும் முறையாக கடைபிடித்தால் இறைவன் குடிசையாக இருந்தாலும் உம்மை நாடி வருவான். நாம் ஏற்கனவே படிநிலை தெய்வங்களை வணங்கி கொண்டிருந்தால் அவரவர் பக்குவத்திற்கேற்ப ஆன்ம வேகமும் ஆன்ம பெருக்கமும் ஏற்பட்டு கனவிலோ அல்லது அவரவர் ஞானக் கண்ணிலோ தரிசனம் காணலாம்.சுபம்.
ஜோதிமைந்தன்.
11-12-2023
காலை 5.55 மணி
10-12-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள் ஆழிப் பேரலைக்கு தம்மை தயார்படுத்திக் கொள்ளுங்கள் என்றுகூறியிருந்தோம் முதல்சங்க, இடைசங்க கால மன்னர்கள் மக்களை வடக்கு நோக்கி நகர்த்தி மனித சமுதாயத்தை தயார் படுத்தினார்கள்.இன்றைய காலகட்டத்தில் அருளியல் வெளிப்பாடு காஞ்சிபரம் வடலூர் நாகர்கோவில் ஆகிய நகரங்கள் ஆழிப்பேரலையால் கடற்கரை நகரங்களாக மாறும். அந்த நிலை அதர்மங்கள் அதிகமானால் இந்த கணப்பொழுதுபரியந்தம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.ஆனால் சத்யயுகம் முழுமையாக ஆரம்பிக்கும் முன்பாக நடக்கும்.சுபம்.
ஜோதிமைந்தன்.
10-12-2023
காலை 5.55 மணி
09-12-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள் ஆழிப் பேரலைக்கு தம்மை தயார்படுத்திக் கொள்ளுங்கள் என்றுகூறியிருந்தோம் முதல்சங்க, இடைசங்க கால மன்னர்கள் மக்களை வடக்கு நோக்கி நகர்த்தி மனித சமுதாயத்தை தயார் படுத்தினார்கள்.இன்றைய காலகட்டத்தில் அருளியல் வெளிப்பாடு காஞ்சிபரம் வடலூர் நாகர்கோவில் ஆகிய நகரங்கள் ஆழிப்பேரலையால் கடற்கரை நகரங்களாக மாறும். அந்த நிலை அதர்மங்கள் அதிகமானால் இந்த கணப்பொழுதுபரியந்தம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.ஆனால் சத்யயுகம் முழுமையாக ஆரம்பிக்கும் முன்பாக நடக்கும்.சுபம்.
ஜோதிமைந்தன்.
09-12-2023
காலை 5.55 மணி
08-12-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள்.தமிழகம் பத்துநாட்களாக தலைநகர் சென்னையில் ஏற்பட்ட மழையின் தாக்கத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது.மனித சமுதாயம் வாழஇன்னல்கள் குறைவான பகுதி தமிழகம் தான் அந்த நன்றி உணர்வால்தான் பண்டைய தமிழ்மன்னர்கள் தமது வாழ்நாளில் ஒருகோயில் அமைப்பது அல்லது ஏற்கனவே அமைக்கப்பட்ட கோயிலை பராமரிப்பது என்ற லட்சியத்தை. கொண்டிருந்தார்கள். இன்றைய காலகட்டத்திலும் நல்லவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதால்தான் இந்தமழை சென்னையை பாதிக்காமல் வேறு பகுதியில் கடந்து சென்றது.மனித நிலையில் இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ள மனித நிலையில் சென்னைவாசிகள் இன்னும் தயாராகவில்லை என்பது அவர்கள் பட்ட துன்பங்களில் தெரிகிறது.பொதுவாக தமிழக மக்கள் ஆழிப்பேரலை எனும் சுனாமிக்கு தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.ஏனெனில் இலங்கையை ஆழிப்பேரலை தாக்கும் தன்மை உள்ளது அந்த தன்மை தமிழகத்தை விட்டு வைக்காது.தமிழர்களின் முன்னோர்கள் ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்டுதான் இந்த நிலையில் வாழ்ந்து கொண்டுள்ளோம்.இனிவரப்போகும் காலங்களில் வாழக்கூடிய நமது வாரிசுகளுக்கு ஆன்மீக நம்பிக்கையை உருவாக்குவோம். அதில் மூட நம்பிக்கையை கலக்காமல் பார்த்துக் கொள்ளும்.அதற்கு உகந்த பாதை வள்ளலார் வகுத்தளித்த சன்மார்க்க பாதை என்பதை நினைவில் கொள்வோம். காலங்கள் மாறும்போது வழிபாட்டு முறைகளும் மாறும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.மாற்று மொழியில் உள்ளது என்பதற்காக வழிபாடே வேண்டாம் எனும் சிந்தனை மனிதர்களை கொடுந்துன்பத்தில் ஆழ்த்திவிடும். தற்போது பெரும்பாலான வழிபாடு கோயில் குடமுழுக்கு உட்பட சமஸ்கிருத மொழியில் உள்ளது அதை தமிழில் தொகுக்க எந்த முயற்சியும் செய்யாமல் தமிழில் செய்யவும் எனக்கூறினால் எப்படி இயலும்.ஆன்மீக பயிற்சி என்பது குறைந்த பட்சம் பனிரெண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றிருந்தால்தான் சரியை வழிபாட்டு கோயில்களை தெய்வீக சடங்குகளை செயல் படுத்த முடியும் ஒரு ஆண்டு பயிற்சியில் எதையும் செய்ய இயலாது.இது நூறுமணிநேரம் பயிற்சி விமானம் ஓட்டிய விமானியை ராக்கெட்டில் அமர்த்தி சந்திரனுக்கு சென்று கல் எடுத்து வரவேண்டும்.என்று கட்டளை இடுவது போன்றது.சமஸ்கிருதம் தமிழுக்கு மாற்று மொழி தான் வேற்று மொழி அல்ல என்று கருதியதால்தான் வள்ளல் பெருமான் மும்மொழி பாடசாலை அமைத்தார்.சுபம்.
ஜோதிமைந்தன்.
08-12-2023
காலை 5.55 மணி
05-12-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள்.அகத்தே கருத்து புறத்தே வெளுத்த கலியுகமனிதர்களை சகத்தே திருத்தி சத்ய யுகத்தில் பிரவேசிக்க செய்யும் பணியை தமது கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இலக்கணம் வகுத்து இல்லற சன்மார்க்கம் நடத்தி தமது பிரதிநிதியாக மனிதநிலையில்செயல்பட எமக்கு கட்டளையிட்டார் அதனடிப்படையில் செயல்பட்டு வருகிறோம்.தற்காலங்களில் அவருடைய கருத்துக்களை திரிபுவாதம் செய்யும் சில மனிதர்களுடன் சன்மார்க்க உலகில் புகழ் பெற்ற ஒருசில அன்பர்கள் ஒத்துபோய்விடுவதும் அல்லது திரிபுவாதத்தை எதிர்கொள்ள முடியாமல் அடங்கிபோவதும் மனவாட்டம் அளிப்பதாக உள்ளது.ஆனால் அந்த நிலைக்கு வள்ளல் பெருமான் நீண்ட நாளைக்கு விட்டு வைக்க மாட்டார் எனவே சன்மார்க்க அன்பர்கள் சற்றேனும் மனகிலேசம் அடைய வேண்டாம்.உரிய நேரத்தில் முறையான சன்மார்க்கம் உலக அளவில் எழுச்சி பெறும்.
ஜோதிமைந்தன்.
05-12-2023
காலை 5.55 மணி
04-12-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள்.நாகரீகத்தின் ஆரம்பத்தில் தற்போது காசு,பணம் என்ற தன்மையை பூர்த்தி செய்ய பசுக்கள் பயன்பட்டது. எல்லாராலும் எது பயன்படுத்த கூடியதோ அதுவே பணம் என்பது.எல்லாமனிதர்களின் இல்லத்திலும் பசுவானது இருந்தது.பிறகு சிலாகாலங்களில் எல்லாபண்டங்களும் பணமாக பயன்பட்டு பண்டமாற்று முறையில் கொடுக்கல் வாங்கல் கள் நடந்தன இந்தவகையான செலாவணிதான் நீண்டகாலம் நடைமுறையில் இருந்ததுசமீபகாலம் வரை அதாவது எம்.ஜி.ஆர்.சிவாஜி ஆகிய நாயகர்கள் திரைத்துறையில் இருந்த காலத்தில் கூட கிராமப்புற திரைப்பட அரங்குகளில் மக்கள் அரிசி,பருப்பு போன்ற விளைபொருட்களை கொடுத்து டிக்கட் வாங்கினார்கள். பண்டமாற்றுமுறை நடைமுறையில் இருக்கும்போதே தங்கமும் வெள்ளியும் பணத்தின் அடையாளமாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.தறபோது காகிதப்பணம் நடைமுறையில் உள்ளது.இன்றைய காலகட்டத்தில் தங்கம் பண சுழற்சியை ஏற்படுத்துவது இல்லை.அதில் போடும் அதிகப்படியான முதலீடு பயனில்லை.மேலும் காகித பணத்தின் நிலவறையில் பதுக்கும் தன்மையும் அதைவிட மாயை.எந்த பயனுமில்லை.விரைவில் பணம் என்பது காகிதத்தால் என்பது வழக்கொழிந்து கணிணிபணமாக மாறி விடும் காலம் நெருங்கிவிடும் அதுசமயம் வருமானவரி என்ற வரி இருக்காது பணசுழற்சி வரி என்ற பெயராக மாறிவிடும்.இப்போது உள்ள ஐநூறு ரூபாய் நோட்டும் திரும்ப அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்படும். அந்த நிலை ஏற்படாமல் இருக்க பணத்தை கலியுக மனிதர்களின் மனப்பக்குவத்தில் கட்டுகட்டாக பதுக்காமல் நல்ல முறையில் சழற்சியில் வைப்பவர்கள் சத்யயுக நியதியில் பணம் பாதுகாக்கப்படும்.டிமானிட்டரிங்,ஐ.டி.ரெய்டு,இ.டி.ரெய்டு.போன்ற அரசாங்க நடவடிக்கைகள் அனைத்தும் யுகசந்தியில் சத்யயுகத்தின் தாக்கம்தான்.சத்யயுகத்தில் பிரவேசித்துவிட்ட மனிதர்கள் ஜனாதிபதி,பிரதமர் போன்ற முக்கியமான உயர்பதவிகளில் அமர்ந்து அலங்கரிப்பதால் நடப்பதை கலியுகவாசிகளுக்கு புரிந்து கொள்ள இயலவில்லை.எதிர்நடவடிக்கையாக எடுத்துவைக்கும் செயல்கள் அனைத்தும் அவர்களுக்கு அதாவது சத்யயுக வாசிகளுக்கு சாதகமாக முடிகின்றன.எனவே மக்கள் காலத்தின் கட்டாயத்தை புரிந்து கொண்டு விரைவில் சத்யயுகத்தில் பிரவேசித்து விடுங்கள் சுபம்.
ஜோதிமைந்தன்.
04-12-2023
காலை 5.55 மணி
03-12-2023
கருணைமிகு சன்மார்க்க அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள்.யுகசந்தியில் பெரும்பாலும் இயற்கை பேரழிவுதான் நடத்தப் பட்டுள்ளது என்பது வரலாறு.தற்போது வள்ளல் பெருமான் அவர்கள் யுகபுருஷராயிருந்து செய்யும் பிரபஞ்ச அருளரசாட்சியில் இயற்கை பேரிடரில் அதிகமான மனித தேக அழிவின்றி காப்பாற்றி வருகின்றார்.மக்களனைவரும் சத்யயுக நியதிக்கு மாறும் தன்மையில் காப்பாற்றப் படுவார்கள்.பணமும் தங்கமும் சத்யயுக செயல்பாட்டில் உதவிக்கு வராது ஆன்மநேயத்துடன் வாழ்க்கை இயல்பை கொள்ளும்தன்மைதான் ஆன்மலாபத்தை வழங்கும்.படிநிலை தெய்வங்கள் விதித்த விதி மிகக் கடுமையானவை. தமது விதியை உணர்ந்து கொண்டவர்களுக்கு அது புரியும்.ஒரளவிற்கு வானியல் கொண்டு முக்காலத்தை கணிக்கும் திறமை உள்ளவர்களுக்கு விதியின் வலிமை புரியும்.அந்த விதியை மாற்ற நினைப்பவர்களுக்கு சத்யயுக பிரவேசம் மட்டுமே சாத்திய படுத்தும்.யாம் சொல்வதை விளையாட்டாக எண்ணி கடந்து போகலாம். அருட்பருஞ்ஜோதி ஆண்டவரின் அருளரசாட்சியை விளையாட்டாக எண்ணுபவர்களின் வாழ்க்கையை விளையாட்டாகவும் வினையாக எண்ணுபவர்களுக்கு அவரவர் வினைகளுக்கும் ஆன்ம நேயத்தின் மீதுள்ள நம்பிக்கைக்கும் ஏற்றவகையிலான நன்மையாகவும் மாயையில் வடிவமைப்பார்.அனைவரும் சர்வ ஜாக்கிரதையாக இருந்து அவரவர் வாழ்க்கையை செப்பனிட்டு கொள்க.இயற்கை உண்மை இறைவனும் ஜீவகாருண்யமும் பரோபகாரமும்,நல்லொழுக்கமும்,நட்சத்திரங்களும்,இவைகளை பற்றிய சத்விசாரமும் மட்டுமே ஒவ்வொரு ஆன்ம நேயரையும் காப்பாற்றும் என அறிக. சுபம்.
ஜோதிமைந்தன்.
03-12-2023
காலை 5.55 மணி
02-12-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள். கடந்த சதுர் யுகத்தில் தான தவங்களால் அருட்பெருஞ்ஜோதியரிடம் வாழும்போதே தமது தியாகத்தாலும் தானத்தாலும் தவத்தாலும் அருள் சக்தியை பெற்று குலதெய்வ படிநிலையில் ஆரம்பித்து சத்திசத்தர் படிநிலைவரை அலங்கரித்த ஆன்மாக்களின் வடிவங்களை ஸ்தூல,சூக்கும தேகங்களை கற்களாலும் உலோகங்களாலும் உருவம் கொடுத்து கலியுக நியதியாக மக்கள் வணங்கி வந்தனர்.அவர்கள் அனைவரும் சூக்கும தேகத்தில் இருந்து அருளரசாட்சி செய்யும்போது அருள் சக்தி சேமிப்பை செலவழித்துகலியுக முடிவில் மனிதர்களாக நம்மிடையே வாழ்ந்து வருகின்றனர்.வள்ளல்பெருமான் அவர்கள் அந்த ஆன்மாக்களை தக்க முறையில் உணர்த்தி சத்யயுக நியதிப்படி இறைவன் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதியர் அவரை வணங்குங்கள் படிநிலை தெய்வங்களை வணங்கி அருள் சக்தி பெற வாழ்நாள் போதாது எனக் கூறி அருளினார். மேலும் சன்மார்க்கத்தில் உள்ளவர்கள் ஞானசித்தர் காலத்திற்கு புறம்பாக உருவ வழிபாட்டை வலியுறுத்தினால் இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு சன்மார்க்க அன்பரும் ஏதேனும் ஒரு கர்த்தா படிநிலையில் இருந்து மனிதராக பிறந்து வந்திருப்பார் என்பதால் மறைமுகமாக மற்றவர்களை பார்த்து என்னையே வணங்குங்கள் என்பதாகும்.இது அவர்களை பச்சைதிரையை கடக்க முடியாத தன்மையை உருவாக்கும். மேலும் தம்மை குருவாக எண்ணி நம்பி வந்தவர்களை நூறு சதவீத பலனளிக்கும் வழியை மறைத்து அதிகபட்சம் பத்து சதவீத பலனளிக்கும் வழியை காண்பித்து குருதன்மையை இழந்த நிலை ஏற்படும்.சுபம்.
ஜோதிமைந்தன்.
02-12-2023
காலை 5.55 மணி
01-12-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள்.ஒவ்வொரு மனிதனுக்கும் ஆழ்மனதில் இருக்க வேண்டிய சிந்தனை தம்மை இறைவன் படைத்தபோது ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு நமது கர்ம வினையையும் அடிப்படையாகக் கொண்டு படைத்துள்ளான். தாய்,தந்தை,மனைவி அல்லது கணவன் வாரிசுகள் நண்பர்கள் அனவரையும் கொண்ட சுற்று சூழலை ஏற்படுத்தி உன்னை தற்சுதந்திரமாக வாழ விடுகிறான். உன்னைப் பற்றி நீதான் முடிவெடுக்க வேண்டிய இயல்பை விட்டு விடுகிறான். நீ தர்ம நெறிமுறைப்படி வாழ்வதை யாரும் தடுக்க இயலாது.இன்றைய சூழலில் சமுதாய மாற்றங்கள் உருவாகக் காரணம். இளமையில் தர்மநெறிமுறைகளை அவரவர் வாரிசுகளுக்கு அறிமுக படுத்தாமல் மேனாட்டு வாழ்க்கை இயல்பை தமது இயல்பாக கொள்வதுதான். தமிழர் பண்பாட்டில் கல்வியின் மூலம் ஒவ்வொரு மனிதனின் கடமைகள் வலியுறுத்தப் பட்டன.இப்போது குரு தன்மையில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டது.மாதா,பிதா,குரு,தெய்வம் என்ற சமுதாய அமைப்பு மனிதனின் வாழ்க்கையை வடிவமைத்தது.இன்றைய காலகட்டம் குருவின் நிலையில் வெற்றிடம் ஏற்பட்டதால் தெய்வத்தின் தொடர்பு அற்றுப் போனது.குருவின் இடத்தை கணவன் அல்லது மனைவியாக அமைந்தவரோ அல்லது நண்பர்களோ நிரப்புகின்றனர். அவர்கள் நல்லவர்களாக வாய்த்தால் இந்த மனிதனின் வாழ்க்கை சிறப்பாக அமையும் துர்க்குணங்கள் நிறைந்தவராக அமைந்தால் நரகமாக வாழ்க்கை மாறும். தற்கால சூழலில் தமது துணையை தேர்ந்தெடுக்கையில் பணம், சொத்துக்கள் ஆகியவற்றுக்கே இருபாலரும் முக்கியத்துவம் தருவதால் அங்கு ஒழுக்கம்,சிந்தனை,செயல்பாடுகள் சீர்தூக்கி பார்க்காமல் தேர்வு செய்வது,மற்றும் நண்பர்களை மதுவிருந்தில் தேடுவது ஆகிய பண்பாடு மாற்றம் குருதன்மையை இட்டு நிரப்பும் இடத்தில் அசுரத் தன்மை குடிபுகுந்து அனாதை இல்லங்களும் முதியோர் இல்லங்களும் சமுதாயத்தில் ஒரு அங்கமாக உருவாக காரணமாகிவிட்டன.இவையெல்லாம் கலியுகத்தின் எச்சங்கள்.இது சத்ய யுகத்தின் ஆரம்பம். இறைவன் அனைவரின் அருகிலும் இருந்து வெளிப்பட காலம் கருதி காத்திருக்கிறார். எங்கிருந்து தவறுகள் ஆரம்பமாயினவோ அங்கேயே திருத்தங்களும் ஆரம்பமாகும்.இதுவே அருளியல் சட்டம்.சுபம்.
ஜோதிமைந்தன்.
30-11-2023
காலை 5.55 மணி
30-11-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள் ஆத்ம சொரூபியாய் வாழும் மனிதர்களை பஞ்ச கிருதி கர்த்தாக்கள் தடுத்து ஆட்கொள்வார்கள் அவ்வாறாக சதாசிவன் அவர்கள் திருஞான சம்பந்தரை தடுத்து ஆட்கொள்ளும்போது அவரின் வயது பதினாறு.சுந்தரமூர்த்தி நாயனார் அவர்களை தடுத்தாட் கொள்ளும்போது அவரின் வயது முப்பத்தி இரண்டு மாணிக்க வாசகரை தடுத்தாட்கொள்ளும்போது அவரின் வயது நாற்பத்திஎட்டு திருநாவுக்கரசரை தடுத்தாட் கொள்ளும்போது அவருக்கு வயது எண்பது.இவர்கள் சமயக் குரவர் நால்வர் எனப் பெயர் பெற்றனர். வள்ளல் பெருமான் அவர்கள் பஞ்சகிருத்திய படிநிலைகளைகடக்கும் சூழலில் பிரம்மா முதல் சதாசிவன் வரை உள்ளவர்களை தெய்வநிலையிலிருந்து குருநிலைக்கு உயர்த்தி அவர்களிடமே உண்மை தெய்வத்தை பற்றி உபதேசம் கேட்டார். இருநூற்று எழுபத்தாறு சிவன்கோயிலில் அருளரசாட்சி கர்த்தாக்களையும் இருந்த இடத்திலிருந்தே ஆன்மநெகிழ்ச்சியால் புகழ்ந்தவுடன் அவரை யாரும் தடுக்காமல் வழிவிட இயற்கை உண்மை கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இருப்பிடத்தை அறிந்தார். அருட்பெருஞ்ஜோதியர் அமர்வதற்கு ஏற்றவகையில் தமது உள்ளத்தை தயார் செய்து அலங்கரித்தார் தமது ஐம்பத்திஓராவது வயதில் தாமே ஓளிவடிவமாகி அருட்பெருஞ்ஜோதியரின் இயல்பாக மாறினார்.தாமே அருட்பெருஞ்ஜோதியராக மாறிய பின்னும் தம்மை குருவாகவே எண்ணி தமது கருத்துக்களை பின்பற்ற கூறுகிறார்
ஜோதிமைந்தன்.
30-11-2023
காலை 5.55 மணி
29-11-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள் துர்க்கரும வினைகள் அதிகமாக இருந்தால் எவ்வளவு பணம் இருந்தாலும் அதை சேர்த்து வைத்தவனால் அனுபவிக்க இயலாது நற்கரும வினைகள் இருந்தால் அவன் பணம் இல்லை என்றால் கூட நல்ல மனைவி. நற்குணங்கள் உள்ள வாரிசுகள், நல்ல பணியாட்கள்,அமைதியான வாழ்க்கை கிடைக்க இறைவன் விதியமைப்பார். அவனால் சுலபமாக அருளுணவு பெற்று அபரிமிதமான அருள் சக்தியால் உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்ய இயலும்.உலகினில் உயிர்களுக்கு வரும் இடையூறுகளை விலக செய்து சுத்த சன்மார்க்க சுகநிலை பெற இயலும்.மனிதனுக்கு பணம் தேவை. அதை இறைவனிடமும் கேட்கலாம்.தவறில்லை.ஆனால் உலக நன்மைக்காக வும் பட்ஜெட் போட்டு கேட்கவும். இறைவன் தருவார்.பணம் வந்தபின் பட்ஜெட்டை மாற்றி செயல்பட்டால் அதற்குரிய விளைவாக தக்க அனுபவங்களை வழங்கிவிடுவார். அதுவே எதிர்கருமவினையாக செயல்படுகிறது இருவகையான வினைகளும் பிறவி மாறிப்போனாலும் அந்த ஆன்மாவை தொடரும் அந்த வினைகளை அனுபவத்தின் மூலமாகத்தான் நீக்கிகொள்ள இயலும்.சுபம்
ஜோதிமைந்தன்.
29-11-2023
காலை 5.55 மணி
28-11-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள் ஜோதிமைந்தன் எனும் பெயரால் தம்முடைய உலகார்ந்த கருத்துக்களை மனித நிலையில் வாழ்ந்து அனுபவப்பட்டு வெளிப் படுத்தும்படியான எமது இந்த ஜன்ம கடமையாக வள்ளல் பெருமான் கட்டளை வழங்கினார் அவருடைய முடிவான கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ள யாம் உட்பட அவரின் பெயரால் செயல்படும் யாருக்கும் உரிமையில்லை.புகழுக்காகவும் பெருமைக்காகவும் புரிந்துணர்வு இல்லாமலும் செயல் படுபவர்களை ஆண்டவரிடம் விட்டு விடுவார்.அதாவது அவர்களை பாதுகாக்கும் கடமையிலிருந்து விலகி விடுவார்.ஒவ்வொரு அன்பரும் தம்முடன் எப்போதும் வள்ளல் பெருமான் இருப்பதாக கருதி மனுமுறை கண்ட வாசகத்திலுள்ள பாவபட்டியலிலுள்ள பாவங்களையும் துர்க்குணங்களையும் தமது ஞான அறிவினால் தவிர்த்து வந்தால் சத்ய யுக நியதிப்படி ஏறாத நிலைக்கு ஏற்றி வைப்பார் சுபம்.
ஜோதிமைந்தன்.
27-11-2023
காலை 5.55 மணி
27-11-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள் கடந்த சதுர்யுகத்தில் பல்வேறு பிறவிகள் எடுத்து வந்து தற்போது இந்த மனித பிறவி எடுத்து வந்த சூழலில் உள்ள மனிதருக்கு இந்த மனித பிறவி எடுத்து வந்ததின் காரணத்தை பல்வேறு வகையில் இறைவன் உணர்த்துவார். அந்த உணர்தல் சத்ய யுகத்தில் பயணிப்பதாக இருக்கும்.அதை அறிந்தும் அறியாததுபோல் பாசாங்கு செய்தால் கலியுகாந்த பயணமாக அமைந்துவிடும்.கிருதயுகாதி காலமாகிய இந்த யுக சந்தி காலத்திலேயே யுகத்தன்மையை மாற்றி வாழ்க்கை இயல்பாக கொண்டுவிட்டால் ஆன்மபயணம் எளிதாகி விடும். பிறவி மாறிப்போனாலும் தர்ம நெறிமுறைப்படியான வாழ்க்கையாக அமையும் அதனினும் மேலான மரணமிலா பெருவாழ்விலும் வாழும் தன்மை அடைய கூடும்.சுபம்.
ஜோதிமைந்தன்.
27-11-2023
காலை 5.55 மணி
26-11-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள் கிபி2100வரை அதாவது இன்னும் எழுபத்தி ஏழு ஆண்டுகளுக்கு கலியுகம் சத்யயுகம் இரண்டுக்குமான யுகசந்திகாலம் இந்த காலங்களில் இரண்டு யுகங்களின் அருளியல் சட்டங்களும் நடைமுறையில் இருக்கும் வள்ளல் பெருமான் வழங்கிய சுத்த சன்மார்க்க நெறிமுறைகளை பின் பற்றுபவர்களுக்கு சத்யயுக நியதிப்படி அருளியல் சட்டம் வேலை செய்யும் அவர்கள் புலால் மறுத்தவர்களாக இருந்தால் போதுமானது.இன்றைய காலகட்டத்தில் வேகன் என்ற இயக்கம் உலகம் முழுக்க கோடிக்கணக்கான மக்களால் பின்பற்றப் படுகிறது.அந்த இயக்கம் நமது சன்மார்க்க சங்க தொடர்பு அற்றது அதிலுள்ளவர்கள் துர்க்குணங்களை விலக்கி இருந்தால் அவர்களும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராலும் வள்ளல் பெருமானாலும் சத்யயுக அதாவது ஞானசித்தர்கால மக்களாக கருதி வாழ்க்கை விதி அமையும்.வள்ளல் பெருமானின் பக்தராக இருந்தாலும் கலியுக வாழ்க்கை முறையுடன் சமரசம் செய்துகொண்டு வாழ்ந்தால் கலியுக அருளியல் சட்டமே அவர்களை வழிநடத்தும்.எனவே அகத்தே கருத்து புறத்தே வெளுத்திருப்பவர்கள் கலியுக மக்கள் எனவும் அகத்தேயும் வெளுத்திருப்பவர்கள் சத்யயுக பிரதிநிதிகள் எனவும் அறிக.சுபம்.
ஜோதிமைந்தன்.
26-11-2023
காலை 5.55 மணி
25-11-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள் கிபி2100வரை அதாவது இன்னும் எழுபத்தி ஏழு ஆண்டுகளுக்கு கலியுகம் சத்யயுகம் இரண்டுக்குமான யுகசந்திகாலம் இந்த காலங்களில் இரண்டு யுகங்களின் அருளியல் சட்டங்களும் நடைமுறையில் இருக்கும் வள்ளல் பெருமான் வழங்கிய சுத்த சன்மார்க்க நெறிமுறைகளை பின் பற்றுபவர்களுக்கு சத்யயுக நியதிப்படி அருளியல் சட்டம் வேலை செய்யும் அவர்கள் புலால் மறுத்தவர்களாக இருந்தால் போதுமானது.இன்றைய காலகட்டத்தில் வேகன் என்ற இயக்கம் உலகம் முழுக்க கோடிக்கணக்கான மக்களால் பின்பற்றப் படுகிறது.அந்த இயக்கம் நமது சன்மார்க்க சங்க தொடர்பு அற்றது அதிலுள்ளவர்கள் துர்க்குணங்களை விலக்கி இருந்தால் அவர்களும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராலும் வள்ளல் பெருமானாலும் சத்யயுக அதாவது ஞானசித்தர்கால மக்களாக கருதி வாழ்க்கை விதி அமையும்.வள்ளல் பெருமானின் பக்தராக இருந்தாலும் கலியுக வாழ்க்கை முறையுடன் சமரசம் செய்துகொண்டு வாழ்ந்தால் கலியுக அருளியல் சட்டமே அவர்களை வழிநடத்தும்.எனவே அகத்தே கருத்து புறத்தே வெளுத்திருப்பவர்கள் கலியுக மக்கள் எனவும் அகத்தேயும் வெளுத்திருப்பவர்கள் சத்யயுக பிரதிநிதிகள் எனவும் அறிக.சுபம்.
ஜோதிமைந்தன்.
25-11-2023
காலை 5.55 மணி
24-11-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள். இப்போதுள்ள சக்தி பீடங்களும் சிவாலயங்களும் விஷ்ணு ஆலயங்களும் ஆத்ம சக்தியால் செயல்பட ஆரம்பித்தால் அவையெல்லாம் சற்குண பிரம்மமாக செயல்பட ஆரம்பிக்கும்.அதுசமயம் காத்திருக்கும் நிலையிலுள்ள பைரவ சக்தி பெற்ற ஆன்மாக்கள் மனிதர்கள் பெறக்கூடிய ஆன்மலாபத்தை கட்டுப்படுத்துவார்கள். புலால் மறுத்த துர்க்குணங்களை கட்டுப்படுத்திய மனிதர்கள் பைரவ படிநிலையைவிட உயர்ந்த படிநிலையில் அதாவதுஆரம்பமே முதலாம் மாயா தெய்வ படிநிலையில் வாழும்போதே இருப்பதால் அவர்கள் பெறும் ஆன்மலாபத்தை தடுக்க இயலாது.அதே சமயம் சற்குண பிரம்ம வழிபாடு கலியுக நியதியில் ஆன்மலாபம் பத்துசதவீதம் அதிக பட்சமாக பெறலாம்.நிர்க்குண வழிபாடாகிய ஜோதி வழிபாட்டில் சத்யயுக நியதியில் வள்ளல் பெருமானைப்போல் அவரவர் பக்குவத்திற்கேற்ப நூறு சதவீதம் கூட ஆன்மலாபம் பெறலாம்.
சுபம்.
ஜோதிமைந்தன்.
24-11-2023
காலை 5.55 மணி
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள். இப்போதுள்ள சக்தி பீடங்களும் சிவாலயங்களும் விஷ்ணு ஆலயங்களும் ஆத்ம சக்தியால் செயல்பட ஆரம்பித்தால் அவையெல்லாம் சற்குண பிரம்மமாக செயல்பட ஆரம்பிக்கும்.அதுசமயம் காத்திருக்கும் நிலையிலுள்ள பைரவ சக்தி பெற்ற ஆன்மாக்கள் மனிதர்கள் பெறக்கூடிய ஆன்மலாபத்தை கட்டுப்படுத்துவார்கள். புலால் மறுத்த துர்க்குணங்களை கட்டுப்படுத்திய மனிதர்கள் பைரவ படிநிலையைவிட உயர்ந்த படிநிலையில் அதாவதுஆரம்பமே முதலாம் மாயா தெய்வ படிநிலையில் வாழும்போதே இருப்பதால் அவர்கள் பெறும் ஆன்மலாபத்தை தடுக்க இயலாது.அதே சமயம் சற்குண பிரம்ம வழிபாடு கலியுக நியதியில் ஆன்மலாபம் பத்துசதவீதம் அதிக பட்சமாக பெறலாம்.நிர்க்குண வழிபாடாகிய ஜோதி வழிபாட்டில் சத்யயுக நியதியில் வள்ளல் பெருமானைப்போல் அவரவர் பக்குவத்திற்கேற்ப நூறு சதவீதம் கூட ஆன்மலாபம் பெறலாம்.
சுபம்.
ஜோதிமைந்தன்.
24-11-2023
காலை 5.55 மணி
23-11-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள் யாம் வள்ளல் பெருமானின் வழியில் சுத்த சன்மார்க்க வாழ்க்கை இயல்பை குடும்பத்தினருடன் கடை பிடித்தாலும் சரியை,கிரியை,யோகம்,ஞானம் ஆகிய நான்கு வகையான வழிபாட்டு முறைகளுக்கும் விளக்கமளித்து வருகிறோம். வள்ளல் பெருமான் மக்களை பின்பற்றச் சொன்னது ஞான வழிபாட்டுமுறை அதில் வழிபாட்டு முறைகளில் பதிமூன்றாவது நிலையான ஞானத்தில் சரியையில் ஆரம்பிக்கிறார்.அது அருவ வழிபாடான ஜோதி வழிபாடு என அறிக.முதல் பனிரென்டு வகைகள் பக்தி வழிபாட்டு நிலையை சேர்ந்தவை.சுத்த சன்மார்க்க அன்பர்கள் ஞான வழிபாட்டை கடை பிடித்தாலும் ப்க்தி வழிபாட்டின் அடிப்படை இலக்கணங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.என்பதை மனதில் கொண்டு சில கருத்துக்களை வெளிப் படுத்தி வருகிறோம்.
மனித சமுதாயம் விலங்கு நிலையிலிருந்து ஆங்காங்கே மொழிகள் தோன்றி மனித பண்பாடு கலாச்சாரம் உருவான போது குடும்பங்கள் எனும் அடிப்படை பெண்களை தலைமையாக கொண்டு உருவாகின.வழிபாடுகள் உருவாகும்போது ஆங்காங்கே பெண்தெய்வ வழிபாடுகள் தோன்றின. அவை கால சுழற்சியில் குல தெய்வ வழிபாடுகளாக மாறிப்போயின.ஆண்தெய்வவழிபாடுகள் தோன்றும்போது அவை காவல் தெய்வ வழிபாடுகளாக உருவாகின.இரண்டு வழிபாடுகளும் ஒருகால கட்டத்தில் ஏவல் தெய்வ வழிபாடுகளாக மாறி மனித சமுதாயத்தை சிதறடிக்க ஆரம்பித்தன.பெண் தெய்வ வழிபாடுகள் ஆதிசங்கரர் அவர்களால்இலக்கணம் வகுக்கப்பட்டு சாக்த வழிபாடு என உருவகப்படுத்தப்பட்டது. அவருடைய வழிமுறையில் நரபலி வழிபாடு செய்யப்பட்டு வந்த புராண அடிப்படையிலான 51சக்தி பீடங்கள் பலியிடுவது தடை செய்யப் பட்டு சாத்வீக கோயிலாக உருவெடுத்தது.பெண்தெய்வங்களை முன்னிலை படுத்தி அகோரரூபிணியும் சாந்த சொரூபிணியும் ஒரே தெய்வத்தின் இரு வெளிப்பாடுகளே என இலக்கணம் வகுத்தார். அதே சமயம் பக்தன் சென்று அழுது வேண்டினால் நல்லவன் கெட்டவன் பார்க்காமல் தாய்மை உணர்வோடு எல்லாருக்கும் வரம் கொடுத்து விடுவாள் எனவே அதை ஊழ்வினை அடிப்படையில் வழஙக ஒவ்வொரு சக்தி பீடங்கள் அருகிலும் பைரவர் கோவில் அமைத்தார்.சக்தி பீடத்தில் வரம் பெற்றாலும் பைரவர் மனிதர்களின் வினைக்கேற்ப அவரவர் வாங்கிய வரத்திலிருந்து குறைந்தபட்சம் மூன்றுசதவீதம் முதல் பத்துசதவீதம் வரை மனிதனுக்கு வழங்கி விட்டு மீதியை அவரே வைத்துக் கொள்வார்.பைரவர் பற்றிய விபரங்களை எமது கட்டுரை காண்க.மேலும் நாம் ஞானமார்க்கத்தில் அருட்பெருஞ்ஜோதி என்பதை சமயங்கள் ஞானவழிபாட்டில்நிர்க்குண பிரம்மம் என்றும் சரியை வழிபாட்டில் சர்க்குண பிரம்மமாக உருவகப்படுத்தி ஆதிசக்தி, ஆதிசிவன், ஆதிநாராயணன் என அவரவர் பின் பற்றும் சமயங்களுக்கேற்ப வழிபாடு செய்கிறார்கள்.சுபம்
ஜோதிமைந்தன்.
21-11-2023
காலை 5.55 மணி
21-11-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள் அகவல் பாராயணம் செய்தாலோ மகாமந்திர ஜபம் செய்தாலோ பிரபஞ்சத்திலிருந்து அருளுணவு அருட்பெருஞ்ஜோதியர் உரியநேரத்தில் சஹஸ்ராஹாரத்திற்கு வழங்குவார். ஆயிரம் முறை அகவல் படித்து ஒரே நாளில் இருபத்து நான்குமுறை அவல் படித்திருந்தால் அதன்பின் அருளணவை பிரபஞ்சத்திலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.அருள் வளையம் என்பது மந்திரங்கடந்த நிலையில் உள்ளவர்கள் தமக்கோ பிறருக்கோஉயிர்ப்பிணிஅல்லது உடற்பிணி ஏற்படும்போது தாம் பெற்ற அருளுணவை தமது வலது கையிலுள்ள அருட்கண்களாலோ ஆங்ஞா சக்கரத்திலுள்ள அருட்கண்களாலோ அருள் வளையத்தை வெளிப்படுத்தி பிரச்சினைகளை தீர்த்து கொள்வது.இதைபற்றிய விவரங்களை மெய்ஞானத்தை அடையும் வழி என்ற எமது கட்டுரை தொகுப்பில் அறிக
ஜோதிமைந்தன்.
21-11-2023
காலை 5.55 மணி
20-11-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளல் பெருமானின் ஆசிகள் கலியுகத்தில் ஆத்ம சக்தியால் இயங்கி வந்த நாயன்மார்களாலும் ஆழ்வார்களாலும் சித்தர்களாலும் பாடல் பெற்று வழிபாடு செய்யப்பட்ட 274சைவசமய கோவில்களும் 108வைணவ கோவில்களும் 51சாக்த கோவில்களும் சுமார் அறுநூறு ஆண்டுகளாக ஆத்மசக்தியை இழந்து மந்திர சக்தியால் இயங்கி வந்தன.அவையனைத்தும் வள்ளல் பெருமான் அருளரசாட்சியில் மீண்டும் ஆத்ம சக்தியை படிப்படியாகப் பெற்று செயல்பட ஆரம்பித்துள்ளன.புலால் மறுத்தவர்கள் அங்கு வழிபட்டாலும் அவர்களுக்கு பத்துசதவீத பலன் ஆத்ம சக்தியால் சத்யயுக நியதிப்படி அருட்பெருஞ்ஜோதியர் வழங்குவார்.வடலூரில் வணங்குபவர்களுக்கு அவரவர் ஆன்ம பக்குவத்திற்கேற்ப அருளும் பொருளும் கிடைக்கப் பெறுவர்.சுபம்.
ஜோதிமைந்தன்.
20-11-2023
காலை 5.55 மணி
19-11-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள்.வள்ளல் பெருமான் அவர்கள் உடற்பிணிக்காக ஐநூறு இயற்கை மூலிகை களை சொல்லியிருக்கிறார். தன்னுடைய மருத்துவத்தில் நவபாஷாணங்களையோ தனிமங்களையோ உலோகங்களையோ பொதுமக்களுக்கு பயன்படுத்த முற்படவில்லை.அவற்றிற்கு சமமான மூலிகைகளை பயன் படுத்தியுள்ளார்.சித்த மற்றும் ஆயுர் வேத மருத்துவங்கள் இயற்கை யில் மனிதனுக்காக படைக்கப் பட்ட சைவ உணவை உட்கொள்பவர்களுக்கே பயன் தரும். அசைவ பிரியர்கள் நாற்பது வயதை கடந்த பிறகாவது புலால் தவிர்த்தலை மேற்கொள்ள வேண்டும். இந்த நியதியைஅறியாமல் புலால் சாப்பிட்டு மனிதனின் இராஜ உறுப்புகள் செயலிழந்து மிகுந்த பொருட் செலவுக்குள்ளாகி கடுமையான பொருளாதார சிக்கல் ஏற்பட்டு இறுதி பயணத்தை பெரும்பாலானவர்கள் மேற்கொள்கிறார்கள். வள்ளல் பெருமான் ஒளிதேகம் பெறுவதை அனுபவமாக பெற்றார்.அவர் கூறிய உணவுகளை கடைபிடித்து வாழ்ந்தால் குறைந்த பட்சம் இறுதிகாலம் வரை ஆரோக்கிய வாழ்க்கையை மேற்கொள்ளலாம் அருளுணவையும் பிரபஞ்சத்திலிருந்து பெற்றுக் கொண்டால் நாமே உயிர் பிணியையும் தவிர்த்துக் கொள்ளலாம். எந்த அளவுக்கு திட உணவு,திரவ உணவு,வாயு உணவு,அருள் உணவு வள்ளலார் கூறும் இயல்பில் உட்கொள்கிறீர்களோ அந்த அளவு இம்மையில் ஆரோக்கியமும் மறுமையில் உயர்நிலையும் கிட்டும் சுபம்.
ஜோதிமைந்தன்.
18-11-2023
காலை 5.55 மணி
18-11-2023
கருணைமிகு அன்பர்களுக்கு வள்ளல் பெருமானின் ஆசிகள்.உடற்பிணி வராமல் தடுக்க பல்வேறு மருத்துவம் இருக்கிறது.உணவுமுறைகளை நெறிப்படுத்தினால் உடற்பிணி வராமல் தடுக்கலாம் உயிர்பிணி வராமல் தடுக்க அருள்படலங்கள் உடலை கவசம் போல் காப்பாற்றும். பூமியை ஓசோன் படலம் காப்பாற்றுவதுபோல் மனிதனை அருள் படலம் காப்பாற்றும்.புலால் உணவு அந்த படலத்தை அழித்துவிடும்.அருள்படலத்தை திடப்படுத்தினால் அதுவே சூக்கும தேகமாக மாறும் சூக்கும தேகம் ஒளிதேகமாக மாறும். உயிர்ப்பிணியை கவனிக்காமல் விட்டு விட்டால் அதுவே உடற்பிணியாக மாறும். உயிர்ப்பிணியால் வந்த உடற்பிணியை நவீன மருத்துவத்தால் சரி செய்ய இயலாது பிரச்னையை தள்ளிப் போடலாம். உயிர்பிணிக்கு ஆரம்பகட்ட மருத்துவமேதுர்க்குணங்களை நீக்குவதும் புலால் மறுத்தலும்தான்.புலால் மறுத்தல் கடினமாக தோன்றும் ஆனால் சாதாரண மனிதர்கள் நவீன மருத்துவர்கள் கூறினால் ஏற்றுக் கொள்வார்கள்.ஆனால் மருத்துவர்களும்,ஆன்மீகவாதிகளும் இதை வலியுறுத்துவதில்லை. வள்ளல் பெருமான் வலியுறுத்துகிறார்.அவர் காட்டிய பாதையில் பயணிக்கும் நாமும் வலியுறுத்துவோம். சுபம்.
ஜோதிமைந்தன்.
18-11-2023
காலை 5.55 மணி
17-11-2023
கருணைமிகு சன்மார்க்க அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள் நாம் ஏற்கனவே கூறினோம் உலகில் உருவான நாகரீகங்களுக்கு எல்லாம் ஒவ்வொரு நதிகள் ஆதாரமாக இருக்கும் ஆனால் பாரத பண்பாட்டின் ஆதாரமாக தற்போது ஏழுநதிகள் கூறப்படுகின்றன.ஆனால் பண்டைய தமிழக நாகரீகம் பனிரெண்டுஜீவ நதிகள் வரை தமிழர் நாகரீக தாக்கம் இருந்த பகுதிகளாக கருதலாம்.அதில் இரண்டு நதிகள் ஆரம்பத்திலேயே முழுமையடையாமல் போய்விடும்.மீதமுள்ள பத்து நதிகளில் சரஸ்வதிஆறும், குமரி ஆறும்,பஃறுளி ஆறும் காலசீற்றத்தால் காணாமல் போயின.பிரம்மபுத்திரா ஆறு ஜீவநதியாகவும் தற்போது இருந்தாலும் புனித நதியாக கருதும் பட்டியலில் சமஸ்கிருத பட்டியலில் இடம் பெறவில்லை.சரஸ்வதி நதிமட்டும் தற்போதும் பூமிக்குள் இருப்பதாக உருவக படுத்திக் கொண்டு கங்கை,யமுனை,கோதாவரி,சரஸ்வதி,நர்மதை, சிந்து,காவேரி ஆகிய ஏழு நதிகளை புனித நதிகளாக பட்டியலிட்டு சரியை,கிரியை வழிபாடுகளில் முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது.இந்த நதிகளில் நீராடினால் பாவம் நீங்கும் என்று நம் முன்னோர்கள்நம்பிக்கையை வழங்கியுள்ளார்கள்.யோகநிலையில் இந்த நம்பிக்கை பூரணமாக அறியும்போது பாவம் போகும் அதற்கு சமமான புண்ணியமும் செலவாகிவிடும் குறைந்த பாவமும் அதிக புண்ணியமும் செய்திருந்தால் பாவம் புண்ணியம் எஞ்சி நிற்கும்.குறைந்த புண்ணியமும் அதிக பாவமும் செய்திருந்தால் புண்ணியம் கரைந்துபோய் பாவம் மட்டுமே எஞ்சி நிற்கும்.அதற் காகத்தான் காசிக்கு சென்றால் எதையாவது விட்டு விட வேண்டும் என்று ஞானிகள் கூறினார்கள்,அவர்கள் எட்டு வகையான காமம்,குரோதம், லோபம்,மோகம், மதம், மாச்சரியம் ,டம்பம், ஈர்ஷை துர்க்குணங்களில் ஏதேனும் ஒன்றையாவது விட்டு விடுங்கள் எட்டும் விட்டு விட்டால் மிகவும் நல்லது எனக்கூறினார்கள்.வள்ளல் பெருமான் அவர்கள் புலால் உண்பதை கைவிடுங்கள் அதைசெய்யாமல் புனித நதிகளில் நீராடுவதால் பலனில்லை என சுருக்கமாககூறியுள்ளார்கள். மக்கள் புலால் மறுத்தலும் துர்க்குணங்களை கைவிடுவதும் அதிக புண்ணியத்தை வழங்கும் அதனால் பாவம் கரைந்து புண்ணியம் எஞ்சி நிற்கும் என்பதை புரிந்து கொள்ளாமல் கத்திக்காயை விட்டு விட்டேன்,மாங்காய் சாப்பிடுவதை விட்டு விட்டேன் என பெருமை பேசுகிறார்கள்.இந்த விளக்கத்தை வழங்காமல் நாம் யாரையேனும் காசியாத்திரை அழைத்து சென்றால் மனிதர்களிடம் எஞ்சியிருக்கும் பாவமோ புண்ணியமோ அதை அவர்களை அழைத்து சென்ற பலனாக பெற்றுக் கொள்ளலாம்.இதுவே அருளியல் சட்டம்.
ஜோதிமைந்தன்.
ஜோதிமைந்தன்.
17-11-2023
காலை 5.55 மணி
11-11-2023
கருணைமிகு சன்மார்க்க அன்பர்களுக்கு வள்ளல் பெருமானின் ஆசிகள். “அருளாளர் வருகின்ற தருணமிது தோழி ஆயிரமாயிரம் அணிவிளக்கு ஏற்றிடுக” என்ற நமது ஞானகுரு வள்ளல் பெருமான் திருவாய் மலர்ந்தருளிய வாக்கை பக்தி மார்க்கத்தை சேர்ந்த அனைவரும் கடைபிடிக்கும் தீபாவளி திருநாளில் ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் புலால் மறுத்து இறைவனின் அருள் சக்தியை பரிபூரணமாக அனைவரும் பெறுக என வாழ்த்துகிறோம். சுபம்.
ஜோதிமைந்தன்.
11-11-2023
காலை 5.55 மணி
12-09-2023
கருணைமிகு சன்மார்க்க அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள் சமயங்கள் தோன்றும்போது சாதிய ஆதிக்கங்களும் உருவாக ஆரம்பித்தன அது சமண மதத்தில் அபிசாதி கோட்பாடு எனும் பிறப்பால் உயர்ந்தவர் எனும் தன்மை சமுதாயத்தில் உருவாகியது சமயங்கள் உருவாகவே சமயங்களை தழுவாமல் பழந்தமிழர் பண்பாடான பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் செய்தொழில் மட்டுமே வேற்றுமை ஐந்திணை கடவுள் வழிபாடு ஆகிய வாழ்க்கை இயல்புகளை கடைபிடித்தவர்களுக்கு ஆசீவகம் என்ற மதமாக அடையாளம் உருவாக்கப் பட்டது. ஆசீவகர்கள் தங்களுடைய அடையாள கருத்துக்களை சமயவாதிகளிடம் இழக்க வேண்டிய சூழல் உருவானது. ஆசீவக ஞானிகளாக இருந்து வீடுபேறு அடைந்த ஞானிகள் எல்லாம் சமயக் கடவுளராக காலம் மாற்றியது சந்திர குப்த மௌரியர் வாழ்வின் இறுதியில் சமண ஞானியாக மாறினார்.அவருடைய மகன் பிந்துசாரர் ஆசீவகராக வாழ்வின் இறுதிவரை வாழ்ந்தார். அவரின் குமாரர் சாம்ராட் என்று பெயர் சூட்டிக்கொண்ட அசோகர் பல்வேறு சிற்றரசர்களை வென்று தென்னகத்தை நோக்கி படையெடுத்து வந்தபோது கல்லணை கட்டிய கரிகால் சோழனின் தந்தையான இளஞ்சேட் சென்னி ஆண்டுவந்தார். அவரின் ஆளுகையில் சிற்றரசராக வாழ்ந்த எருமை நாட்டு மன்னனால் தோற்கடிக்கப் பட்டு கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் அந்த கால கட்டத்தில் வாழ்ந்த பௌத்த மத துறவிகளால் அவரின் மன உளைச்சல் தீர்க்கப் பட்டு அவருடைய கோபங்கள் எல்லாம் சமணர்கள் மீது திருப்பி விடப்பட்டது.அதாவது சமண மதத்தின் எழுச்சியால்தான் நமது வீரர்கள் போர்த்திறமை இழந்தார்கள் என்ற பௌத்த துறவிகளின் ஆலோசனையால் ஏற்பட்ட பாதிப்பால் சமணர்களை கொல்வதற்கு ஆணை பிறப்பிக்கப் பட்டது அதேசமயம் அவருடைய ஆட்சியின் கீழ் வாழ்ந்து வந்த ஆசீவக ஞானிகளையும் சேர்த்து அழிக்க உத்திரவிடப்பட்டது. இந்த அரசின் ஆணை பொதுமக்களும் செயல் படுத்தலாம் எனவும் அப்படி செயல் படுத்தினால் அவர்களுக்கு வெள்ளிப்பணம் பரிசாக வழங்கப் படும் என்ற ஆணையின் கொடுமை பதினெட்டாயிரம் ஆசீவக மற்றும் சமண ஞானிகள் கொல்லப் பட்டனர். சிலர் தப்பி பிழைத்து சோழநாட்டில் குடியேறினர். இந்த இரண்டு சமய வாழ்க்கை இயல்புகளின் தன்மையில் தமக்கு ஏற்ற கொள்கைகளை பௌத்த மதம் சுவீகரித்து கொண்டது. மறுபிறப்பில் நம்பிக்கை அதுவரை இல்லாத பௌத்த சமயம் புத்தரின் ஜாதக கதைகள் எழுதி அவரின் பல்வேறு பிறவிகளை கூறி தமது கொள்கையை மாற்றிக்கொண்டு அசோகரை வரலாற்றில் புனிதராக சித்தரித்தது. இந்த உண்மை வரலாறு ஒவ்வொரு ஆன்மீக வாதியும் அறிந்திருக்க வேண்டும்.சுபம்.
ஜோதிமைந்தன்.
12-09-2023
காலை 5.55 மணி
11-09-2023
கருணைமிகு சன்மார்க்க சங்க அன்பர்களுக்கு வள்ளல் பெருமானின் ஆசிகள். முதலாம் பௌத்த மாநாடு கௌதம புத்தரால் கிமு ஆறாம் நூற்றாண்டில் நடத்தப் பட்டது. பிம்பிசாரரின் குமாரர் அஜாத சத்துருவால் இரண்டாம் பௌத்த மாநாடு கிமு ஐந்தாம் நூற்றாண்டில் நடத்தப் பட்டது. சாம்ராட் அசோகரால் மூன்றாம் பௌத்த மாநாடு கிமு மூன்றாம் நூற்றாண்டில் நடத்தப் பட்டது.கனிஷ்கரால் நான்காம் பௌத்த மாநாடு கிபி முதல் நூற்றாண்டில் தருமசேனர் அசுவகோஷர் என்ற இரண்டு தட்சசீலபல்கலைக்கழக தலைமையாளர்களால் புருஷபுரத்தில்(தற்போதைய பெயர் பெஷாவர்)நாற்பத்தி எட்டுநாட்கள் நடத்தப் பட்டது.இந்த மாநாட்டில் தான் புத்தர் கடவுளாக அங்கீகரிக்கப்பட்டு அவரை கடவுளாய் வணங்கும் புத்த விஹாரங்கள் ஏற்படுத்த தீர்மானிக்கப் பட்டது.இதன் காரணமாக புத்தரை கடவுளாக வணங்கும் தன்மைக்கு மகாயானம் என்றும் அவரை குருவாக நினைத்து அவரின் கொள்கைகளை கடைபிடிக்கும் இயல்புக்கு ஹூனயானம் என்றும் இரண்டு பிரிவுகள் பௌத்த மதத்தில் உருவாயின. இதன் காரணமாக அறுநூறு ஆண்டுகள் துறவிகள் மட்டும் பின்பற்றும் மதமாக இருந்த பௌத்த மதம் குடும்பஸ்தர்களும் பின்பற்றும் வகையில் உருவ வழிபாடு புத்தருக்கு ஏற்படுத்தப்பட்டு எளிமையாக்கப் பட்டது.சுபம்.
ஜோதிமைந்தன்.
11-09-2023
காலை 5.55 மணி
10-09-2023
தமிழிலுள்ள அறம்,பொருள்,இன்பம், வீடு சம்பந்தமான தத்துவ கருத்துக்களை தன்னகத்தே ஏற்று தம்மை அறிவுக் களஞ்சியமாக மாற்றிக் கொண்டதுடன் தமிழர்களின் பண்பாட்டையும் காலத்தால் அழியாத தன்மைகள் கொண்டதாக உலக அளவில் கொண்டு சென்ற சமஸ்கிருத மொழியை வள்ளல் பெருமான் அவர்களும் உண்மையான ஆன்மிக உணர்வு கொண்ட மக்களும் மதிப்பளிப்பதில் வியப்பில்லை.அதே நேரத்தில்உண்மையான ஞானிகளும் யோகிகளும் தமிழையும் தொடர்ந்து ஆன்மீகத்திற்கு பயன்படுத்தி தம்மை உயர்த்திக் கொண்டார்கள் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.அதற்கு உலகளாவிய நம்பிக்கைக்கு பாத்திரமாக வரலாற்றில் இடம் பெற்ற இஸ்ரவேல் நாட்டை சேர்ந்த இயேசு பிரான் அவர்கள் கூட பொதுமக்களிடம் உரையாட தமது தாய்மொழியான எபிரேய மொழியையும் அரசாங்கத்திடம் பேச ரோமானிய மொழியையும் ஆண்டவனிடம் பேச தமிழ் மொழியையும் கையாண்டார் என்பதை மறுக்க இயலாத வகையில் அவர் உதிர்த்த கடைசி வார்த்தையான ‘எல்லோய் எல்லோய் லாமா சாபத்தானி’என்றவார்த்தையே சான்றாக உள்ளன. எல்லோய் எல்லோய் தமிழில் தந்தையே என்றும் முதன்மையானவர் என்றும் மிக உயர்ந்தவர் என்றும் தமிழ் மொழியில் பொருள் அளிக்க வல்லது.அந்த எல்லோய் எல்லோய் என்று அழைக்கும் வார்த்தைகளே காலத்தால் மாறி அல்லேலூயா என்று மாறிப்போனது.சுபம்.
ஜோதிமைந்தன்.
10-09-2023
காலை 5.55 மணி
09-09-2023
கருணைமிகு சன்மார்க்க அன்பர்களுக்கு வள்ளலாரின் ஆசிகள் சன்மார்க்கம் என்பது குருகுல கல்வியின் நிறைவான படிப்பான வெண்மையாடையின் தன்மையையும் ஞான வழிப்பாட்டையும் அடிப்படையாக க்கொண்டு தமிழை தாய்மொழியாக கொண்டது சமஸ்கிருதம் முற்றிலும் ஆன்மீகத்திற்கான மொழியாக செயல்பட்டு கிரியை களை முன்னிறுத்துவது சமஸ்கிருதத்தில் வேதங்கள் தோன்றி ஐயாயிரம் ஆண்டுகள் ஆகிறது. வேதங்கள் வேதவியாசர் செம்படவ தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்தவர்களின் வாரிசு அவரை பிரம்மத்தை உணர்ந்தவர் என்பதால் காலம் அவரை பிராமணர் ஆக்கியது. ஒவ்வொரு முத்தரும் சித்தரும் மூவரும் தேவரும் ரிஷிகளும் ஞானிகளும் பிரம்மத்தை உணர்ந்ததால் அந்நிலையடைந்தார்கள். அவர்கள் சமஸ்கிருதமும் அறிந்திருந்ததால் கிரியைகளை செய்தார்கள் செய்தொழிலால் வேற்றுமை பெற்றிருந்தாலும் ஆன்மீக நாட்டத்தால் அவர்களை காலம் பிராமணர் ஆக்கியது. மேலும் காலம் அந்த பிரம்மத்தை உணர்ந்த மனிதர்களின் வழிமுறையை பின்பற்றியவர்களை பிறப்பால் பிராமணர்கள் எனும் புதிய கலாச்சாரம் காலத்தால் உருவாக்கப்பட்டது.கிரியை வழிபாடான யாகங்கள் ஆதிகாலத்தில் தமிழிலேயே நடத்தப்பட்டன அதற்கு சாட்சியமாக பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதல் சங்க காலத்திய அரசரான பல்யாக சாலை முதுகுடுமி பெருவழுதி என்ற மன்னனின் காரண பெயரேயாகும். தமிழைப்போல் சமஸ்கிருதத்திற்கு சுயமாக எழுத்துக்களின்றி தேவநாகரி எழுத்துக்களையே பயன் படுத்தும் சூழலே காலம் காலமாக உள்ளது அது ஆன்மீக தத்துவத்தின் தாய் மொழியாகவே உள்ளதேயன்றி ஏதேனும் மனித சமுதாயத்தின் தாய் மொழியல்ல ஆன்மீக நாட்டமுள்ள அனைவரும் தாய்மொழி வெவ்வேறாக இருந்தாலும் சமஸ்கிருதத்திற்கு தாய்மொழிக்கு சமமான அந்தஸ்து வழங்குகிறார்கள்.தமிழிலிருந்த சரியை கிரியை யோகம் ஞானம் என்ற சதுர்நிலை வழிபாடுகள் காலத்தால் சிதைந்து போயின சமஸ்கிருதத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு செயல்பாட்டில் உள்ளன சுபம்.
ஜோதிமைந்தன்.
09-09-2023
காலை 5.55 மணி
08-09-2023
வள்ளல் பெருமான் அவர்கள் சாதியும் மதமும் சமயமும் காணா ஆதியனாதியாம் அருட்பெருஞ்ஜோதி என்று கூறுகிறார் இந்த வரையரையில் மக்கள் வாழ்ந்த காலம் எதுவென்றால்வேதங்களுக்கு முற்பட்ட தமிழர்கள் குறிஞ்சி நிலக்கடவுளாக முருகனையும் முல்லை நிலக் கடவுளாக திருமாலையும் மருத நிலக் கடவுளாக இந்திரனையும் நெய்தல் நிலக் கடவுளாக வருணணையும் பாலை நிலக் கடவுளாக கொற்றவையையும் வழிபட்ட காலம் வேதங்கள் எழுத்துரு பெறாத காலம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம் உருவாகியிருந்த காலம் செய்தொழில் வேற்றுமை சாதி வேற்றுமையாக உருவாகாத காலம் வெளிநாட்டு நாடோடி வரலாற்று எழுத்தாளர்கள் வந்து இந்த பண்பாட்டிற்கு இந்து கலாச்சாரம் என்று பெயர் சுட்டாத காலம் சிந்து சமவெளி நாகரீகம் என்ற நாகரீகம் உருவாவதற்கு முற்பட்ட காலம் முதல் தமிழ்சங்கத்தின் ஆரம்ப காலம் மாடுகளை செல்வத்தின் அடையாளமாக கருதி எதிரியாக கருதும் அடுத்த நாட்டு மன்னர்களை போருக்கு அழைக்க ஆநிரை கவர்தல் என்ற ஆக்கிரமிப்பை பயன் படுத்திய காலம் இதையே ஆதியனாதி என்று வள்ளல் பெருமான் கூறுகிறார். ஆதியனாதி என்ற தமிழ்ச்சொல் சமஸ்கிருத மொழி பெயர்ப்பில் சனாதனம் என்ற சொல்லாக மாறியவுடன் தமிழரின் கல்வியில் கருப்பு உடை வழங்கப்பட கூடிய தன்மையில் உள்ள தமிழ் மக்களுக்கு அந்த பண்பாடு ஏதோ வெளி நாட்டிலிருந்து வந்தவர்கள் பயன் படுத்திய கலாச்சாரமாக நினைக்கிறார்கள் சனாதனம் என்ற வார்த்தைக்குரிய கலாச்சாரம் பழந்தமிழர் கலாச்சாரமான ஆதியனாதி கலாச்சாரம்தான் என்பதை எடுத்துரைக்கும் கடமையை காலத்திடம் விட்டு விடுவோம் சுபம்.
ஜோதிமைந்தன்.
08-09-2023
காலை 5.55 மணி
07-09-2023
வள்ளல் பெருமான் அவர்கள் சமூக புரட்சியாளர் அல்ல சமூக மறுமலர்ச்சியாளர் ஏனெனில் சமூக புரட்சி என்பது நாத்திக வாதத்தையும் வரம்பு மீறிய வன்முறையையும் நம்பிக்கை கொண்டவர்களால் உருவாக்கப் படுவது நவீன காலத்தில் மொழி பேதமும் அதில் இணைந்து கொண்டது. அரசியல் மாற்றமும் அதில் ஒன்று. பெருமான் புரட்சி காரணிகளை கைகொள்ள வில்லை.முழுமையான ஞானமார்க்கத்தை நோக்கிமக்களை இட்டுச் சென்றார் சரியை கிரியை யோகம் இறுதியில் ஞானம் ஆகிய சதுர் நிலை வழிபாடுகளை அனுபவித்து தானே சாட்சியாக இருந்து என்னை போல் அனைத்து வழிபாடு முறைகளுக்கும் சாட்சியமாக முயற்சிக்காதீர்கள் கலியுகம் முடிய போகிறது எனவே அனைவரும் இறைவன் ஒருவனே என்ற தன்மையுடைய ஞானசித்தர்காலம் என்றார் மும்மொழி பாடசாலை நடத்தியதின் மூலம் அனைத்து மொழிகளுக்கும் அதற்குரிய மரியாதை செலுத்தும் தன்மையை உருவாக்கினார்.திருக்குறள் வகுப்பு நடத்தியதின் மூலம் அறம்,பொருள்,இன்பம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலலயுறுத்தி தமது பாடல்கள் மூலம் வீடு பேறு அடையும் வழிக்கான முக்கியத்துவத்தையும் இலக்கணம் வகுத்தார் இல்லறம் துறவறம் இரண்டிற்கும் தாமே சாட்சியமாக இருந்து தாம் ஒரு இல்லற ஞானி என்பதையும் சமூக மறுமலர்ச்சியாளர் என்பதையும் இவற்றிற்கு ஆதாரம் நான்கு வகையான ஒழுக்கம் என்பதையும் வாழ்ந்துகாட்டி மானுடத்தன்மையின் முழுமையே தெய்வ நிலைக்கும் முழுமை என்பதையும் இலக்கணமாக்கி இறைவனை எங்கோ தொலைதூரத்தில் தேடாதீர்கள் எத்துணையும் பேதமுறாது வாழும் அனைவரின் உள்ளத்திலும் இறைவன் உள்ளான் எனவே நீங்களும் எமது கருத்துக்களை வாழ்க்கை இயல்பாக கொள்வதின் மூலம் இறைவன் உறையும் ஆலயமாக மாறி ஆன்ம நேயத்தின் சாட்சியமாக மாறும்படி ஒவ்வொரு மனிதரையும் நோக்கி வேண்டுகோள் விடுத்தார் விடுக்கிறார் இனியும் விடுப்பார்சுபம்
ஜோதிமைந்தன்.
07-09-2023
காலை 5.55 மணி
06-09-2023
84 லட்சம் வகையான உயிரினங்கள் இந்த பூமியில் வாழ்வதாக ஞானிகள் கூறுகிறார்கள் அதில் ஒன்றுதான் மனித இனம்.மனிதனை தவிர மற்றைய உயிரினங்களின் பிறப்பு, வாழ்க்கை முறை,இறப்பு ஆகிய அனைத்தும் இறைவனின் சுதந்திரமாக உள்ளது.மனிதனுக்கு மட்டும் பிறப்பு,இறப்பு இரண்டின் தன்மையை தானே வைத்துக்கொண்டு வாழ்க்கை முறையை மட்டும் தற்சுதந்திரமாக மனிதனிடமே கொடுத்து விட்டான்.இந்த நிலையில் வாழ்க்கை பாதையில் நற்சிந்தனை தீயசிந்தனை நற்குணம் துர்க்குணம் நல்லொழுக்கம் புல்லொழுக்கம் சன்மார்க்கம் துன்மார்க்கம் கல்வி யறிவு தற்குறித்தனம் என்ற அகத்தே கருப்பு நிலையை வழங்கக்கூடிய பல்வேறு காரணிகளை முன்வைத்தான் அவரவர் தனியாகவோ கூட்டாகவோ சத்விசாரம் செய்து எது ஆன்மலாபம் வழங்க கூடியது என அறிந்து வாழ்பவர்கள் தன்மை சன்மார்க்கம் என்றும் மனம் போன போக்கில் வாழ்பவர்கள் தன்மை துன்மார்க்கம் என்றும் உருவாக்கினான்.நமது குருவான வள்ளல் பெருமான் அவர்கள் சன்மார்க்க இயல்பை கைகொள்பவர்களை அக இனத்தார் என்றும் ஜீவ ஒழுக்கம் இல்லாத வர்களை புற இனத்தார் என்றும் அடையாளமிட்டு பசிதவிர்த்தலை அனைவருக்கும் அன்னம் அளிப்பதின் மூலம் கடமையாக கொள் பண்பு களை போதிப்பதை அக இனத்தார்க்கு மட்டும் வழங்குக புற இனத்தார்க்கு போதனை செய்தால் அது ஆரவாரத்தன்மையை ஏற்படுத்தி உன் ஆன்ம லாபத்தை குறைத்துவிடும் என்கிறார். சுபம்
ஜோதிமைந்தன்.
06-09-2023
காலை 5.55 மணி
05-09-2023
பழந்தமிழர் பண்பாட்டிலிருந்து வேதங்கள் தோன்றின வேதங்களால் சூரியன்,சந்திரன்,வருணன்,போன்ற இயற்கை யை சார்ந்த தெய்வங்கள் போற்றப்பட்டு யாகங்கள் உருவாகின அனைத்து ஆன்மீக வழிபாடுகளும் சமஸ்கிருத எழுச்சிக்கு வழி வகுத்தபின் வேதங்கள் வளர்ச்சி ஆன்மீக தத்துவங்களை உள்ளடக்கிய நிடதங்களை உருவாக்கி அவை வேதங்களுக்கு துணைபுரிய பயன் படட்டும் என்ற நோக்கில் உபநிடதங்கள் என்ற பெயரை காலம் உருவாக்கியது ஆன்மீக தன்மையும் சமுதாய தர்மமும் பின்பற்றி இராஜதர்மம் உருவானது.இந்த அடிப்படையில் ஆட்சி செய்த அரசர்களை நாயகர்களாக கொண்ட.தெய்வத்தன்மையை இணைத்து புராணங்கள் உருவாகின.புராணங்கள் பலவகையான சமயங்கள் உருவாகி சமயங்களின் வளர்ச்சிக்கு உரமாகி ஊக்குவித்தன. ஆங்காங்கே மக்களின் மகத்தான நம்பிக்கையை பெற்று வாழ்ந்த அரசர்கள் ஸ்தூல தேகத்தை விடுத்தபின்னர் ஆங்காங்கே எழுச்சியாக இருந்த சமயங்களால் புராண,இதிகாச,காப்பியங்களால் அவரவர் சமயதேவர்களாக மக்களால் வழிபாடு செய்யப் பட்டனர்.அவர்கள் சமய தேவர்களாக பிறகு வந்த சமயவாதிகளால் உருவகப்படுத்தப்பட்டனரேயன்றி அவர்கள் தங்களை சமயவாதிகளாக முன்னிலை படுத்திக் கொள்ளவில்லை. ஏக இறை தத்துவத்தை ஏற்றுக் கொண்ட சன்மார்க்க அன்பர்கள் அவர்களை தமது முன்னோர்களாக முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் வாழ்க்கை இயல்புகளை அனுபவபாடமாக கொண்டு அவரவர் வாழ்க்கையை செம்மை படுத்தி கொள்ளலாம். நமது முன்னோர்களை தரக்குறைவாக விமரிசித்தால் அது நம்மை நாத்திகவாத தன்மையில் தள்ளிவிடும் பிறகு சமுதாய மறுமலர்ச்சியில் நமது பங்கை செலுத்த இயலாமல் போய்விடும். அந்த தன்மையானது வள்ளல் பெருமானின் உலகினில் உயிர்களுக்கு உறுமிடையூரெலாம் விலக நீயடைந்து விலக்குக மகிழ்க சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக உத்தமனாகுக ஓங்குக என்ற வாழ்க்கை இயல்பிலிருந்து காலம் நம்மை விலக்கி விடும். சுபம்
ஜோதிமைந்தன்.
05-09-2023
காலை 5.55 மணி
04-09-2023
பாடுபட்டு தேடி பணத்தை புதைத்து வைக்கும் கேடு கெட்ட மானிடரே கேளீர் கூடு விட்டு ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார் அந்தப்பணம் என்று நமது முன்னோர்கள் பணத்தை தங்க,வெள்ளி காசுகளாக புழக்கத்தில் இருந்த போது எழுதிவைத்தார்கள். தற்போது அதீதபணம் வைத்திருப்பவர்கள் வெளிநாட்டு வங்கிகளில் போடுகிறார்கள் இதுவரை வெளிநாட்டு வங்கிகளில் பணம் போட்டதற்கான ஆதாரம் இருக்குமேயன்றி திரும்ப பெறமுடியாத தன்மைதான் உள்ளது.மரணம் எப்படி சாசுவதமோ அப்படிதான் வெளிநாட்டு வங்கிகளில் போட்ட பணமும் என அறிக. அந்த பணத்தை இங்கேயே தாய்நாட்டில் செலவு செய்திருந்தால் சரித்திரத்தில் இடம்பெற்ற முதல் ஏழுவள்ளல்கள்,இடை ஏழு வள்ளல்கள், கடை ஏழு வள்ளல்கள் போன்று சரித்திரத்திலாவது இடம் பெறலாம், வள்ளல்தன்மையானது அவர்களுக்கு ஆரோக்கியமான ஸ்தூல தேகத்தையும், திடமான சூக்கும தேகத்தையும் வழங்கும்.எமக்கு எமது தந்தையார் மூலம் தெரிய வந்த ஒரு புண்ணியவான் வாழ்க்கையில் நடந்த அனுபவம்
ஒருமாபெரும் பணக்காரர் வாழ்ந்து வந்தார் அவருக்கு ஒரு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இருந்தார்கள் இவர் அனைவருக்கும் உதவும் தன்மையுள்ளவர் ஆனால் அவர்பிள்ளைகள் அவரின் தயாள குணத்தை ஏளனம் செய்வதும் அவரிடம் உதவி கேட்டு வருபவரை அவமானப் படுத்துவதுமாக வாழ்ந்தார்கள் தந்தைக்கு வியாபாரத்திலும் உதவாமல் கல்வியையும் ஒழுங்காக பயிலாமல் வாழ்ந்து கொண்டு இருந்தார்கள்.அந்த பணம் படைத்த மனிதர் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தினசரி தம்முடைய கைப்பட எழுதிய சீட்டு கொண்டு வரும் பனிரெண்டு பேருக்கு கோவில் மடைப்பள்ளியில் பட்டை சாதம் வழங்க அறக்கட்டளை அமைத்தார் காலையில் வியாபார ஸ்தலம் செல்ல புறப்பட்டு வெளியே வரும்போது கையில் பனிரெண்டு சீட்டுகள் வைத்துக் கொண்டு வெளியே வாயிலில் நிற்கும் பிச்சைக்காரர்களுக்கு வழங்கி விட்டு சென்று விடுவார்.அவருடைய இறுதி காலத்திற்கு பிறகு அந்த பிள்ளைகள் எந்தவகையிலும் சாமார்த்தியம் இல்லாத முட்டாள்களாக இருந்ததால் சொத்துக்கள் அனைத்தையும் இழந்தார்கள். தந்தையாரின் விருப்பப்படி இருவருக்கும் தலா ஆறு பேருக்கு அன்னதான சீட்டு வழங்கும் உரிமை வந்தது காலத்தின் வெளிப்பாடு அவரவர் பெற்ற உரிமை சீட்டுகளை பயன்படுத்தி அவரவர் குடும்ப உறுப்பினர்களையே அனுப்பி ஆறு பட்டைசாதம் கோவிலில் பெற்று ஒரு வேளை உணவை பூர்த்தி செய்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.எனவே மனிதநேயமுள்ளவர்கள் ‘உங்கள் பிள்ளைகள் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் இருந்தால் அவர்களுக்கு உங்கள் பணம் தேவைப்படாது கெட்டவர்களாகவும் முட்டாள்களாகவும் இருந்தால் உங்கள் பணம் பயன்படாது.எனவே வாரிசுகளை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வளர்ப்பது மட்டுமே பெற்றோர் கடமை சுபம்
ஜோதிமைந்தன்.
04-09-2023
காலை 5.55 மணி
03-09-2023
பழந்தமிழர் பண்பாட்டில் உடமையாக இருந்த பசுவானது காலமாற்றத்தாலும் மொழி மாற்றத்தாலும் தெய்வமாக்கப் பட்டது போல் பணம் மண், பெண்,பொன் மற்றுமுள்ள உடமைகள் அனைத்தும் தெய்வமாக வணங்கும்படியான கலாச்சாரம் உருவானது.இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்ற தத்துவ அடிப்படையில் இந்த கூற்று ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் நடைமுறையில் வரும்போது சமுதாயத்தில் வேறொரு எதிர் மறை தாக்கத்தை ஏற்படுத்தியது.அதாவது வெள்ளிக்கிழமை,செவ்வாய்கிழமைகளில் யாருக்கும் பணம் பொருள் உடமைகள் தரக்கூடாது இரவில் தரக்கூடாது அப்படி தந்தால் செல்வத்தின் தேவதையான லக்ஷ்மி நம் குடும்பத்தைவிட்டு போய்விடுவாள் என்ற கருத்து சமுதாயத்தில் வேறூன்றி பொருளாதார சுழற்சி பாதிக்கப் படுகிறது இந்த நிலை ஈதல்,இசைபட வாழ்தல் என்ற நல்லதொரு தத்துவத்தை செயலிழக்க செய்துவிட்டது.மேலும் பணத்தை சேர்த்து வைத்தால் கடவுளுடன் சேர்ந்து வாழ்வது போன்ற சிந்தனை அவரவர் மனதில் வேறூன்ற ஆரம்பித்து பணத்தை எந்தவித த்திலும் சம்பாதிக்கலாம் என்ற என்ற எண்ணம் கொண்ட மனிதர்கள் பெரும்பான்மையாக ஆகி விட்டனர். இந்த எண்ணமானது அரசாங்கத்திற்கும் உரியவரி செலுத்த வேண்டிய தில்லை என்ற நிலை வரிஏய்ப்புவரை எண்ணங்கள் மக்களின் ஆழ்மனது புரையோடிப்போனது. இதன் தாக்கத்தை இதற்கு மேல் விவரிப்பது ஆன்மீக தத்துவமாக கருத்தில் கொள்ள இயலாத சூழலாக உள்ளது.சுபம்
ஜோதிமைந்தன்.
03-09-2023
காலை 5.55 மணி
02-09-2023
பழந்தமிழர் பண்பாட்டில் அறம்,பொருள்,இன்பம், வீடு என்ற நான்கு தவவாழ்வியல் கோட்பாட்டில் முதல் மூன்றை சமுதாய ஒழுக்கமாக வரையறுத்தார்கள் வீடுபேறை பொருத்தவரை தற்சுதந்திரமாக அவரவர் அனுபவத்தால் வரவேண்டியது என விட்டுவடப் பட்டது ஆரம்ப காலகட்டத்தில் இந்த சூழல் சமுதாயமே பாதிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான சமய நம்பிக்கைகள் தோன்றியதுடன் நாத்திகவாதமும் அதில் ஒன்றாக இருந்தது. நாத்திகவாதத்தின் அதீத வளர்ச்சி மற்ற வாழ்வியல் பண்புகளை பாதிக்கும் அளவில் உருவானவுடன் கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் மூட நம்பிக்கைகளும் வளர ஆரம்பித்தன அது மனிதனை நரபலி கொடுக்கும் அளவிற்கு சமுதாயத்தை பாதித்து நின்றது.இதை சரி செய்ய அன்றைய காலகட்டத்தில் ஆதிசங்கரர் தோன்றி அவருடைய காலத்தில் இருந்த ஏறக்குறைய எழுபத்து இரண்டு சமயங்களை ஒன்றிணைத்து ஆறுசமயங்களாக வகுத்தார். அதில் நாத்திகவாதம், நரபலி இரண்டுமே அடிபட்டதுடன் தற்சுதந்திரமும் அடிப்பட்டு அவர் தமிழராக இருந்தாலும் சமஸ்கிருத மொழியை ஆதாரமாக கொண்டதால் தமிழ்மொழியிலிருந்த சாத்திரஙகள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் ஒழங்குபடுத்தப்பட்டு மறு உருப்பெற்றன. அதில் குறிப்பிடத்தக்கது வானசாத்திரம்.தமிழ்வழி சாத்திரங்கள் செயலிழந்ததற்கு இன்னொரு காரணம் மொழிவளமை காரணமாக ஒரு பொருளுக்கு பத்து பெயர்கள் இருக்கும் பனிரெண்டு மாதங்கள் தெரிந்து கொள்ள அறுபது எழுபது பெயர்களை நினைவில் கொள்ள வேண்டும் அது முடியாதவன் சாத்திர பண்டிதனாக அங்கீகரிக்க படமாட்டான். சமஸ்கிருதம் ,ஆங்கிலம் இந்தி,போன்ற தொடர்பு மொழிகளில் பனிரெண்டு மாதங்களுக்கு பனிரெண்டு வார்த்தைகளை நினைவில் கொண்டால் போதுமானது.இந்தசூழல் இன்று கணக்கீடுகள் மூலம் வானசாத்திரத்தை பட்டியல் இடும் பஞ்சாங்கம் கூட சமஸ்கிருத விற்பன்னர்களின் வெளிப்பாடு என்று விஞ்ஞானிகள் கருத்துரு கொள்ளுமளவிற்கு ஆகிவிட்டது.காரணம் தமிழர் வாழ்வியலை உறுதி செய்யும் உலகெங்கும் பதினைந்து கோடிபேருக்கு மேல் பேசக்கூடிய தமிழுக்குபாரதபூமியில் ஒரு பல்கலைக்கழகம்தான்உள்ளது.ஆனால் தமிழுடன் சம அந்தஸ்து கொடுத்து தமிழரால்உருவாக்கப்பட்டு மொழிவளமை உருவாக்கப்பட்டசமஸ்கிருதத்திற்கு பதினெட்டு பல்கலைக்கழக ங்கள் உள்ளன.சமஸ்கிருத மொழிக்கு எல்லா பேசுபவர்களும் ஆன்மீகத்தன்மையை கருத்தில் கொண்டு முக்கியத்துவம் தருகிறார்கள்.தமிழ் நாத்திகவாதத்தின் அதீத ஆளுமையால் வளர்ச்சி பொலிவிழந்து காணப்படுகிறது.இந்த தனமையானது தமிழைதாய் மொழியாகவும் கொண்டு தமிழ் வழி ஆன்மீகத்தை மீண்டும் மறுமலர்ச்சியடைய செய்து உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வருவிக்க உற்றவர்தான் வள்ளல் பெருமான் வள்ளல் பெருமானின் கொள்கைகளில் முக்கியமானது அவரவர் தாய்மொழியாக எந்த மொழியாகவும் இருக்கலாம் அது சமஸ்கிருத மாக கூட வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் தந்தை மொழி தமிழ்தான் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மைக்கான விளக்கமே இது.விரிக்கின் பெருக்கும்
ஜோதிமைந்தன்.
02-09-2023
காலை 5.55 மணி
01-09-2023
கருணைமிகு சன்மார்க்க அன்பர்களுக்கு இங்கு வெளிப்படுத்தும் கருத்துக்கள் சரித்திரம் மறைத்த உண்மைகளை அடிப்படையாக கொண்டது இதில் சில அடிப்படைகளை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும் அவற்றில் தலையாயது பழந்தமிழர் நாகரீகம் கடல்சீற்றம் ஏற்பட்டு கண்ட அழிவுகள் தோன்றிய காலகட்டங்களில் தமிழையும் அதை சார்ந்த நாகரீக பண்பாடுகளையும் வாழ்க்கை இயல்பாக கொண்ட மக்கள் மெசபடோமியா வரை வாழ்ந்தார்கள் பிறகு சமயங்களின் உருவாக்கம் ஏற்படுகையில் சிந்துநதியும் இமயமும் வட எல்லையாக அமைந்தது பிறகு விந்திய மலை வட எல்லையாக சிலகாலம் இருந்தது தற்போது வடவேங்கடம் எல்லையாக அமைந்துள்ளது. இந்த தன்மை மொழியால்தான் குறுகி போனதே யன்றி கலாச்சாரம், பண்பாடு,ஒழுக்கநெறிஆகிய அனைத்தும் போற்றப்பட்டு கொண்டிருக்கின்றன. ஆனால் ஆங்காங்கே வாழும் வாழ்க்கையில் அவரவர் உயிரணுவில் கடந்துவிட்டன.அடுத்து தமிழரின் வாழ்வியலில் பசுவை நேசித்து அதற்கு தற்போது நாம் பணத்திற்கு அளிக்கும் பொருளாதாரமரியாதையைஅளித்தனர். தமிழர் பண்பாட்டின் அடையாளத்தின் வெளிப்பாடுதான் தமிழ் மன்னர்களின் ஆநிரை கவர்தல் எனும் எதிரி நாட்டு மன்னனை போருக்கு அழைக்கும் முறையும் தற்போது வரை தமிழர்கள் மறக்காமல் மதிப்பளிக்கும் ஜல்லிக்கட்டுவிழாவுமாகும். பண்பாட்டு அடிப்படையிலான பசுக்களுக்கு அளித்து வந்தமதிப்பானது சமஸ்கிருத எழுச்சியும்,அதையொட்டிய வேதகால எழுச்சியும் ஏற்படும்போது பசுவுக்கு அதீத மதிப்பளிக்கும் வகையில் பசுவின் உடலில் எல்லாவகையான தேவர்களும் உள்ளார்கள் எனவே அதை வணங்க வேண்டும் எனும் கருத்து உருவானது,தாம் இதுகாறும் தமது உடமையாக கருதி அது ஒரு உயிரினம் என்பதால் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடி தமது வளமையையும் குடும்ப பெருமையையும் நிலைநாட்ட மாடுகளை அலங்கரித்து ஊர்வலம் விட்டுக் கொண்டிருந்த அளவில் தமிழர் பண்பாடாக இருந்த பசுவானது அதையே வணங்கவேண்டும் என்றதும் மாடுகள் தமிழருக்கு எதிரிகளாக சித்தரிக்கப்பட்டு உணவுக்கு பயன்படுமளவிற்கு பிரசினை சமுதாயத்தில் வேறூன்றிவிட்டது காலத்தின் கொடுமை.
ஜோதிமைந்தன்.
01-09-2023
காலை 5.55 மணி
31-08-2023
நாம் ஏற்கனவே கூறி இருந்தோம் சமய பிரிவினை ஏற்படும்போது ஏற்கனவே இருந்த பழந்தமிழர் பண்பாட்டை பின்பற்றுபவர்களுக்கும் ஒரு பெயரை வரலாறு வழங்கியது என்றும் அதன் பெயர் ஆசீவகம் என்றும் கூறியிருந்தோம் இந்த ஆசீவக முறையை முதன் முதலாக எழுத்துரு கொடுத்து செம்மை படுத்தியவர் மற்கலி கோசலர் என்ற தமிழ்வழி சித்தர் ஞானியாவார் இவர் திருச்சிஸ்ரீரங்கம் பகுதிக்கு வடக்கிலும் ஆதி திருவரங்கத்திற்கு தெற்கிலும் உள்ள பகுதிகளை கிமு ஆறாம் நூற்றாண்டில கௌதம புத்தருக்கு,மகாவீரருக்கும் சமகாலத்தில் வாழ்ந்து ஆட்சி செய்த அரசராவார். இவர் தமிழர் நம்பிக்கைப்படி தமது சூக்கும தேகம் அருளரசாட்சி செய்யும்பொருட்டு தமது தலைநகரில் ஒரு சரியை வழிபாட்டு கோவில் அமைத்தார் அந்த கோவிலே சமீப காலமாக பிரசித்தி பெற்று வரும் திருப்பட்டூர் பிரம்மா கோவில் ஆகும்
ஜோதிமைந்தன்.
31-08-2023
காலை 5.55 மணி
30-08-2023
ருணைமிகு சன்மார்க்க அன்பர்களுக்கு வந்தனம் யாம் இங்கு சன்மார்க்க சங்க உண்மை விளக்கங்களுடன் உண்மை வரலாறுகளையும் சேர்த்து கூறிவருகிறோம். ஏன் எனில் வள்ளல் பெருமான் அவர்கள் ஒளிதேகம் பெற்றதுடன் யுகபருஷராக இருந்து உலக மக்களிடம் உள்ள வேற்றுமைகளை களைந்து உலகெங்கும் ஆன்மநேயம் தழைக்கும் பணியை செய்து வருகிறார்.யுகசந்தி காலத்தில் வாழும் நாம் விருப்பு வெறுப்பற்ற நிலையில் உண்மை வரலாற்றை அறிந்து கொள்வது நமது கடமையாகிறது.அந்த
வகையில் நேற்று நாம் வள்ளல் பெருமானின் முன்னோர்கள் வாழ்க்கையில் நடந்த இறைவனின் அற்புத திருவிளையாடலையும் அதையறிந்த வேத விற்பன்னர்கள் தமிழர் பண்பாட்டுடன் இருந்தவர்களை தம்முடன் இணைத்துக் கொண்டதையும் கூறியிருந்தோம். இதன் தண்மையை முழுமையாக கூற வேண்டிய ஆர்வம் அன்பர்களிடம் உள்ளதால்,இந்த நிகழ்வு நடந்த இடம் தற்போது திருவண்ணாமலை மாவட்டம் சேத்துபட்டு அருகாமையிலுள்ள ஸ்ரீ புருஷமங்கலம் என்ற புராதன பெயரை கொண்ட மேல் சீஷமங்கலம் என்ற ஊராகும். அந்த ஊரிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் ஆலாலா முனிவரின் சந்ததியினர் வெவ்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தாலும் கடைசியாக அங்கு வாழ்ந்த தம்பதியரின் பெயர் சபாபதிசௌந்தரவல்லி தம்பதியராகும்.இந்த தம்பதியரின் வாரிசுகள் அந்த ஊரிலிருந்து குடிபெயர்ந்ததுடன் அங்கு யாரும் அவர்களின் வாரிசுகளுக்கும் வரலாறுக்கும் தொடர்பின்றிபோனது.ஆனால் அவர்கள்வாரிசுகளில் ஒருவர் பிழைப்புக்காக சிதம்பரம் மருதூரில் வசித்துவர அவரது பேரனாக வள்ளல் பெருமான் அவதரித்தார்.அதாவது வள்ளல் பெருமானின் கொள்ளுதாத்தா தம்பதியரே சபாபதி சௌந்தரவல்லி ஆவார்கள்.
ஜோதிமைந்தன்.
30-08-2023
காலை 5.55 மணி
29-08-2023
பழந்தமிழர் நாகரீக வழிபாடு எல்லா இடங்களிலும் இருந்த காலத்தில் நடுகல் வழிபாடு லிங்கவழிபாடாக மாறியிருந்த தருணம் ஒரு ஆலயத்தில் தொடர்ந்து பூசை செய்து பராமரித்து வருவதற்காக ஒரு குடும்பம் நியமிக்கப் பட்டிருந்தது.அந்த காலத்திலும் கருவறையில் ஆண்கள் மட்டும் பிரவேசித்து பூஜை செய்யவும் பெண்கள் வெளிபகுதியை சுத்தம் செய்வதும் பூக்கள் பறித்துவந்து துணை புரிவதும் நியதியாக வகுக்கப்பட்டு அந்த தம்பதியர் கோயிலை பராமரித்து வந்தனர். இந்த சூழலில் ஒருநாள் கணவருக்கு கடுமையான காய்ச்சல் வந்து படுத்துவிட்டார் மனைவி மட்டும் வழக்கம் போல் விடியற்காலையில் எழுந்து கோவில் சென்று தன்பணிகளை முடித்துவிட்டு இறைவனிடம் தன் கணவனின் நிலையை எடுத்துக் கூறிவிட்டு கருவறையினுட் சென்று சுத்தம் செய்து அபிஷேகம் செய்து கொண்டிருந்தார்.அந்த நிகழ்வை ஊர்மக்களில் ஒருவர் பார்த்துவிட்டு கருவறையை வெளிப்பக்கம் கதவைசாத்தி தாளிட்டுவிட்டு உள்ளே பெண் சென்று பூஜை செய்வதை ஊர்மக்களுக்கு கூறி கும்பல் சேர்த்து விட்டார் விபரீத நிலைமையை உணர்ந்த அந்த பெண்மணி இறைவனிடம் மன்றாடினார் பொதுமக்கள் வந்து கருவறையை திறந்து பார்க்கும் போது அந்த பெண்மணி இறைவனால் ஆணாக மாற்றப்பட்டிருந்தார். இந்த அற்புதம் இறைவனால் நிகழ்த்தப்பட்டது என ஊர்மக்கள் புரிந்து ஏற்றுக்கொண்டனர் இந்த நிகழ்வுக்கு பிறகு அந்த பெண்ணாயிருந்து ஆணாகமாறியவர்வரலாற்றில் ஆலாலா என்ற ஆசீவக ஞானியாக அறியப்படுகிறார்.பிறகு வேதகால வழிபாடுஎழுச்சியுறும்போதுஅந்த குடும்ப வாரிசுகளை யஜூர்வேதம் ஆபஸ்தம்ப சூத்திரம் எனும் வேத முறையில் தாமாகமுன்வந்து இணைத்து அவர்களின் முன்னோர்களில் பிரசித்திபெற்ற ஆலாலா அவர்களை ஆலால மகரிஷி என்ற கோத்திர தலைவராக மாற்றிவழிபாடு வேதமுறைவழிபாடாக மாறியது.இந்த வரலாற்று நிகழ்வை இங்கு கூற காரணம் வரலாற்றில் இடம்பெற்ற ஆலாலா என்ற குடும்பத்தை சேர்ந்த பழந்தமிழர் நாகரீகமான ஆசீவக கொள்கைகளை சன்மார்க்க நெறிமுறையாக வகுத்தளித்த நமது ஞானகுரு வள்ளல் பெருமான் அவர்களின் தந்தையார் ஆலாலாவின் வம்சாவழிவாரிசாக வந்தவர்.வள்ளல்பெருமான் அவர்கள் வம்சாவழியில் பெருமை தேடவில்லை வாழ்ந்து காட்டி ஒளிதேகம் பெற்றார்.பழந்தமிழர் வாழ்க்கை முறைக்கு கிடைத்த வெற்றி வள்ளல் பெருமான் அவர்கள்.
ஜோதிமைந்தன்.
29-08-2023
காலை 5.55 மணி
28-08-2023
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்பது மகாமந்திரம் இந்த மந்திரம் மொழிகளுக்கு அப்பாற்பட்டது இதை மொழிமாற்றம் செய்வதோ எழுத்து மாற்றம் செய்வதோ இதன் தன்மையை குறைத்துவிடும் இதன் பொருளை மற்ற மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்களுக்காக அவரவர் மொழியில் விளக்கம் தரலாம் அதற்காக மந்திர வார்த்தைகளையே மாற்றக் கூடாது. அதேபோல் ஜோ என்ற எழுத்தையும் சோ என்று எழுத அவசியமில்லை தூய தமிழில் வடமொழியின் கலப்பு ஏற்பட்டு சொற்கள் உருவானபோது அதை குறிக்க உருவான எழுத்துக்களில் ‘ஜ’ என்ற எழுத்தும் ஒன்று கலப்பு ஒலியை குறிக்கும் எழுத்துதான் ‘ஜ’,ஷ,ஸ,ஹ,க்ஷ,ஸ்ரீ என்ற எழுத்துக்கள் இவை தமிழ் எழுத்துக்கள் தான் சமஸ்கிருத வார்த்தைகள் தேவநாகரியால் எழுத்துரு பெறுகின்றன.அந்த மொழியிலும் இதுபோன்ற எழுத்துக்கள் இல்லை வேறு எந்த மொழியிலும் இதுபோன்ற வடிவம் கொண்ட எழுத்துக்கள் இல்லை எனவே ஜோதி என்ற வார்த்தையை சோதி என்று எழுதி சிரமப்பட வேண்டாம். ஏனெனில் ஏற்கனவே ழ’கரம் நிறைய தமிழ்மக்களால் ள என்ற ஓசையில் பேசி சிதைக்கிறார்கள் இதையும் எழுத்தால் சிதைத்தால் தமிழ் காலபோக்கில் சிதையும் நிலைஏற்படுகிறது.
ஜோதிமைந்தன்.
28-08-2023
காலை 5.55 மணி
27-08-2023
பழந்தமிழர் நாகரீகத்திற்கு ஆசீவகம் என வரலாறு பெயர் சூட்டியபின் அந்த பெயர் ஆசு என்றால் குறை சொல்ல முடியாத பரிசுத்தமான என்றுபொருள் ஈவு என்றால் கிடைக்க கூடிய அல்லது வெளிப்பட கூடிய அல்லது விடையாக கிடைக்க கூடிய அகம் என்றால் வீடு, வாழுமிடம், உறைவிடம் இல்லம் எனக்கூறலாம். ஆசீவகம் என்றால் குறை சொல்ல முடியாத பரிசுத்தமான இயல்புகளை கடைபிடித்து நல்ல பண்பாடுகளையும் இயல்புகளும் வழங்குபவர்கள் வாழுமிடம் என காரண பெயராக அமைந்தது.வரலாறு இந்த வாழ்க்கை இயல்புக்கு பெயரும் கொடுத்து காலப்போக்கில் இதை சமண சமயத்தின் ஒரு பிரிவாக கற்பித்து சமண சமயம் அழித்து ஒழிக்க படும்போது பழந்தமிழர் பண்பாடு எனும் ஆசீவக அமைப்புகளும் அழிக்கப் பட்டன ஏனெனில் இந்த பண்பாடு கொண்ட ஞானிகள் இருக்கும் வரை சமயங்களை வளர்க்க இயலாது.சமணர்களையும் ஆசீவக ஞானிகளையும் ஒன்றாக கருதி அழித்தது காலத்தின் கொடுமை.சமணம் என்பது அபிசாதி கோட்பாடு எனும் ஒழுக்கம் பண்பாடு கல்வி அனைத்தும் பிறப்பால் வருவது என்ற கொள்கையை கொண்டது.ஆசீவகம் என்பது ஒழுக்கம்,பண்பாடு,கல்வி அனைத்தும் சுற்றுசூழல்களாலும் அனுபவத்தாலும் கல்வியாலும் வருவது எனக்கூறி சாதியமைப்புக்கும் வாரிசுதன்மைக்கும் எதிரான கொள்கையுடையது.இவை இரண்டும்அதாவது ஆசீவகமும் சமணமும் எப்படி ஒரு சமயத்தின் இரண்டு உட்பிரிவுகளாக இருக்கமுடியும்.புலால் மறுத்தல் எனும் கொள்கை மட்டுமே இருவருக்கும் பொதுவாக இருந்தது
ஜோதிமைந்தன்.
27-08-2023
காலை 5.55 மணி
26-08-2023
வேதகால நாகரீக எழுச்சிக்கு முன்பே உருவானது சங்ககாலநாகரீகம் வேதகால நாகரீக எழுச்சி என்பது சமஸ்கிருத மொழியில் வேதங்கள் எழுதப்பெற்றபிறகு என அறிக பழந்தமிழர் நாகரீகத்தில் மெய்ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் ஒன்றாக அறிந்தவர்கள் சித்தர்கள் எனப்பட்டனர் அவர்கள் பெரும்பாலும் பொதுமக்கள் தொடர்பு இல்லாமல் வாழ்ந்தனர். அவர்களின் அனுபவ அறிவை சாதாரண மனிதன் அறிந்து கொள்ளாத வகையில் பூடகமாக எழுதி வைத்தனர் அதற்கடுத்த கட்டமாக எல்லா தரத்து மக்களையும் வழி நடத்தும் வகையில் குருகுலம் எனும் பள்ளிகள் அமைத்து மக்களை பண்பாட்டு ரீதியில் நெறிமுறை படுத்தினர் அதற்கு பின்னர் சமயங்கள் தோன்றின சமயங்கள் தோன்றி வழிபாட்டு ரீதியில் மக்கள் பிரிக்கப் படும்போது எந்த சமயத்திலும் சேராமல் சமயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஏற்கனவே மக்களால் பின்பற்றப்பட்ட நியதிகளை பின்பற்றிவந்தவர்களை பிறகு வந்த வரலாற்று அறிஞர்கள் ஆசீவக ஞானிகள் என்று வகை படுத்தினர்.பிறகு வந்தவர்கள் ஆசீவகத்தையும் ஒரு சமயமாக கூற ஆரம்பித்து விட்டனர்.பழந்தமிழர் நாகரீகத்திற்கு பெயர் வைத்ததின் மூலம் சமயக் குழியில் தள்ளிவிட்டு பிரிவினையை வேரூன்றினர்.இதையே வள்ளல் பெருமான் அவர்கள் வெறிக்கும் சமயக் குழியில் விழ விரைந்தேன் தன்னை விழாதவகை மறிக்கும் ஒரு பேறறிவளித்த வள்ளற் கொடியே மனக்கொடியை செறிக்கும் பெரியர் உளத்தோங்கும் தெய்வக் கொடியே என்று திருவாய் மலர்ந்தருளினார்.
ஜோதிமைந்தன்.
26-08-2023
காலை 5.55 மணி
25-08-2023
ஆன்மநேய சன்மார்க்க அன்பர்களுக்கு வள்ளல் பெருமான் அவர்கள் ஞானத்தை வலியுறுத்தும் குரு.அவர் தமது பாடலில் மாலும் துஞ்சுவன் மலரவன் இறப்பன் மற்றைய வானவர் முற்றிலுமழிவர் என்று உரைக்கின்றார் புற இனத்தாரும் பக்தி மார்க்கத்தை சேர்ந்த அன்பர்களும் கர்த்தாக்களை வணங்குவது நியாயம் ஆனால் வள்ளல் பெருமான் கருத்துக்களையும் சன்மார்க்க வாழ்க்கை இயல்பை அறிந்தவர்களும் வள்ளல் பெருமானை குருவாகவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை ஏக இறைவனாகவும் வணங்குவது சன்மார்க்க வாழ்க்கை இயல்பு.தன்னையும் தன் அருள் சத்தியின் வடிவையும் என்னையும் ஒன்றென இயற்றிய தந்தையே என்றுவள்ளல் பெருமான் கூறியுள்ளதால் ஏன் குரு தனி இறைவன் தனி என வணங்க வேண்டும் என்ற ஐயம் எழலாம் ஒன்றாக எண்ணி வணங்கினால் அது படிநிலை கீழாகி விடும் பெருமான் கூறிய என்னை வணங்காதீர்கள் என்ற வார்த்தையை மீறியதாகிவிடும். எனவே அவர் கூறிய வாழ்க்கை இயல்பை கடைபிடித்து அருட்பெருஞ்ஜோதியின் முன் விண்ணப்பம் வைத்தால் அவரவர் பக்குவ நிலைக்கேற்ப நிறைவேறும் அதற்கு சாதனமாக அருட்பெருஞ்ஜோதி அகவலையும், மகாமந்திரத்தையும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தையும், பரோபகாரத்தையும் பயன் படுத்துக
ஜோதிமைந்தன்.
25-08-2023
காலை 5.55 மணி
24-08-2023
ஆன்மநேய சன்மார்க்க அன்பர்கள்ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும் இந்த சத்ய யுகத்தில் மகாமந்திரத்தைவிட மேலான மந்திரம் எதுவுமில்லை இப்போதுள்ள சமஸ்கிருத மந்திரங்கள் கடந்த சதுர்யுகத்திற்கான மந்திரங்கள் ஆகிவிட்டன.வள்ளல் பெருமானின் மகாமந்திரம் தமது அருளரசாட்சியை ஆரம்பித்து விட்டது.அந்த அனுபவத்தை முதலில் சன்மார்க்க அன்பர்கள் உணர்ந்து பயன்படுத்த வேண்டும் வள்ளல் பெருமான் கூறுகிறார் ஆடாதீர் சற்றேனும் அசையாதீர் வேறொன்றை நாடாதீர் என்றபாடலின் வரிகளால் வலியுறுத்துகிறார்.இன்னும் 75ஆண்டுகளில் மகாமந்திரத்தின் புகழும் செயலும் உலகம் முழுதும் பரவி விடும் இப்போதே மகாமந்திரத்தை முறைப்படி பயன்படுத்தி வருங்கால மக்களுக்கு சன்மார்க்க சாட்சியமாக மாறலாம் வாருங்கள்
ஜோதிமைந்தன்.
24-08-2023
காலை 5.55 மணி
23-08-2023
ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய ஆன்மாவிற்கு வரலாறு இருக்கும் அந்த வரலாறு அவரவர் ஆழ்மனதில் பதிக்கப் பட்டிருக்கும் ஒரு பிறவி புண்ணியம் அதிகம் செய்து அடுத்த பிறவிக்கு செல்லும்போது பெறும் வசதி பெற்று பாவம் செய்வதற்கான எல்லா வாய்ப்புகளும் அவரவர்க்கு வாய்த்த தாய்தந்தையரால் உருவாக்கி தரப்படும் அதை பயன்படுத்தி பஞ்சமாபாதகம் செய்து அற்கடுத்த பிறவிஆன்மா நிலையிழந்து ஆண்டவர் தற்சுதந்திரத்தை எடுத்துக்கொள்ள சிற்றணுபசுநிலை ஏற்படும்.இதில் பாவம் செய்யும் பிறவியில் வாழ்வின் இறுதிகாலத்திலாவது
தன்னுடைய தவறை உணர்ந்து திருத்திக் கொண்டால் மீண்டும் அந்த ஆன்மாவிற்கு இறைவன் வாய்ப்பு வழங்குவார்.ஆனால் அந்த வாய்ப்பை இந்தபிறவியில் வழங்குவாரா அல்லது அடுத்த பிறவியில் வழங்குவாரா இல்லைவழங்காமல் போகும் அளவிற்கு நாத்திக வாதம் பேசியுள்ளாரா இந்த மனிதபிறவியில் என்பதுஅந்த மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள பிறவி இரகசியம்.நாத்திக வாதம் பிறவியின் தன்மையையே முடக்கி விடும் என்பதால்தான் வள்ளல் பெருமான் அவர்கள் நாத்திகர் நாக்கு முடை நாக்கு என்று கூறுகிறார்
ஜோதிமைந்தன்.
23-08-2023
காலை 5.55 மணி
22-08-2023
சன்மார்க்க சங்க அன்பர்கள் என்று எடுத்துக் கொண்டால் அதிக பட்சமாக தமிழ் நாடு முழுதும் முழுமையாக புரிந்து செயல்படுகிறவர்கள் 500பேர் இருப்பார்கள்.ஏதேனும் ஒரு இடத்தில் மாநாடு போன்று விழா நடத்தினால் அதில் அதிக பட்சம் இருநூறுபேர் கலந்து கொண்டால் உயர்ந்த நிலை அதைவிட அதிகமான நபர்கள் கலந்துகொண்டால் வள்ளலார் பார்வையில் உள்ள புற இனத்தாராக இருப்பார்கள்.அந்த மனிதர்களால் பெருமைசேரும் ஆனால் அருளியல் கிட்டாது.பொருள் விரயமும் காலவிரயமும் ஏற்படும்.ஒவ்வொரு உண்மையான சன்மார்க்கியும் அருளியல் பெற வேண்டும்.உலகிற்கு வள்ளல் பெருமானின் உண்மை கருத்துக்களை மக்களிடம் எடுத்துசென்று உலக ஒற்றுமையை உருவாக்கும் மனிதநேயமிக்கவராக செயல்படவேண்டும்.சத்ய யுகத்தின் ஆரம்பத்திலிருக்கும் நாம் இன்னும் 75ஆண்டுகளில் முழுமையாக சன்மார்க்க உலகமாக இந்த பூவுலக மனிதர்களை தயார்படுத்த வேண்டும்
ஜோதிமைந்தன்.
22-08-2023
காலை 5.55 மணி
21-08-2023
சரித்திரத்தில் இடம் பிடித்த முதல் ஆணவக் கொலை கம்பரின் மகன் அம்பிகாபதியை மூன்றாம் குலோத்துங்க சோழன் மரண தண்டனை விதித்தது.கம்பர் தமது இராமாவதாரம் என்ற நூலை சோழநாட்டில் அரங்கேற்றம் செய்ய இயலாமல் ஆந்திராவில் அரசாண்ட பிரதாபருத்திரன் என்ற அரசனின் அவையில் அரங்கேற்றம் செய்தார் எனக்கூறப்படுகிறது.பனிரண்டாம் நூற்றாண்டில் கம்பராமாயணம் வெளியானது.அவருக்கு பிறகு இருநூறு ஆண்டுகளுக்குபிறகு சம்புவரையர் ஆட்சிகாலத்தில் திருவண்ணாமலைக்கு தென்மேற்கு பகுதியில்தென்னணை என்ற சிற்றூரில் வாழ்ந்த இரட்டை புலவர்கள் வெண்பா இராமாயணம் எழுதினார்கள்.அதில் உள்ள அனைத்து பாடல்களும் நான்கு அடிகளில் அமையும் வெண்பா பாடல்களால் ஆனவை.அந்த புலவர்கள் எமது முன்னோர்களாக இருந்த காரணத்தால் அந்த இராமாயணத்தின் மூலசுவடிகட்டுகள் எங்கள் பூர்வீக வீட்டிலிருந்தன. 1970வாக்கில் மழைநீர் ஒழுகலால் பாதிக்கப்பட்டு அழிந்து போயினவள்ளல் பெருமானுக்கும் அவர்கள் முன்னோர்களாவார்கள்
ஜோதிமைந்தன்.
21-08-2023
காலை 5.55 மணி
20-08-2023
பழந்தமிழர் வாழ்வில் இப்போதிருக்கும் கட்டுக்கோப்பில் சாதிகள் இல்லை.யார் யாருடைய சூழ்நிலையில் என்ன தொழில் செய்கிறார்களோ அந்த தொழிலுக்கு உதவியாக இருக்க கூடிய தெரிந்து வைத்துள்ள பெண்ணை மனைவியாக திருமணம் செய்தார்கள். இப்போதும் அந்த உத்தி தொடர்கிறது எப்படி எனில் டாக்டர்பையனுக்கு டாக்டர் பெண்ணையும் எஞ்சினியர் பையனுக்கு எஞ்சினீயர் பெண்ணையும் ஆடிட்டர்பையனுக்கு ஆடிட்டராகவும் வரன் தேடுவது போன்ற இயற்கையான தேடுதலே முறையாக கொள்ளப்பட்டது ஆணவ கொலைகள் அரசர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட நடத்துவது இல்லை.ஆயிரம் ஆண்டுகளுக்குள்தான் அதுபோன்ற சமுதாய சீர்கேடுகள் உருவாகின.கல்வி மட்டுமே தகுதியை நிர்ணயித்தது.வள்ளல் பெருமான் அவர்கள் அதனால்தான் சாதியும் மதமும் சமயமும் காணா ஆதியனாதியாம் அருட்பெருஞஜோதி என்று கூறுகிறார். யாம் இங்கு கூறும் விஷயங்களை சன்மார்க்க அன்பர்கள் அவரவர் ஆங்காங்கே சத்விசாரம் செய்து கொள்ளுங்கள்.
ஜோதிமைந்தன்.
20-08-2023
காலை 5.55 மணி
19-08-2023
சன்மார்க்க அன்பர்கள் அவரவர் ஸ்தூல தேகம் கல்வியறிவு சூழ்நிலை ஆகியவற்றிற்கு ஏற்ப முழு அர்ப்பணிப்புடன் ஏற்றுக் கொண்ட கடமையை செய்துவரவேண்டும் அதில் பற்றாக்ககுறை இருந்தாலும் இறைவனிடம் அவரவர் பற்றாக்குறையை பற்றி விண்ணப்பிக்கலாம் தவறில்லை ஆனால் பற்றாக்குறை காரணமாக தமது கடமையை செய்ய கையூட்டு பெறுவது மிகவும் பாதகமானது. வள்ளல் பெருமான் காலத்தில் இந்த பாவம் செய்பவர்கள் பெரும்பாலும் இல்லை தற்காலம் போல் சமுதாயம் சீர்கேடு அடையும் அளவிற்கு அந்த காலத்தில் இருந்திருந்தால் பெருமான் அவர்கள் அதையும் மனுமுறை கண்ட வாசகத்திலுள்ள பாவ பட்டியலில் சேர்த்திருப்பார். பலனை எதிர்பார்க்காமல் செய்யும் கடமைக்கு இறைவன் நற்கூலி ஆரோக்கியம் நல்ல குழந்தைகள் அன்பான உறவினர்கள் இயற்கையான சுற்றுசூழல் ஆகிய வனவாக வழங்குவார். தவறு செய்யும் மனிதர்களுக்கு நரகத்தை வாழும்போதே காட்டிவிடுவார்.
ஜோதிமைந்தன்.
19-08-2023
காலை 5.55 மணி
18-08-2023
வள்ளல் பெருமான் அவர்கள் பேருபதேசத்தில் கூறுவார் யாம் கூறுவது உங்களுக்கு புரியவில்லை என்றால் தொழுவூர் வேலாயுத முதலியார் மனித தரத்தில் வேண்டுமட்டும் சொல்லுவார் என்று. நீங்கள் பரோபகாரமும் சத்விசாரமும் செய்து நற்குணம்,நற்சிந்தனை நல்லொழுக்கம் ஆகிய வாழ்க்கை இயல்பை கடைபிடித்து வாழ்ந்து வருகையில் அகத்தே கருத்து புறத்தே வெளுத்த மனிதர்களால் சகத்தே உங்கள் வாழ்க்கை இயல்பை தவறாக சித்தரித்து விமரிசனம் செய்யப்படும்.அதைக்கண்டு அஞ்சற்க அனைத்தையும் வள்ளல் பெருமானும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் கவனித்துக் கொண்டுதான் உள்ளார்கள் அவரவர் செயல்களுக்கான பலனை தருவது அதாவது எதிர் வினையாற்றுவது சன்மார்க்க பணி அல்ல நம்மை தூற்றுபவர்களுக்கு தூற்றுவதால் ஏதேனும் ஆதாயம் இம்மையில் தற்காலிகமாக இருக்கும் அதனால் தூற்றுவார்கள்.இதன் பலனாக உண்மை சன்மார்க்க அன்பர்கள் வருந்த தேவையில்லை இதற்கு தத்துவார்த்தமாக புராணத்தில் ஓரு கதை உண்டு அதில் தேவர்களும் அசுரர் களும் ஒன்றிணைந்து பாற்கடலை கடைவார்கள் அமுதம் பெறுவதற்காக அதில் முதலில் ஆலகால விஷம் வரும் அப்போது அன்றைய காலகட்டத்தில் யார் சதாசிவனாக இருந்தாரோ அவர் அதை ஏற்று விழுங்கி விடுவார் அதற்கு பிறகு வரும் பொருட்கள் அனைத்தையும் மற்றவர்கள் பங்கு போட்டுக் கொள்வார்கள் என்ற வகையில் கதை போகும். இந்த வகையில் உண்மை அன்பர்களை மற்றவர்கள் தூற்றுவார்கள் அதை அமைதியாக எதிர் கொண்டால் அந்த அன்பரை சதாசிவ படிநிலையையும் கடக்கும் அருள் சக்தியை ஆண்டவர் வழங்குவார்.ஆகவே உண்மையான அன்பர்கள் சற்றேனும் சலிப்படையாதீர்கள்.
ஜோதிமைந்தன்.
18-08-2023
காலை 5.55 மணி
17-08-2023
சன்மார்க்க அன்பர்கள் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வுக்காக செய்ய வேண்டிய முக்கியமான பணிகள் நிறைய உள்ளது.அவற்றில் ஒன்று பேய்பிசாசு பயம். ஒரு ஆன்மாவிற்கு ஸ்தூல தேகமாகிய மனித தேகம் இருக்கும் வரை தான் ஆண்டவரிடமிருந்து பிரபஞ்ச அருள்சக்தியை பெறமுடியும்.அவன் வாழும்போது செய்கின்ற பணியே அவனை ஆண்டவர் நிலைக்கும் உயர்த்தும் அவரவர் பெற்ற அருள்சக்திக்கு ஏற்ப படிநிலையிலும் அமர்த்தும் பேய்பிசாசு நிலையிலும் வைத்துவிடும்.சதாசிவ நிலைக்கு உயர்ந்தால்கூட சூக்கும தேக செயல்பாட்டில் அருள் சக்தி செலவாகிவிடும் மீண்டும்மனித பிறவிக்கு வந்துதான் அருள்சக்தியை ஆன்மாவானது பெறமுடியும்.எனவே மானுட நிலை என்பது மிக உயர்ந்தநிலை அதை வீண்காலம் கழித்து பிரயோஜனமற்றதாக ஏற்படுத்தி கொள்ளாமல் பேருபதேசகரூத்துக்களை உள்வாங்கி பயன்படுத்த வேண்டுகிறோம்.
ஜோதிமைந்தன்.
17-08-2023
காலை 5.55 மணி
16-08-2023
சன்மார்க்க அன்பர்கள் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வுக்காக செய்ய வேண்டிய முக்கியமான பணிகள் நிறைய உள்ளது.அவற்றில் ஒன்று பேய்பிசாசு பயம். ஒரு ஆன்மாவிற்கு ஸ்தூல தேகமாகிய மனித தேகம் இருக்கும் வரை தான் ஆண்டவரிடமிருந்து பிரபஞ்ச அருள்சக்தியை பெறமுடியும்.அவன் வாழும்போது செய்கின்ற பணியே அவனை ஆண்டவர் நிலைக்கும் உயர்த்தும் அவரவர் பெற்ற அருள்சக்திக்கு ஏற்ப படிநிலையிலும் அமர்த்தும் பேய்பிசாசு நிலையிலும் வைத்துவிடும்.சதாசிவ நிலைக்கு உயர்ந்தால்கூட சூக்கும தேக செயல்பாட்டில் அருள் சக்தி செலவாகிவிடும் மீண்டும்மனித பிறவிக்கு வந்துதான் அருள்சக்தியை ஆன்மாவானது பெறமுடியும்.எனவே மானுட நிலை என்பது மிக உயர்ந்தநிலை அதை வீண்காலம் கழித்து பிரயோஜனமற்றதாக ஏற்படுத்தி கொள்ளாமல் பேருபதேசகரூத்துக்களை உள்வாங்கி பயன்படுத்த வேண்டுகிறோம்.
ஜோதிமைந்தன்.
16-08-2023
காலை 5.55 மணி
15-08-2023
வள்ளல் பெருமான் வாழ்ந்த காலம் வரலாற்றில் இடம்பிடித்த கடுமையான பஞ்சகாலம் 1850முதல் 1900வரை உணவு பஞ்சத்தால் பசிப்பிணியால் இறந்தவர் எண்ணிக்கை ஒரு கோடி பேருக்குமேல் அந்த நேரத்தில் அணையா அடுப்பு அமைத்து மக்களுக்கு பசிப்பிணி போக்கியவர் வள்ளல் பெருமான்.இன்றைய காலகட்டத்திலும் உடல் பசிப்பிணி உள்ளது. வயிற்றுபசிப்பிணியை அரசாங்கமே இலவச அரிசி மற்றும் உணவுப்பொருட்கள் மூலம் தீர்த்து விடுகிறது. அன்னதானம் என்பது சன்மார்க்கத்தின் மூலாதாரம்.எனவே அன்னதானம் செய்யும் அன்பர்கள் நித்திய கரும விதியில் பெருமான் அவர்கள் கூறிய முறையில் உணவுசமைத்து வழங்கினால் அந்த உணவை48 நாட்கள் உட்கொள்பவர்கள் ஆயுள் இன்னும் பனிரெண்டு ஆண்டுகள் கூடும் அந்த உணவை முறைப்படி செய்துவழங்கி தாமும் உண்டு வந்தால் மரணத்தை தாமாக அழைக்காமல் நெருங்காது.மரணமிலா பெருவாழ்விலும் வாழ சாத்தியம் ஏற்பட கூடும். மனிதனுக்கு அருளுணவும் தேவைப்படுகிறது அதை ஞானத்தில் யோகம் மூலம் பிரபஞ்சத்திலிருந்து உட்கொள்ளும் முறையை பயிற்றுவிப்பதின் மூலம் பண்படுத்தலாம்.
ஜோதிமைந்தன்.
15-08-2023
காலை 5.55 மணி
14-08-2023
இராணிப்பேட்டை மகாமந்திரபீடம் வள்ளல் பெருமான் அவர்கள் கேந்திரமாக உருவாக்க தீர்மானித்த உடன் தமது ஞானதேக வெளிப்பாட்டுடன் வழிநடத்த பழனி எனும் பெயருள்ள எம்முடைய வாழ்க்கை இயல்பை ஜோதிமைந்தன் எனும் பெயரால் சன்மார்க்க அன்பராக மாற்றி முதல் நான்கு ஆண்டுகள் ஞானத்தில் சரியை வழிபாடுகள் மூலமும் அடுத்த பதினாறு ஆண்டுகள் ஞானத்தில் கிரியை மூலமும் அதற்கடுத்த நான்கு ஆண்டுகள் ஞானத்தில் யோகம் மூலமும் உருவாகி கேந்திரமாக செயல்பட்டு வருகிறது.இப்போது மகாமந்திரபீடம் எனும் கேந்திரம் திரியம்பல விண்ணகர திரூமாளிகைஎனும் அமைப்பாகதீர்மானித்து வடிவமைக்கும் வேலைகள் செயல்பாட்டில் உள்ளது இந்தபணி முழுமையடைந்தால் ஒரே நேரத்தில் ஞானத்தில் சரியை,கிரியை, யோகம் ஞானம் ஆகிய நான்கு வழிபாடுகளூம் தனித்தனியாக கேந்திரத்தில் நடத்த வழிவகை உருவாகும்.
ஜோதிமைந்தன்.
14-08-2023
காலை 5.55 மணி
13-08-2023
பழந்தமிழர் வாழ்ந்த காலத்தில் மேருமலை கேந்திரமாகவும் கடந்த பனிரண்டாயிரம் ஆண்டுகளில் திருக்கயிலாயம் கேந்திரமாக திகழ்ந்தது போல் இன்றைய நவீன காலகட்டமாகிய வள்ளல் பெருமானை யுகபுருஷராக கொண்ட சத்யயுகத்தில் மேட்டுக் குப்பம் சித்திவளாக திருமாளிகையை வள்ளல் பெருமான் அவர்கள் தனியொருவராக தனியொருவராக நான்கு ஆண்டுகள் ஞானத்தில் கிரியைகளும் அதை தொடர்ந்து ஞானத்தில் யோகமும் செய்து அருள்சக்தியை பெறக்கூடிய கேந்திரமாக உருவாக்கியுள்ளார்.அங்கு குறைந்தபட்சம் அரை நாழிகையிலிருந்து (12நிமிடம்)ஒருஜாம நேரத்திற்குள் (3மணிநேரம்)அவரவர் பக்குவத்திற்கேற்ப அவரவரின் ஆன்மா சூக்கும தேகத்தில் பெற்ற ஆன்மபெருக்கம் ஆன்மவேகம் அடிப்படையில் சென்று அமரகூடிய ஆன்ம படிநிலையில் சென்று அமர்ந்து அவரவர் ஆன்மாவின் தினசரி கடமையை சன்மார்க்க பணியாக செய்யலாம்.அங்கு ஆண்டவரின் அருள் சக்தியை அபரிமிதமாக பெறக்கூடிய நேரம் நள்ளிரவு12மணி முதல் 1மணிவரை என அறிக. இதிலுள்ள ஆன்ம வேகம் ஆன்ம பெருக்கம் பற்றிய விளக்கம் எமது மெய்ஞானத்தை அடையும் வழி எனும் கட்டுரை தொகுப்பில் அறிக.
ஜோதிமைந்தன்.
12-08-2023
காலை 5.55 மணி
12-08-2023
மகாமந்திரபீடம் எனும் இராணிப்பேட்டையிலுள்ள எமது இல்லம் முழுக்க முழுக்க மகாமந்திர சக்தியை கொண்டு எப்படி இல்லற சன்மார்க்க வாழ்க்கை வாழ்ந்து சத்ய யுக சன்மார்க்க பணி செய்யலாம் எப்படி வாழ்க்கையிலும் வெற்றி கொள்ளலாம் என்ற இலக்கணத்தை வகுக்கும் பணியை செய்து வருகின்றோம். 1977முதல் சமயதேவர்களுடனும் பக்தி கலந்த திருமுறை நிலை சன்மார்க்கம் கடைபிடித்து வந்த நானும் எமது குடும்பத்தாரும் 1995 முதல் வள்ளல் பெருமானின் பேருபதேச அடிப்படையிலான சுத்த சன்மார்க்க வாழ்க்கை இயல்பை கடைபிடித்தோம். 1998 முதல் இல்லத்தையே சன்மார்க்க கேந்திரமாக மாற்றி அருளியல் வெளிப்பாடுகளை இறைவன் ஏற்படுத்தும் சாட்சியங்களை உருவாக்கி வருகிறோம். மகாமந்திரத்தை பயன் படுத்தி வாழ்க்கைக்கு தேவையான பொருள் சக்தியையும் ஆண்டவரிடம் சன்மார்க்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என்ற சாட்சியத்தை உருவாக்க தேவையான சங்கம் சார் திரியம்பல விண்ணகர திருமாளிகையை உருவாக்கி வருகிறோம்.இந்தமகாமந்திரபீடம் எனும் வாட்சப் குரூப் முழுமையாக மகாமந்திரபீட கருத்து வெளிப்பாடுகள்இங்கு பயிற்சி பெற்ற சன்மார்க்க அன்பர்களுக்கு தெரிவிக்க செயல்பட்டு வருகிறது.சுபம்
இன்றைய அருளியல் கருத்து வெளிப்பாடு யாதெனில் 15/08/2023 செவ்வாய்கிழமை மதியம் 12.45 முதல் 2.00 மணிக்குள் சன்மார்க்க புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அன்னதானமும் உடைதானமும் செய்து சத்யயுக அடிப்படையிலான புத்தாண்டை வரவேற்கலாம்.இந்த செயல் அவரவர் வாழ்க்கையில் அடுத்த ஒரு ஆண்டுக்கு அருளியல் வரவும் பொருளியல் வரவும் சிறப்பாக அமையும்
ஜோதிமைந்தன்.
12-08-2023
காலை 5.55 மணி
11-08-2023
பொருள்சக்தி நிரம்பிய தனவான்கள் பிற மனிதர்கள் மற்றும் ஜுவராசிகள் மீது அன்பை பொழிவதும் உபகாரம் செய்வதும் தயவு.அருளாளர்கள் பிற மனிதர்கள் மற்றும் ஜீவராசிகள் மீது அன்பு கொண்டு அருள்சக்தியையும் உபகாரத்தையும் சேர்த்து வழங்குவது கருணை.இறைவன் மனிதர்கள் மற்றும் பிற ஜீவராசிகள் மீது பொழிவது தனிப்பெருங்கருணை. மனிதன் மற்றவர்களிடம் மற்றும் ஜீவராசிகளிடம் தயவாக இருந்தால் பச்சைதிரை வரை விலக்கி கொள்ளலாம்.அதற்கும் மேலான திரைகளை விலக்கி கொள்ளும் பொருட்டு அவரவர் முயற்சியால் இறைவனிடம் பெற்ற அருள்சக்தியையும் பிறருக்கு பயன்படுத்துவதின் மூலம் கருணையை செலுத்தினால் கர்த்தாக்கள் படி நிலையையும் கடக்கலாம்.அதற்கு மேல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அந்த ஆன்மநேயர் மீது தனிப்பெருங்கருணையை வழங்கி மரணமிலா பெருவாழ்வை வழங்குவார். தயவின் வெளிப்பாடு உடல் பிணியாகிய பசிப்பிணி நீக்குதல் எனும் அன்னதானம். கருணையின் வெளிப்பாடு உயிர்ப்பிணிநீக்குதல் எனும் மனிதனால் நீக்க இயலாத துன்பங்களை இறைவனிடம் விண்ணப்பித்து நீக்குதல் எனும் செயலை தாய்மை உணர்வுடன் செய்தல். அதே சமயம் அவரவர் ஆன்மாவின் முன் கோபம் டம்பம் ஈர்ஷை போன்ற விஷங்கள் வெளிப்பாடு ஆகக்கூடும்.அவற்றை அவரவர் ஞான அறிவினால் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.சுபம்.
ஜோதிமைந்தன்.
11-08-2023
காலை 5.55 மணி
10-08-2023
ஆன்மநேய சன்மார்க்க சங்க அன்பர்களுக்கு உலகியலில் அனைவரும் எல்லாவகையான இராஜயோகம், வாசியோகம் போன்ற யோகங்கள் யோகத்தில் யோகம் எனும் வழிபாட்டில் பதினோறாவது நிலையை அடிப்படையாகக் கொண்டது ஆனால் பெருமான் அவர்கள் ஆரம்பிப்பதே வழிபாட்டில் பதிமூன்றாவது நிலையான ஞானத்தில் சரியையிலிருந்து ஞானத்தில் கிரியை ஞானத்தில் யோகம் ஞானத்தில் ஞானம் ஆகிய வழிபாடுகளை தான் தனியொருவராகவே செய்து வந்தார்.ஞானத்தில் சரியையில் சீடர்களை புரிய கொண்டு வருவதே அவருக்கு பெரும் சிரமமாக இருந்தது.இபாபோதும் அன்பர்கள் பெரும்பாலும் யோகத்தில் யோகம் எனும் ஞான சரியையை விட இரண்டு நிலை கீழாக உள்ள யோகத்தையே கடை பிடிக்கிறார்கள்.சுபம்.
ஜோதிமைந்தன்.
10-08-2023
காலை 5.55 மணி
9-08-2023
இன்றைய கால கட்டத்தில் அருட் பெருஞ்ஜோதி ஆண்டவரின் நேரடி அருளரசாட்சியை வடலூரினை கேந்திரமாகக் கொண்டு இறைவன் நடத்துகிறார் பச்சைத்திரைவரை கடக்கும் சக்தி பெற்றவர்கள் பெறாதவர்கள் அனைவரும் அருள் சக்தியை பெற்றுக்கொள்ளலாம். அனனைத்து திரைகளையும் கடந்து யோகிநிலையையும் கர்த்தாக்கள் நிலையையும் கடக்கும் பக்குவமுள்ளவர்கள் இறைவனைமேலும் மேலும் நெருங்க விரும்பும் அனைத்து சன்மார்க்க அன்பர்களுக்கும் தேவையான அருள்சக்தியை சித்தி வளாக திருமாளிகையில் பெற்றுக் கொள்ளலாம்.சத்தி சத்தர் நிலைவரை செல்லும் பக்குவமும் அனுமதியும் பெற்றவர்கள் அவரவர் எங்கிருக்கிறார்களோ அங்கேயே அபரிமிதமான அருள்சக்தியை பெற்றுக்கொள்ளலாம்.
சுபம்.
ஜோதிமைந்தன்.
9-08-2023
காலை 5.55 மணி
8-08-2023
கடந்த பனிரெண்டாயிரம் ஆண்டுகளில் கர்த்தாக்கள் திருவாதிரை நட்சத்திலிருந்தும் திருவோண நட்சத்திரத்திலிருந்தும் முதலில் அருள்சக்தியை பெற்றார்கள்.கடுந்தவமியற்றி கர்த்தாநிலையடைந்தபின் தமது அருள்சக்தியை தொடர்ந்துபெற மக்களுக்கு நற்காரியங்கள் புரிவதின் மூலம் தொடர்ந்து தமது தெய்வாம்சத்தை தக்க வைத்துக் கொண்டார்கள். ஆங்காங்கே சரியை நிலை கோவில் அமைத்து தமது ஸ்தூல உடலை இழந்த பின்னும் அந்தந்த கோவிலிலிருந்து அருளரசாட்சி செய்தார்கள்.அதற்கு உதாரணம் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில்.வள்ளல்பெருமான் ஞானதேகம் பெற்று யுகபுருஷராக மாறியபின் மக்களுக்கு அருள்சக்தியானது சித்திரை நட்சத்திரம் வழங்குகிறது.இந்த யுகத்தில் தர்மநெறியை கடைபிடித்து ஒழுக்கங்களை கடைபிடித்து துர்க்குணங்களை மாற்றி நற்குணங்களை கடைபிடித்தாலே போதுமானது அதுவே வாழ்க்கைதவமாக இறைவன் எண்ணற்ற அருள் சக்தியை வழங்குவார்.சுபம்.
ஜோதிமைந்தன்.
8-08-2023
காலை 5.55 மணி
7-08-2023
கடந்த பனிரெண்டாயிரம் ஆண்டுகளில் இமயமலைத்தொடரில் உள்ள திருக்கயிலாய மலை பூமியை அருளரசாட்சி செய்யும் ஒரு முக்கிய கேந்திரமாக செயல்பட்டது.பக்தி வழிபாட்டில் கர்த்தாக்களை பிரம்மா, விஷ்ணு,சிவன் என்று மும்மூர்த்திகள் என்பார்கள். ஞான வழிபாட்டில் பஞ்சகிருதி கர்த்தாக்கள் என்று ஐந்துபடிநிலைகளிலுள்ள ஆன்மாக்கள் பிரம்மா,விஷ்ணு ,ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன் என்றும் ஐந்தொழில் அதிபர்கள் என்றும் போற்றபடுகிறார்கள். திருக்கயிலாயம் என்பது ருத்ரபடிநிலையிலுள்ள ஆன்மாக்கள் உறையும் நொடித்தான்மலை, மகேஸ்வர படிநிலையிலுள்ள ஆன்மாக்கள் உறையும் வெள்ளிமலை, சதாசிவ படிநிலையிலுள்ள ஆன்மாக்கள் உறையும் கையிலைமலை ஆகிய மூன்று சிகரங்களின் தொகுப்பே திருக்கயிலாயம் என்பது.சூக்குமதேகத்தில் அடுத்த பிறவி எடுக்கும்வரை அவர்கள் அங்கே இருப்பார்கள்.மனிதர்கள் திருக்கயிலாய யாத்திரை செல்லும்போது அவரவர் சூக்கும தேகத்தை பலப்படுத்தி அந்தந்த படிநிலைக்கான ஆன்ம வேகத்தை பெற்றிருந்தால் கர்த்தாக்களை காணலாம். சுபம்.
ஜோதிமைந்தன்.
7-08-2023
காலை 5.55 மணி
6-08-2023
சரியை வழிபாட்டில் கிரியை வழிபாட்டை ஒருங்கிணைத்து மந்திர சக்தியால் சமஸ்கிருதம் மூலம் கோவில்கள் இயங்குகின்றன.ஒரு சில கோவில்கள் மட்டும் மந்திரசக்தியால் இயஙகுவதுடன் அந்த கோவிலை ஆங்காங்கே வாழ்ந்த சித்தர்களின் ஆன்மசக்தியும் சேர்ந்து இரட்டை சக்தியால் இயங்குகின்றன. அப்படி இயங்கும் கோவில்கள் மட்டும் பொருளாதாரம் நிறைந்த கோவில்களாக இயங்குகின்றன.அத்துடன் இறைவனின் நேரடி அரசாட்சியிலும் சில கோவில்கள் இயங்குகின்றன.அவற்றை முன்னோர்கள் ஜோதிர்லிங்க கோவில்கள் என்று வகுத்து மக்கள் வணங்குகின்றனர். அதுபோன்ற கோவில்கள் மூன்று சக்தியால் செயல்படுகின்றன.அதில் குறிப்பிடத்தக்கது திருவண்ணாமலை சுபம்.
ஜோதிமைந்தன்.
6-08-2023
காலை 5.55 மணி
5-08-2023
பதினான்காம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் அனைத்தும் தமிழ்மொழி வழிபாட்டின் மூலம் ஆன்ம சக்தியால் இயங்கும் கோவில்களாக மக்கள் வழிபாட்டு தலங்களாக செயல்படுத்த பட்டன.மாலிக்காபூர் படையெடுப்பால் கோவிலின் செல்வ வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு பராமரிக்கப்படாமல் செயலிழந்தன. விஜயநகர பேரரசின் எழுச்சியாலும் முயற்சியாலும் தமிழக கோவில்கள் சமஸ்கிருத வழிபாட்டின் மூலம் மந்திர சக்தியால் இயங்கும் கோவில்களாக செயல்பட தொடங்கின.தமிழ்நாட்டில் ஏறக்குறைய நாற்பதாயிரம் கோவில்கள் தமிழ் மன்னர்களால் கட்டபட்டதின் காரணம்.ஸ்தூல உடல் வாழ அரணமனை கட்டினார்கள்.தாம் இயற்கை எய்தியபின் தமது சூக்கும உடல் வாழவும் தொடர்ந்து அருளரசாட்சி செய்யவும் கோவில்கள் அமைத்தார்கள்.அந்த கோவிலை ஆன்ம சக்தியால் இயக்கும் சூட்சுமத்தை அறிந்து செயல்பட்டார்கள்.அவரவர் அருள்சக்தியை இழந்து மீண்டும் மனித பிறவிக்கு வந்துவிடவே அடுத்து வந்த அரசர்களும் வாரிசு சண்டையில் ஈடுபாடு காட்டவே கோவில்கள் ஆன்ம சக்தியை இழந்தன.சுபம்
ஜோதிமைந்தன்.
5-08-2023
காலை 5.55 மணி
4-08-2023
வேதகால நாகரீகம் என்பது பழந்தமிழர் நாகரீகத்தை அடிப்படையாக கொண்டு காஞ்சி பல்கலைகழகம் நாளந்தா பல்கலைகழகம் பாடலிபுத்திரம் ,புருஷபுரத்திலிருந்த தட்சசீல பல்கலைகழகம் ஆகிய பல்கலைகழகங்களால் சமஸ்கிருதமயமாக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்டன, தமிழிலிருந்த அறம்,பொருள் இன்பம் வீடு என்ற நான்கு பழந்தமிழர் வாழ்வியல் பண்புகள் சமஸ்கிருத சொல்லுரு பெற்று தர்ம,அர்த்த, காம ,மோட்சம் என சதுர்விதபுருஷார்த்தம் என பெயர் பெற்றன.ஆக மொழியால் பழந்தமிழர் நாகரீகம் சமஸ்கிருதத்தால் சுவீகரிக்கப்பட்டு வேத வழிபாடு என்று பெயர் பெற்று ஓங்கி உயர்ந்த நிலையடைந்தது. சுபம்.
ஜோதிமைந்தன்.
4-08-2023
காலை 5.55 மணி
3-08-2023
உலகளாவிய மக்கள் பயன் படுத்தக் கூடிய வாழ்க்கை இயல்பை, தேவையை வாழ்ந்த முறையை உலக மக்கள் குறைந்த பட்ச செயல் திட்டமாக ஏற்றுக் கொண்டால் உலக அமைதி ஏற்படும். வள்ளல் பெருமான் உருவாக்கிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ஓரளவு பழந்தமிழர் நாகரீக இயல்பை அடியொற்றியே உள்ளது. பல ஆதாரங்களில் முக்கியமான ஒன்றாக திகழ்வது மாயாதிரை வண்ணங்களும் அதனிடிப்படையிலான மனித வாழ்க்கையும் என அறிக. உலக அமைதியை விரும்பும் சங்கத்தார் தமிழர் பண்பாட்டையும் சங்க கருத்துக்களையும் இணைத்துவெளிம்படுத்தும் எமது கருத்துக்களையும் mahamandhirapeedam.org என்ற வலைத்தளத்தில் விரிவாக காண்க.சுபம்
ஜோதிமைந்தன்.
3-08-2023
காலை 5.55 மணி
2-08-2023
சரியை வழிபாடு எனும் உருவ வழிபாடு தன்னை தவிர மற்ற அனைத்திலும் இறைவனை தேடுதல் ஆகும். வள்ளல் பெருமான் அவர்கள் உருவ வழிபாடு செய்பவர்கள் உருவ வழிபாடு செய்யுங்கள் அருவ வழிபாடு செய்பவர்கள் அருவ வழிபாடு செய்யுங்கள் அவரவர் பக்குவ நிலைக்கேற்ப வழிபடுங்கள் என்று கூறுகிறார்.அவரை பொறுத்தவரை சரியையில் ஒவ்வொன்றையும் ஆரம்பித்து ஞானவழிபாட்டில் ஞானதேகமாகிய ஒளிதேகம் பெற்று ஆன்ம சுழற்சியை பூர்த்தி செய்தார். தம்மை பின்பற்றும் சன்மார்க்க அன்பர்களுக்கு குரு என்ற முறையில் கூட தமது உருவத்தை வணங்குவதன்மூலம் உருவ வழிபாட்டிற்கு ஊக்கமளிக்கும் தன்மையை தடுத்தார்.அனைவரையும் நேரிடையாக ஏக இறைதத்துவத்தை வலியுறுத்தினார்.இதையெல்லாம் செய்து கொண்டிருந்தால் ஆயுள் போதாது கிடைத்தற்கரிய மனித பிறவியை வீணடிக்காதீர்கள் என கருணை கட்டளையிட்டார்.சரியை வழிபாட்டை விடமுடியாதவர்கள் இந்த ஜோதி விளக்கில் இறைவன் இருப்பதாக பாவனை செய்து வழிபட்டுவாருங்கள் உங்கள் உள்ளத்தில் நற்குணங்களையும் வாழ்க்கையில் நல்ஒழுக்கங்களையும் கடைபிடிப்பதின் மூலம் அலங்கரிக்கின்றோம் ஒரு திருச்சபையதிலே அதாவது எமது மனதிலே அமர்ந்தருள் ஜோதி எனக்கூறி இறைவனை எழுந்தருள அழையுங்கள் என்கிறார்.சுபம்.
ஜோதிமைந்தன்.
2-08-2023
காலை 5.55 மணி
1-08-2023
எத்துணையும் பேதமுறாது இருப்பவன் தான் மனிதன் அப்படி வாழ்வதற்கு கல்வி தந்ததுதூன் பழந்தமிழர் நாகரீகம் அந்த நாகரீகத்தின் செயல்பாட்டில் சமயமதங்கள் தோன்றும்போது அவற்றின் அடிப்படை ஆதாரமாக கருத்துக்கள் மாறிப்போயின.அப்படி மாறிய கருத்துக்கள் சமஸ்கிருதத்தில் எழுத்துரு பெறும்போது அந்தந்த சமய தேவர்களின் உரிமைகளான.உதாரணமாக சில குறியீடுகள் யோகசக்தியால் மனிதன் பயன்படுத்த முற்படும்போது அவன் மாமனிதனாக மாறி மக்களால் போற்றப்படுகிறான். காலம்அவரது வாழ்க்கையை தெய்வீக வாழ்க்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு புராணமாக உயர்வு நவிற்சி இணைந்து யோகசக்தியானது அவருடைய ஆயுதமாக உருவக படுத்தப்பட்டு கடவுளாக ஏற்று சமயதேவராக மாமனிதர் சமுதாயத்தால் அங்கீகரிக்கப்படுகிறார்.
இந்தவகையில் பழந்தமிழர் பண்பாட்டின் கொடையாக கௌமார சமயம் வேல் உருவத்தையும் சைவ சமயம் மேல் நோக்கிய சூலத்தையும் சாக்த சமயம் கீழ் நோக்கிய சூலத்தையும் வைணவ சமயம் சக்கர வடிவையும் உவரவர்பிரதான இறைவனுக்கு ஆயுதங்களாக சுவீகரித்துக் கொண்டன. பழந்தமிழர் பண்பாட்டில் சூலம் இரண்டு பக்கமும் மும்முனை கொண்ட யோகசக்தியாக அனுபவப்பட்டது. சைவமும் சாக்தமும் அதை பிரித்துக் கொண்டன.இன்றைய காலகட்டத்திலும் இருபுற சூலம் பொங்கல் பண்டிகைகளில் கிராம விவசாய வீடுகளில் வரைவார்கள்.சன்மார்க்க அன்பர்கள் மகாமந்திரத்தை முழுநம்பிக்கையுடன் கூறிவந்தால் இந்த அனுபவ உண்மைக்கான சாட்சியத்தை பெறலாம். சுபம்.
ஜோதிமைந்தன்.
1-08-2023
காலை 5.55 மணி
31-07-2023
உலகிலுள்ள இறை வழிபாடுகள் அனைத்தும் சரியை கிரியை யோகம் ஞானம் நான்கு நிலைகளை விரித்தால் பதினாறுநிலைகள் அவற்றில் ஏதேனும் ஒன்றில் பொருந்தும்.பழந்தமிழர் நாகரீகம் மொழி அனைத்தும் வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே கன்னியாகுமரி வரையும் மேற்கே சிந்து முதல் கிழக்கே பிரம்மபுத்திரா வரையும் தோன்றிய ஞானிகளுக்கும் சமயங்களுக்கும் மாதங்களுக்கும் ஆதார சுருதி பழந்தமிழர் வாழ்வியலே என கொள்க.இனிப்புக்கு ஆதாரம் சர்க்கரை அதிலிருந்து பல இனிப்பு பண்டங்கள் உருவாக்குவது போல்.பண்டம் உருவானபின் சர்க்கரை தெரியாது.அதுபோல் பழந்தமிழர் பண்பாட்டிலிருந்து பலசமயங்கள் மதங்கள் ஞானிகள் தோன்றினர் அவர்களை எல்லாம் தமது கடவுளர்களாக பிறகு உருவான சமயங்கள் மதங்கள் பங்கு போட்டுக் கொண்டன. சன்மார்க்க சங்கத்தாரை பொறுத்தவரை மக்கள் வணங்கும் சமய மத கடவுளர்கள் எல்லாம் நமது முன்னோர்கள் என்ற அடிப்படையில் மரியாதை வழங்கினால் போதுமானது.நமது வாழ்க்கை தேவைகளை ஏக இறைசக்தியான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் மட்டுமே கேட்க வேண்டிய இயல்புதான் தீர்வாகும்.சுபம்
ஜோதிமைந்தன்.
31-07-2023
காலை 5.55 மணி
30-07-2023
வள்ளல் பெருமான் அவர்கள் சாதி அடிப்படையிலோ குணங்கள் அடிப்படையிலோ மொழியின் அடிப்படையிலோ யாரையும் வெறுத்து ஒதுக்கவில்லை தன்னை நாடி வந்தவர்களை சத்துவ குணமாகிய வெண்மை குணத்திற்கு மாறும் தன்மையை ஒழுக்கத்தை வலியுறுத்தி வெளிப்படுத்தினார்.தமிழ்,சமஸ்கிருதம்,ஆங்கிலம் மூன்றிலும் புலமை பெற்று மும்மொழி பாடசாலை நடத்தினார்.அவருக்கும் பிராமணர்கள் என்று கூறப்படுகின்ற பார்ப்பன சமூகத்தார் எதிரிகள் என்ற தவறான கருத்துக்கள் பரவியுள்ளது.வள்ளல் பெருமான் அவர்களை நீதிமன்ற வழக்கில் சிக்கவைய்த்தபோதுகூட அவருடன் ஐந்து தில்லை வாழ் அநதணர்களையும் இணைத்துதான் வழக்கு புனையப்பட்டது.அந்த வழக்கிலிருந்து பெருமான் அவர்கள் விடுவிக்கப்பட்டு மற்றவர்கள் ஐம்பது ரூபாய் அபராதம் கட்டியதாக கூறப்படுகிறது.மேலும் குணகோட்பாட்டில் கருப்பு என்பது அறிவுசூன்ய நிலை குணத்தை அடிப்படையாக கொண்டது வெண்மை என்பது அறிவு பூரண நிலையை அடிப்படையாகக் கொண்ட தன்மை காட்டுவது என்பதை குறிக்கும்வகையில் தமது பாடலில்
அகத்தே கருத்து புறத்தே வெளுத்திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்தி சன்மார்க்க சங்கத்தை அடைவித்திட வருவிக்க உற்றேன் என்று கூறுகிறார்.இந்த இலக்கணத்தில் காவிநிறமானது நான்காவது மூன்றாண்டுகள் கல்வியின் மூன்றாம் ஆண்டில் மொத்த கல்வியின் பனிரெணாடாம் ஆண்டு கல்விசீருடையாகும் இராஜச குணத்தை அடிப்படையாகக் கொண்ட தேசபக்திக்காக துறவு மேற்கொள்ளும் துறவிகளுக்கானது. அறிவுசார் தெய்வ பக்தியின் உச்ச நிலை வெண்மை தேச பக்தியின் உச்சநிலை காவி.எனவேதான் காவி இராஜச துறவிகளுக்கானது என்று பெருமான் கூறினார். மேலும் தேச பக்தி தெய்வ பக்தி இரண்டையும் வலியுறுத்தும் விதமாக காவியும் வெள்ளையும் மாற்றி,மாற்றி போட்டு கோவில் சுவர்களை அலங்கரித்துள்ளனர்.
சுபம்.
ஜோதிமைந்தன்.
30-07-2023
காலை 5.55 மணி
29-07-2023
வேதகால நாகரீகத்தில் ஆன்மாவின் குணங்கள் மூன்று எனகூறி அவற்றை தாமஸம் இராஜசம் ,சத்துவம் என்றும் மூன்றாக்கினர். தாமஸம் கொண்டவர்கள் அசுரர்கள் என்றும் இராஜசம் கொண்டவர்கள் வீரம் செறிந்த மனிதர்கள் என்றும் சத்துவம் கொண்டவர்கள் தேவர்கள் என்றும் வகைப்படுத்தினார்கள். சமண மதம் தோன்றியபிறகு அவர்கள் இந்த குணங்களை பழந்தமிழர்கள் கடை
பிடித்த நிறத்தின் பெயரால் குணங்களை எடுத்துக்கொண்டு அந்தந்த குணங்கள் அவரவர் பிறந்த குடிபிறப்பால் வருவது அதை மாற்ற முடியாது எனும் கோட்பாட்டை நிறுவி அதற்கு அபிசாதி கோட்பாடு என பெயர் சூட்டினர்.தமிழர்கள்நல்லெண்ணத்தின் அடிப்படையில் கல்வியின்தரத்தை வண்ணங்களால் வெளிப்படுத்த அந்த கோட்பாடானது காலங்கள் மாறி சமயங்கள் தோன்றும்போது அதுவே சாதிப்பிரிவினையாக மாறிப் போனது.ஆனால் வள்ளல் பெருமான் தோன்றி அந்த நிறங்களை மனித நிலையில் சாதிப்பிரிவினைக்கு பயன் படுத்தக்கூடாது அந்த நிறங்கள் அனைத்தும் அவரவர் ஆன்ம பக்குவத்திற்கு ஏற்ப ஆன்மாக்கள் தெய்வநிலையை அடையும் பிரபஞ்சத்திலுள்ள வெளிகள் எனக்குறிப்பிட்டு ஆன்மஞான தடஙகல்கள் எனும் மாயாதிரைகள் என வகைப்படுத்தினார். கல்வியின் மேன்மையும் அனுபவமும் சூழ்நிலைகளும்தான் ஆன்ம பக்குவத்தை உருவாக்கும்.குடிமரபோ அல்லது சாதியோ ஆன்ம பக்குவத்தை உருவாக்காது என்ற சன்மார்க்க கருத்தை உருவாக்கினார்.சுபம்.
ஜோதிமைந்தன்.
29-07-2023
காலை 5.55 மணி
28-07-2023
பழந்தமிழர் நாகரீகத்தில் கல்வி என்பது மிகச்சிறப்பாக இருந்தது.இயற்கையாக மனிதன் பிறக்கும்போது எட்டுவகையான துர்க் குணங்களுடன் பிறக்கிறான் கல்வியும் அனுபவமும் சூழ்நிலையும் நற்குணவானாக மாற்று கிறது.பழந்தமிழர்கள் அந்த குணங்களின் வெளிப்பாட்டை கலாச்சாலை சீருடையில் வைத்தார்கள்.ஆறுவயதில் கலாச்சாலையில் சேர்க்கும்போது முதல் வருடம் கருப்பு உடை வழங்கப்பட்டது இரண்டாம் ஆண்டு கருமேக நிறமாக மாறியது மூன்றாம் ஆண்டு சாம்பல் நிறமாகியது. இப்படியாக முதல் மூன்று ஆண்டுகள் கருப்பு சார்ந்த நிறங்களும் இரண்டாவது மூன்று ஆண்டுகள் நீலம் சார்ந்த நிறங்களும் மூன்றாவது மூன்று ஆண்டுகள் பச்சை சார்ந்த நிறங்களும் நான்காவது மூன்று ஆண்டுகள் சிவப்பு சார்ந்த நிறங்களும் ஐந்தாவது மூன்று ஆண்டுகள் மஞ்சள் சார்ந்த நிறங்களும் ஆறாவது மூன்று ஆண்டுகள் வெள்ளை சார்ந்த நிறங்களும் சீருடையாகி அன்றைய தமிழ் இளைஞன் இயற்கை குணங்களுடன் அறிவு ஆரம்ப நிலையில் கருப்பு சீருடையில் கல்வி கற்க ஆரம்பித்து வெள்ளை சீருடையில் முழக்கல்வியும் ஆன்ம ஞானமும் பெற்று வாழ்க்கையை ஆரம்பித்தான்.சுபம்
ஜோதிமைந்தன்.
28-07-2023
காலை 5.55 மணி
27-07-2023
யாம் குறிப்பிடுகின்ற பழந்தமிழர் பண்பாட்டு காலம் எனக்கூறினாலும் வேதகால நாகரீகத்திற்கு முந்தைய நாகரிகம் எனக்கொண்டாலும் சமஸ்கிருத உருவாக்கத்திற்கு முற்பட்ட காலம் எனக்கொண்டாலும் நிலப்பகுதியில் கிடைத்த தொல்லியல் எச்சங்களுக்கு முன்னதாக நடந்த நிகழ்வுகள் எனக் கருதினாலும் இவையனைத்தையும் தன்னகத்தே கொண்ட இந்த வரலாற்று நிகழ்வுகள் இன்றைய காலகட்டத்திஸிருந்து 12500 ஆண்டுகளிலிருந்து 8500ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் ஆகும். ஆனால் இந்த கால கட்டங்களை சாட்சியமாக எடுக்க சராசரியாக 5000அடி கடல் ஆழமுள்ள இந்து மகா சமுத்திரத்தை ஆய்வு செய்யும் திறமையும் அதற்கான முனைப்பும் மனிதர்களுக்கு ஏற்படும்போது இந்த கருத்துக்கள் நிரூபணமாகும். யாம் இங்கே குறிப்பிட்ட விஷயங்களில் ஏற்கனவே கூறப்படும் செய்திகள் இடம் பெறாமல் போகலாம் மறைந்துபோன உண்மைகளை வரலாற்றில் பொருத்தி சன்மார்க்கத்தை நிலை நிறுத்த வேண்டிய காலத்தின் கட்டாயம் கட்டுரையின் வெளிப்பாடு.பழந்தமிழர் வரலாறு புராணங்களாக மாறி சமஸ்கிருதத்தின் மூலமாக எழுத்துரு பெற மேலும் 3500ஆண்டுகள் எடுத்துக்கொண்டு 5000ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் வேதங்களும் புராணங்களும் சமஸ்கிருத வார்த்தைகளால் எழுத்துரு பெற்றன. 800 ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஜோதிடம்,மருத்துவம் போன்ற சாஸ்திரங்கள் சமஸ்கிருத எழத்துரு பெற்றன.காலத்தின் அடிப்படையில் மேலும் விவரமறிய மெய்ஞானத்தை அடையும் வழி எனும் தொகுப்பில் வழங்கியுள்ளோம். சுபம்.
ஜோதிமைந்தன்.
27-07-2023
காலை 5.55 மணி
26-07-2023
தமிழர் நாகரீகம் செழிப்படைந்து இரண்டு முறை கடற்காற்று எனும் ஊழி தோன்றி நாகரீகத்தின் வாழும் பகுதிகளை விழுங்கி விட்டது குறிப்பாக அவற்றில் மதுரை,கபாடபுரம், மணவூர் எனும் சிறப்பான மாநகரங்கள் இருந்து நாற்பத்தொண்பது நாடுகளை பாண்டிய மன்னர்கள் தலைமையில் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டதாகவும் சங்க பாடல்கள் குறிப்பிடுகின்றன.அதில் இரண்டு மன்னர்கள் தங்களின் அரசாட்சியில் செய்த செயலுக்காக காரணப்பெயராக சொல்லும் பெயரே சிறப்பு பெயராக அமைந்தது.
தமிழர்களின் பொருள் வளமையை குறிக்கும் வகையில் முத்து எனும் ரத்தின கற்களால் அலங்கரிக்கப்பட்ட மூவாயிரம் தேர்களை வைத்திருந்ததால் வெண்தேர்ச்செழியன் எனும் பெயர் பெற்றான்.
தமது ஆட்சிகாலத்தில் அருள்சக்தியை பெறுவதற்காக தொடர்ந்து யாகங்கள் செய்து வந்ததின் மூலம் பல்யாகசாலை முதுகுடுமிபெருவழுதி எனும் சிறப்பு பெயரை பெற்றான்.(இங்கு யாகம் என்று குறிப்பிடப்படுவது தமிழ் மொழியை கொண்டு நடத்தபடுவது).இந்த தமிழ் யாக முறை அகத்தியம் எனும் இலக்கண நூலும் இன்னும் பிற தமிழ் நூல்களும் கடல்கோளால் அழிந்தவாறு வழக்கொழிந்து போயிருக்க கூடும்.சுபம்
ஜோதிமைந்தன்.
26-07-2023
காலை 5.55 மணி
25-07-2023
இதுவரை கிடைக்கப்பெற்ற அகழ்வாராய்ச்சி சான்றுகளில் சுமேரிய நாகரீகமே மிகப் பழமையானதாக கருதப்படுகிறது. ஆனால் அதற்கு முற்பட்ட பழந்தமிழர் நாகரீகம் (முதல் சங்க காலம்)ஆராய்ச்சி கணக்கில் வரவில்லை பழந்தமிழர் பாடல்களில் மட்டுமே கிடைக்கிறது.மேரு என்றால் தெய்வீக மலை சுமேரு என்றால் நான்கு தெய்வீக மலை என்று அர்த்தம் வேத நாகரீகத்தில் குறிப்பிடப்படும் மேரு பஃறுளி மற்றும் குமரி ஆறுகளுக்கு இடையில் இருந்த மலை. யூப்ரடிஸ் டைகிரிஸ் நதிகளுக்கு நடுவில் இருந்த மேருமலையின் பெயரால்தான் சுமேரிய நாகரீகம் பெயரிடப்பட்டுள்ளது. மற்ற இரு மேருமலைகளின் சான்று சரியாக கிடைக்கப் பெறவில்லை.
ஜோதிமைந்தன்.
25-07-2023
காலை 5.55 மணி
24-07-2023
சன்மார்க்க அன்பர்கள் காலத்தை பின்னோக்கி பார்ப்போம்.வள்ளல் பெருமான் அவர்கள் சாதியும் மதமும் சமயமும் காணா ஆதி அனாதியாம் அருட்பெருஞ்ஜோதி என்றார்கள் ஒருகாலத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தமிழ்மொழியே பேசுமொழியாக இருந்தது.பிறகுதான் பல்வேறு மொழிகளும் சாதிகளும் சமயங்களும் மதங்களும் தோன்றின. தமிழ்மொழியின் தொன்மையை உரைக்க கல்தோன்றி மண்தோன்றா காலம் என்பார்கள் அதன் புரிதல் யாதெனில் கற்கால நாகரீகம் எனும் குறிஞ்சி,முல்லை நில வாழ்வியல் உருவாகி மண்சார்ந்த நாகரீகமான மருத நில நாகரீகம் தோன்றாத காலத்திலேயே தமிழர் வாழ்வியல் தோன்றியது என்பதாகும்.சுபம்
ஜோதிமைந்தன்.
24-07-2023
காலை 5.55 மணி
23-07-2023
நமது சூரிய குடும்பமானது பிரபஞ்சத்தில் போட்டான் பெல்ட் எனும் காஸ்மிக் வளையத்துள் நுழைந்து விட்டது அந்த பகுதி காஸ்மிக் கதிர்களால் உருவாக்கப்பட்டது.அந்த கதிர்களை அருள்சக்தியாக மாற்றி ஏற்றுக்கொள்ளும் பக்குவம் சைவ உணவு உட்கொள்ளும் மனித உடலுக்கு இருக்கிறது இன்னும் 80ஆண்டுகளில் முழுமையான அருள்சக்தியை உட்கொள்ளும் ஆற்றல் பெற்ற கோடிக்கணக்கான மனிதர்கள் பிறவி எடுப்பார்கள் அந்த வழிமுறை சன்மார்க்க சங்க வாழ்க்கை இயல்பே வழங்கும். சரியானகாலகட்டத்தில் தற்போது நாம் வாழ்கின்றோம். அன்பர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய காலகட்டம் இது.சுபம்.
ஜோதிமைந்தன்.
23-07-2023
காலை 5.55 மணி
22-07-2023
தற்போது சில மாதங்களாக குலதெய்வங்களை ஆன்மாக்களைவணங்குங்கள் என மும்முரமாக எல்லா கடவுள் நம்பிக்கையாளர்களும் விளம்பர ஆன்மீகம் செய்கிறார்கள் கர்த்தாக்கள் உட்பட அனைத்து சூக்கும தேகிகளும் மனிதபிறவிக்கு வந்துவிட்டார்கள்என்ற உண்மையை சன்மார்க்கிகள் உரக்க சொல்லவேண்டிய நேரமிது.இதுயுகசந்திகாலம் இப்போது ஆண்டவரின் நேரடி அரசாட்சி காலம் சன்மார்க்க அன்பர்கள் சாகாக்கலை கைவருகிறதோ இல்லையோ சூக்கும தேகத்தை பலப்படுத்தி படிநிலைகளிலாவது இடம் பெறுங்கள் என்கிறோம். ஆனால் பெரும்பாலான அன்பர்கள் விளம்பர மாயையில் சிக்குண்டு கருப்புதிரையைகூட கடக்க முன்வருவதில்லை.காலமுள்ளபோதே பயன்படுத்த முன்வாருங்கள் சுபம்
ஜோதிமைந்தன்.
22-07-2023
காலை 5.55 மணி
21-07-2023
உலக மாந்தர்கள் யாரும் சன்மார்க்கத்திடம் எதிர்பார்க்கவில்லை அவர்களுக்கு தேவையான வாழ்க்கை இயல்பு இங்கே கிடைக்குமென்று,ஆனால் அனைவருக்கும் தேவையான அனைத்தும் கிடைக்க கூடிய கருவூலம் சன்மார்க்கம்தான் என்று அறியமாட்டார்கள்.அவர்களுக்கு தேவைப்படுகிறது சன்மார்க்க வாழ்க்கை அதை புரியவைக்க வேண்டிய கடமை ஒவ்வொரு சன்மார்க்க அன்பர்களுக்கும் உள்ளது.பசிப்பிணி நீக்குதல் அதில் முதல்படியாக உள்ளது பசி தவிர்த்தல் யாருக்கு செய்யவேண்டும் என்பது அக இனத்தார் புற இனத்தார் என வித்தியாசமின்றி அனைவருக்கும் உணவு பசித்தவர்க்கு வழங்கலாம். அடுத்த கட்டமாக மாமிச உணவு களை தவிர்க்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தை தேவைபடுபவர்களுக்கு எடுத்துரைக்கலாம்.
மாமிச உணவை தவிர்த்தவர்களுக்கு அருளுணவு பிரபஞ்சத்திலிருந்து உண்ணக்கூடிய உத்தியை வழங்கலாம்.அதன் மூலம் பிணி மூப்பு,சாக்காடு ஆகிய பாதிப்புகளிலிருந்து தப்பிக்க வாழ்க்கை இயல்பை பயிற்றுவிக்கலாம். இதுவே உலகினில் உயிர்களுக்குறுமிடையூரெலாம் விலக நீயடைந்து விலக்குக மகிழ்க சுத்த சன்மார்க்க சுக நிலை பெறுக உத்தமன் ஆகுக ஓங்குக என்ற வள்ளல் பெருமானின் வாழ்த்துக்கு இலக்கணம்.
ஜோதிமைந்தன்.
21-07-2023
காலை 5.55 மணி
20-07-2023
வள்ளல் பெருமான் அவர்கள் இப்போது தோன்றியுள்ள சத்யயுகத்தின் யுகபுருஷர் என்பதால் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் மூலமாக பிரபஞ்ச அருளரசாட்சிக்கு அடிப்படை இலக்கணம் வகுக்க வேண்டும். சாதாரண மனித ஆன்மாக்களை சத்திய யுக சட்டப்படி 512 கோடி ஆன்ம அனுபவ சித்துக்களாக மாற்றி தேவ சபையை நிரப்பும் வகையில் கர்த்தாக்களாகவும், மாயா தெய்வ படிநிலையை நிரப்பும் தேவதைகளாகவும் மாற்றி ஐந்தொழில் செய்து சத்யயுகத்தை பரிபாலனம் செய்ய வேண்டும் அதன் காரணமாக மனித நிலையில் சன்மார்க்க சங்கத்தின் மூலமாக எவ்வளவு புகழ் ஒரு மனிதன் அடைந்திருந்தாலும் சன்மார்க்கத்தை முழுமையாக கடைப்பிடிக்காமல் வாழ்ந்தால் அப்படிப்பட்ட ஆன்மாக்களை ஆண்டவரிடம் ஒப்புகொடுப்பதின் மூலம் ஆன்ம நஷ்டம் ஏற்படும் போது காணாமல் இருந்து விடுவார். சன்மார்க்க அன்பர்கள் உலகறி வேதாகமத்தை கடந்து ஊன்றிய வேதாகமத்தில் லயிக்க வேண்டும். சுபம்.
ஜோதிமைந்தன்.
20-07-2023
காலை 5.55 மணி
19-07-2021
வள்ளல் பெருமான் அவர்கள் இப்போது தோன்றியுள்ள சத்யயுகத்தின் யுகபுருஷர் என்பதால் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் மூலமாக பிரபஞ்ச அருளரசாட்சிக்கு அடிப்படை இலக்கணம் வகுக்க வேண்டும். சாதாரண மனித ஆன்மாக்களை சத்திய யுக சட்டப்படி 512 கோடி ஆன்ம அனுபவ சித்துக்களாக மாற்றி தேவ சபையை நிரப்பும் வகையில் கர்த்தாக்களாகவும், மாயா தெய்வ படிநிலையை நிரப்பும் தேவதைகளாகவும் மாற்றி ஐந்தொழில் செய்து சத்யயுகத்தை பரிபாலனம் செய்ய வேண்டும் அதன் காரணமாக மனித நிலையில் சன்மார்க்க சங்கத்தின் மூலமாக எவ்வளவு புகழ் ஒரு மனிதன் அடைந்திருந்தாலும் சன்மார்க்கத்தை முழுமையாக கடைப்பிடிக்காமல் வாழ்ந்தால் அப்படிப்பட்ட ஆன்மாக்களை ஆண்டவரிடம் ஒப்புகொடுப்பதின் மூலம் ஆன்ம நஷ்டம் ஏற்படும் போது காணாமல் இருந்து விடுவார். சன்மார்க்க அன்பர்கள் உலகறி வேதாகமத்தை கடந்து ஊன்றிய வேதாகமத்தில் லயிக்க வேண்டும். சுபம்.
ஜோதிமைந்தன்.
19-07-2021
காலை 5.55 மணி
18-07-2021
சன்மார்க்க வாழ்க்கை என்பது சுலபமானது தான் துர்க்குணங்களை நீக்கி நற்சிந்தனைகளை விதைத்து நற்குணங்களை பயிராக்கி நல்லொழுக்கங்களை அறுவடை செய்ய வேண்டும். ஓரு ஆணோ அல்லது பெண்ணோ அவர்கள் சன்மார்க்கியாக இருந்தால் அவர்களை ஆதரவு தேடி ஆன்மநேய தர்மம், மனிதநேய தர்மம், யுக தர்மம், குடும்ப தர்மம், வணிக தர்மம், பண்பாட்டு தர்மம் மற்றும் பல்வேறு வகையான தர்மங்கள் வரிசை கட்டி நிற்கும் அப்போது எது தர்மம் எது நிலையான தர்மம் எது ஆன்மாவுக்கான தர்மம் என்று ஆராய்ந்து ஆராயும் போது ஏற்படும் சங்கடங்களை துடைத்தெறிந்து உண்மையான தர்மநெறிப்படி வாழ அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மனிதனுக்கு
தற்சுதந்திரம் வழங்குகிறார். அதை பகுத்தாய்ந்து செயல்படும்போது சன்மார்க்கி படிநிலை உயர்ந்து மாயாநிலை , யோக நிலை போன்ற நிலைகளை கடந்து கர்த்தாவாகிறான். இது வாழ்வியல் சாதனைகளாக அமையும் . துன்பமாக மனம் உணரும் வெற்றி பெறும் போது ஆன்ம லாபம் பெற்று உயரும். அதுவே ஆன்மாவின் லட்சியமாக இருக்கும். சுபம்
ஜோதிமைந்தன்.
18-07-2021
காலை 5.55 மணி
17-07-2021
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் உருவாக்கப்பட்ட அருளியல் சட்டமானது ஓரு அற்புதம் மனிதர்கள் யதார்த்தமாக பேசுவார்கள் கலி முற்றி விட்டது, நாத்திகம் மலிந்து விட்டது, சமுதாயத்தில் ஒழுக்க கேடுகள் மலிந்து விட்டது கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று பேசுவார்கள். ஆனால் தான் தருமத்தின் குரலாக ஒலிக்க முன்வரமாட்டார்கள். தர்மத்திற்கு தம்மை அர்ப்பணித்து செயல்படுபவர்கள் தம்மை வெளிப்படுத்தி கொள்ளமாட்டார்கள்.முழுமையாக அருட்பெருஞ்ஜோதியர் எதை செய்ய சொன்னாரோ அதை செய்துவிட்டு ஆத்ம பயணத்தை தொடர்ந்து நடத்துவார்கள். எந்த அளவுக்கு அருளியல் சமுதாய ஒழுக்கம் சீர் கெட்டு நாத்திகவாதம் பெருகி மக்களால் செயல் பட முடியாத பிரமிப்பை உருவாக்குகிறதோ அந்த சமயத்தில் இதை சரி செய்ய அருட்பெருஞ்ஜோதியரால் உத்தரவு வழங்க பெற்றவர்கள் அமைதியாக செயல் பட்டு ஆரவாரத்தை கடவுளின் பெயரால் அடங்குவார்கள். அந்த வகையில் ஆண்டவரால் வருவிக்க உத்தரவு பெற்று வந்தவரை வள்ளல் பெருமானார் அவர்கள் அவர் பணியை பூர்த்தி செய்ய நம் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் சத்விசாரம் செய்து வாழ்க்கை இயல்பை சன்மார்க்க ரீதியாக கடைபிடிப்பதின் மூலம் ஆத்ம பயணத்தை ஸ்தூல உடலாலும் சூக்கும உடலாலும் தொடர்வோம். சுபம்
ஜோதிமைந்தன்
17-07-2021
காலை 5.55 மணி
16-07-2021
சன்மார்க்கம் என்பது எதையும் பொது நோக்கத்தோடு அணுகுவது. இறைவன் ஒரு அருளியல் ரீதியான சட்டத்தை இயற்றினால் அதை மனிதன் தனது டம்பம் எனும் துர்க்குணத்தால் தமது பெருமைக்காக பயன்படுத்தும் போது மானுடவியலில் கடுமையான ஏற்ற தாழ்வை உருவாக்குகிறது. அருளியல் சட்டம் சொல்வது எந்த ஒரு மனிதரும் அருளுணவை ஏற்று கொள்ளும் போது அவர்களை மற்றவர்கள் தொட்டால் அது அருளுணவு யோகா சக்தியால் பிரபஞ்சத்திலிருந்து ஏற்று கொள்பவனுக்கும் நற்பயன் தராது. அப்போது அவனை தொடுபவனுக்கும் யோகத்தால் வெளியேற்றப்படும் விஷமானது பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்கள். ஆகவே இறை சிந்தனை செயல் என்பது சரியை, கிரியை, யோகத்தால் கடைபிடிப்பவரை மற்றவர்கள் யாரும் தொட வேண்டாம் அந்த நேரத்தில் என்று ஞானிகளால் உருவாக்கபட்டு அருளியல் சட்டம் மனித நிலையில் நிரந்தரமான தீண்டாமையாக உருவெடுத்தது. மனிதர்கள் அதை அவரவர் லாபத்திற்கு பயன்படுத்துகையில் இறைவன் கோபப்பட்டு நாகா ரோகமாக வெளிப்படுத்தி மனிதர்கள் கடைபிடிக்கவில்லை எனில் செத்துப்போவார்கள் என்ற நிலையுள்ளது என்று அரசாங்கமும் விஞ்ஞானிகளும் எடுத்து சொல்லும் நிலையை உருவாக்கிவிட்டார். இப்படியாகவே இறைவன் வழங்கும் அருளியல் சட்டங்கள் தவறாக பயன்படுத்தினால் விளைவுகள் கடுமையாக எதிர்வினையாற்றும் என்பதும் ஒரு அருளியல் சட்டமாகும். சுபம்
ஜோதிமைந்தன்
16-07-2021
காலை 5.55 மணி
15-07-2021
சன்மார்க்கம் என்பது எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்னும் கருத்தை அடித்தளமாக வைத்து ஜீவகாருண்யம், சத்விசாரம், பரோபகாரம், என்ற அடிப்படை இலக்கணங்களால் அலங்கரிக்கப்படுவது. சன்மார்க்கத்திற்கு ஆன்ம நிலையில் எதிர் நிலை என்று எதுவும் கிடையாது. ஆனால் வன்முறை, பஞ்சமா பாதகம் செய்தல் , வள்ளல் பெருமான் கூறிய மனுமுறை கண்ட வாசகத்திலுள்ள பாவங்களை தெரிந்தே செய்பவர்களின் நோக்கங்கள் அனைத்தும் சன்மார்க்க எதிர்மறை வினைகளாகும். எனவே சன்மார்க்கிகளுக்கு எதிரிகள் கிடையாது. சன்மார்க்கத்தையும், சன்மார்க்கிகளையும் எதிரணியாக கருதுபவர்கள் உண்டு எனவே சன்மார்க்க வழி நிற்போர் எப்போதும் இது போன்ற மாயைகளிலிருந்து தற்காத்து கொண்டு அருட்பெருஞ்ஜோதியரின் வெளிப்பாட்டை எதிர் நோக்கி காத்திருத்தல் வேண்டும். சன்மார்க்கிகளாக இருப்பவர்கள் இந்த வலைதளத்தை எல்லா சன்மார்க்க அன்பர்களும் படிக்கும் நிலையை உருவாக்க வேண்டும். உலக ஞானிகள் இதை தினசரி படிப்பதற்கு முன்பாக உலக மாயைகள் தனது தொழில்நுட்ப அறிவால் ஞானம் மக்களிடம் சென்று சேராத வண்ணம் மறைக்கின்றன. தற்போது ஈரான் நாட்டிலுள்ள மிலேச்ச மாயை ஒன்று நமது வலைத்தளத்தின் முதல் பக்கத்தை இருட்டடிப்பு செய்து (ஹேக் செய்து) ஏழு நாளில் சுமார் ஐந்து லட்சம் ரூபாய்க்கு சமமான தொகையை தரவில்லை எனில் உமது வலைத்தளம் முற்றிலுமாக அழிக்கப்படும் என நிறுத்த கடிகாரத்தை செயல்படுத்தி மிரட்டல் விடுக்கிறது. சன்மார்க்கம் என்பது ஞானிகளால் வடிவமைக்கப்படுவது என்பதால் யாம் முன்னெச்சரிக்கையாக கருத்துக்களை தொகுப்பு களஞ்சியமாக வைத்துள்ளோம். இப்போதைய சூழலில் தேன் துளிகள் தினசரி பார்க்க இயலும். எனவே அன்பர்கள் கிலேசமடைய தேவையில்லை. சில நாட்களில் சரி செய்து விடுவோம். தினசரி தேன்துளிகளை பார்த்துக் கருத்துக்களை உள்வாங்கி கொள்க. சுபம்.
ஜோதிமைந்தன்
15-07-2021
காலை 5.55 மணி
14-07-2021
மனிதனின் பேராசை அதீத சக்திபெற்ற மனிதனை உருவாக்கும் முயற்சியில் உள்ளது. அது விஞ்ஞான ரீதியாக முயற்சிக்கும் போது அந்த முயற்சியானது எதிர்மறை எண்ணம் கொண்ட மனிதனையே உருவாக்கும் என்பதை இந்த முயற்சியில் ஈடுபடும் நாடுகளும் அதை சார்ந்த விஞ்ஞானிகளும் உணரவில்லை. மனித சமுதாயத்திற்கு துர்க்குணங்கள் என்பது பிறக்கும் போது இயற்கையாக வருவதுநற்சிந்தனைகளும், நற்குணங்களும், நல்லொழுக்கமும், பயிற்சியாலும், சுற்று சூழலாலும், தாய் தந்தை, குருவாலும் உருவாக்கபடுவது. இந்த உலகின் அதிர்ஷ்டம் இதை உணர்ந்த ஞானிகள் இந்த பாரத தேசத்தில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் உருவாவது. துரதிஷ்டம் பழமையான வரலாறை கொண்ட சீனா போன்ற தேசங்களில் மெய் ஞானத்தை மறந்து விஞ்ஞானத்தால் சாதிக்க நினைப்பது. இதன் விளைவாக மனித சமுதாயத்தில் சர்வாதிகாரத் தன்மை கொண்டு அண்டை நாடுகளான திபெத், தைவான் போன்ற நாடுகளில் உள்ள மனிதர்கள் மூலமாக அவர்களை ஆய்வுக் கருவியாக பயன்படுத்துவது. தமது(சீனா ) நாட்டு பெண்களின் கர்ப்ப வாசத்தில் உள்ள குழந்தைகள் பிறக்கும் முன்பே விஞ்ஞானம் ஆய்வு செய்து சுமார் ஒரு கோடி குழந்தைகள் ஆய்வுத் தோல்வியால் பிரசவமும் தோல்வியடைந்தது என்று ஊடகங்களின் மூலம் தெரிய வரும்போது உலக மக்கள் அனைவரும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எனக் கூறும் சன்மார்க்க அன்பர்களின் மனம் வேதனையடைகிறது. உண்மையான கருணை போதிக்கும் சன்மார்க்கமே இதுக்கு தீர்வு காண இயலும். இன்னும் இருப்பத்தைந்து ஆண்டுகளில் இது போன்ற மனிதர்களை உருவாக விஞ்ஞான முனைப்பு காட்டுகிறது. நல்லெண்ணம் கொண்ட மனிதர்கள் சன்மார்க்கத்தை வாழ்க்கை இயல்பாகக் கொண்டு அருளாலும், பொருளாலும் உலகெங்கும் சன்மார்க்க நிலவ செய்வதே தீர்வாகும். சுபம்.
ஜோதிமைந்தன்
14-07-2021
காலை 5.55 மணி
13-07-2021
இந்த பூவுலகம் சன்மார்க்கத்தை வாழ்க்கை இயல்பாக கொள்ளும் போது தான் உலகில் சாந்தியும் சமாதானமும் நிலவும். பூவுலகம் வாழ்க்கை இயல்பாக சன்மார்க்கத்தை கொள்ள வேண்டுமெனில் பெண்கள் சன்மார்க்கத்தில் வாழ்க்கையை நடத்த வேண்டும். கடந்த நூற்றாண்டில் சன்மார்க்கம் ஆண்களுக்கு மேடை பேச்சு நிலையிலேயே செயல்படுத்தப்பட்டு அத்தி பூத்தார் போல் ஆங்காங்கே சில சன்மார்க்க அன்பர்களும் வாழ்ந்தனர். இயற்கையாகவே அவர்களும் சன்மார்க்கத்தை தமது குடும்பத்தில் செயல்படுத்தி பெண்களையும் அறிவுரை கூறி சன்மார்க்க இயல்புநிலைக்கு தயார் செய்யாமல் ஆண்கள் சன்மார்க்கத்திலும் பெண்கள் சமய வழிப்பாட்டிலும் வாழ்க்கை நடத்திய சூழல் இருந்தது. ஆனால் இன்றைய சூழல் ஞான வழிபாடாகிய ஜோதி வழிப்பாட்டை பெண்களும் சுலபமாக புரிந்து கொள்ளும் அளவிற்கு பெண்கள் படிப்பறிவு பெற்றுள்ளனர் . சன்மார்க்கம் என்பதே தாய்மை உணர்வை அடிப்படையாகக் கொண்டது. சமயங்கள் யோகத்தையும், இசையையும்,நடனத்தையும், கூட்டு பிரார்த்தனைகளையும், அடிப்படையாகக் கொண்டது. எனவே இன்றைய சூழல் ஆண்களைவிட பெண்களை விரைவாக சன்மார்க்கம் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.
இறைவனிடம் அருள்சக்தியை அவரவர்கள் பெற்றுக்கொள்ளும் உத்தியை வெளிப்பட வழங்குவது சன்மார்க்கம். சமயங்கள் குருமார்களின் வாக்கு வன்மையால் நிர்ணயிக்கப்படுவது என்பதை ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் புரிந்து ஆன்மீகத்தில் தற்சார்பு நிலையை பூர்த்தி செய்ய முற்படும் போது சன்மார்க்கம் பெரிய அளவில் எழுச்சி பெறும். சாதி, சமய, வருண, ஆசிரம தன்மைகள் மறைந்து போய் நற்குணங்களும், நல்லொழுக்கங்களும், நற்சிந்தனைகளும் முதன்மை பெறும். சுபம்.
ஜோதிமைந்தன்
13-07-2021
காலை 5.55மணி
12-07-2021
சன்மார்க்க சங்கத்தின் செயல்பாடுகள் அனைத்தும் ஆத்ம சக்தியால் வடிவமைக்கப்பட்டவை. சங்கம் சார்த் திருக்கோயில்கள் அனைத்தையும் ஆத்ம சக்தியால் வடிவமைக்கப்பட வேண்டும். சுமார் அறுநூறு ஆண்டுகளாக சமயகோயில்கள் அனைத்தும் மந்திர சக்தியால் செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. சமயகோயில்கள் கூட அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழில் செயல்பாடுகள் நடந்த போது ஆத்ம சக்தியாலேயே இயங்கி வந்தன. அந்நிய மதத்தினரின் படையெடுப்பால் கோவில்கள் கொள்ளை யடிக்கப்பட்டது பின் ஆத்ம சக்தி செயல்பாடுகள் வழக்கொழிந்து கோவில் பாழடைந்த சூழலில் இந்திய கலாச்சாரம் மீண்டு எழும் சூழலில் ஆத்ம சக்தியை நிலைநிறுத்த அருளாளர்கள் இல்லாத தருணத்தில் மந்திர சக்தியால் வடிவமைக்கும் செயல்முறைகளை தன்னகத்தே கொண்ட சமஸ்கிருத மொழியில் தமிழ் கோயில்கள் புதுநிலை கிரியைகள் செயல்பாட்டுக்கு வந்தன. இன்றைய காலகட்டத்தில் சில தமிழ் ஆர்வலர்கள் என்று தம்மை தாமே கூறிக்கொள்பவர்கள் தமிழில் வழிபாடு இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இவர்கள் சமஸ்கிருத மந்திர சக்தியை செயல்படுத்தும் முறையில் கோயில்கள் நடத்தப்படுகின்றன என்பதில் வித்தியாசம் அறியவில்லை. நாத்திகத்திற்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து அருளாளர்கள் தமிழில் உருவாவதையும் தடுத்துவிட்டார்கள். பரிபூரணமாக மந்திர சக்தியால் கோயிலை நடத்தும் வழியையும் பூரணபடுத்தவில்லை. திருக்குறள் தவிர ஒழுக்கத்தை கற்பிக்கும் நூல்களை இளைஞர்கள் அறியாத வண்ணம் மறைத்து விடுகிறார்கள். இவை யனைத்திற்கும் ஒரே தீர்வு அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரமும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்று வள்ளல் பெருமானாரின் கருத்துக்களை முழுமையாக பயன்படுத்தும் அமைப்பும் தான். சுபம்.
ஜோதிமைந்தன்
12-07-2021
காலை 5.55மணி
11-07-2021
சன்மார்க்கம் என்பது உலகளாவியது. சன்மார்க்க கருத்துக்களை வெளிப்படுத்த பல்வேறு கருவிகள் உபயோகப் படுத்தபடுகின்றன. உதாரணமாக துண்டு பிரசுரங்கள் மூலம் எந்த ஒரு ஆன்மீக நிலையங்களையும் ஒரு ஐம்பது கிலோ மீட்டர் சுற்று வட்ட அளவுக்கு கருத்துக்களை கொண்டு செல்லலாம். புத்தகமாக வெளியிடுவதின் மூலம் ஒரு மாநில அளவில் கொண்டு செல்லலாம். திரைப்படங்கள் மூலமாகவும் தொலைக்காட்சி தொடர் மூலமாகவும் சன்மார்க்க நம்பிக்கையாளர்களை அதிகப்படுத்தலாம். வலைத்தளங்கள் உலகளாவிய நிலையில் சன்மார்க்க சிந்தனைகளை எடுத்து செல்லலாம். மகாமந்திர பீடம் எனும் நமது சன்மார்க்க கேந்திரமானது துண்டு பிரசுர நிலையையும் புத்தக வெளியீட்டு நிலையையும் கடந்து விட்டது. எனவே தற்போது வலைத்தள ஊடகத்தை பயன்படுத்தும் வாய்ப்பை வள்ளல் பெருமான் வழங்கியுள்ளார். தற்போது வள்ளலார் குருவாகக் கொண்ட அன்பர்களுக்கு சில நொடிகளில் கருத்துக்களை பறிமாறிக் கொள்ளும் வசதியையும் வாய்ப்பையும் பெருமானார் வழங்கியுள்ளார். அடுத்ததாக மகாமந்திர பீடம் மூலம் வெளிப்பட்ட கருத்துக்களை பொது மக்களிடம் எடுத்து செல்ல வேண்டுமெனில் இன்றைய தொழில்நுட்பத்தில் வலைத்தள தொடர் மூலம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் மூலமோ செயல்பட வேண்டிய சூழலை பெருமான் உருவாக்கும் போது அதுவும் நடக்கும். சுபம்.
ஜோதிமைந்தன்
11-07-2021
காலை 5.55மணி
10-07-2021
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் கூறும் நல்லுலக புலவர்கள் எல்லாம் ஒரு சொல்லரங்கம் சொற்பொழிவுகள் என்றால் சங்ககால புலவர்களின் பாடல்களை மேற்கொள் காட்டி தமது சொற்பொழிவுகளை வடிவமைப்பார்கள். பிறகு படிப்படியாக பண்டைய புலவர்களின் கருத்துக்களை பாரதியாரிலும், பாரதிதாசனிலும் தேடித்தேடி பேசினார்கள் . பிறகு புலவர் பெருங்கூட்டம் இரண்டாக பிளவுப்பட்டது. நாத்திகவாதி புலவர்கள் கடவுளர்களையும் சமகால பண்பாட்டையும் மனிதர்களையும் வரைமுறையற்று சபையேற்கக்கூடாத வார்த்தைகளை பேசி அடுக்கு மொழியால் அலங்கரித்தார்கள். ஆத்திகவாதி புலவர்களோ பிற மொழியாளர்களையும், புறச்சமயங்களையும் உயர்த்தி பேசி அதை நம் நாட்டு இதிகாசங்களோடு ஒப்பாய்வை ஒப்பிப்பதின் மூலம் கைத்தட்டல். பெற்றார்கள். நாத்திகவாதிகளை விட்டு விடுவோம். ஆன்மிகவாதிகள் என்பவர்கள் இறைவனிடம் அருளியல் பெறும் முயற்சிகளை முன்வைக்காமல் தற்காலத்தில் வேதங்களிலும், புராணங்களிலும், இதிகாசங்களிலும், திருவருட்பா, திருவாசகம் போன்ற தமிழ் மறைகளிலும் உள்ள கருத்துக்களை மேற்கோளாக காட்டாமல் தாமே கூறுவது போல் கூறி தம்மை ஆன்மீக குருவாக முன்னிலைப்படுத்தி விளம்பரம் தேடி அருளியல் பெறாத நிலையில் அகந்தை மனதில் நிறைந்து அழிந்து போகிறார்கள்.எம்மை பொறுத்தவரை வள்ளல் பெருமானின் கருத்துக்களை அருளியல் பெற மக்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். திருவருட்பாவை படித்தவர்களுக்கு அது நன்கு புரியும். திருவருட்பா படிக்க இயலாதவர்கள் ஜோதிமைந்தன் கூறியதாகவே எடுத்துக் கொள்ளலாம். நானுரைக்கும் வார்த்தைகளெல்லாம் என் ஞானகுரு வள்ளல் பெருமானார் வார்த்தைகளே என்று நம்பும் வரை உங்களை பெருமானார் கைவிடமாடடார். இது சத்யம். சுபம்
ஜோதிமைந்தன்
10-07-2021
காலை 5.55மணி
9-07-2021
சன்மார்க்கம் என்பது ஆன்ம லாபத்தை நோக்கி பயணப்படுவது. ஆன்ம லாபம் என்பது ஆன்மாவே காரியப்படுவது. ஆன்மா காரியப்படும்போது மனம் காரியப்படுகிறது. மேலும் ஸ்தூல உடலும், சூக்கும உடலும் தனித்தனியே காரியப்படும் வல்லமையை ஆண்டவரிடம் பெற்றுக்கொள்வது. இரண்டு உடல்களும் தனித்தனியே காரியப்படும் வல்லமை பெறும்போது இப்பிறவியில் இருக்கும் வரை ஸ்தூல உடலை ஆரோக்கிய நிலையில் வைத்துக் கொள்ளும் பக்குவத்தை பெறுவது. சூக்கும உடலை ஒளி தேகமாக மாற்றுவது. சூக்கும உடல் முற்றிலும் ஒளி தேகமாக மாறும் போது ஸ்தூல உடல் அதில் இரண்டற கலந்து எங்கு வேண்டுமானாலும் சென்று ஸ்தூல உடலை வெளிப்படுத்துவது. இதுவே ஞான தேக வெளிப்பாடாக அமையும். இவை அனைத்திற்கும் அடிப்படை ஆதாரம் ஆன்மநேயம் ஆகிய புலால் மறுத்தல். இன்றைய காலகட்டத்தில் புலால் மறுத்து உடலில் உள்ள மிருக கொழுப்பு வெளியேற்றப்பட்டவுடன் ஆண்டவரால் சூக்கும தேகம் வழங்கப்பட்டுவிடும். சன்மார்க்கிகளின் கடமை எண்ணங்களாலும், குணங்களாலும், ஒழுக்கங்களாலும் சூக்கும தேகத்தை பல படுத்தி ஒளி தேகமாக மாற்றுவது. சூக்கும தேகம் பெற்றவன் இறந்த பின் செய்யும் காரியம் கருமாதி ஆகிய கிரியைகளுக்கு அப்பாற்பட்டவன். கிரியைகளில் செய்யப்படும் பூஜையினால் அந்த பூஜையை விரும்புபவரின் நம்பிக்கைப்படி அவனுக்கு பிரேத தேகத்தைதான் வழங்க முடியும். அவனது வாரிசுகளும் தனக்காகவும் தனது வாரிசுகளுக்காகவும் பாவம் செய்யாதவனுக்கு ஆண்டவர் வழங்கும் சூக்கும தேகமே உயர்ந்தது. வாரிசுகளுக்கு பணத்தோடு சேர்ந்து பாவத்தை வாரிசுகளுக்கு விட்டு செல்பவனுக்கு சடங்குகள் தேவைப்படுகிறது. சுபம்
ஜோதிமைந்தன்
9-07-2021
காலை 5.55மணி
8-07-2021
பண்டைய காலத்தில் மானுட நாகரீகம், பண்பாடு, தத்துவம், சமய கோட்பாடுகள், ஒழுக்கங்கள் அனைத்தும் ஆற்றங்கரைகளில் உருவாகின. பாரதம் தவிர உலகிலுள்ள பண்டைய நாகரீகங்கள் அனைத்தும் ஏதேனும் ஒரு முக்கியமான ஆற்றை அடிப்படையாக கொண்டு உருவாகின. உதாரணமாக நைல் நதி நாகரீகம், மஞ்சள் ஆற்று நாகரீகம் போன்றவை. ஆனால் பாரத நாட்டில் உள்ள முன்னோர்கள் பலநூறு ஆறுகள் இருந்தாலும் ஏழுநதிகளை சமமாக கருதி தெய்வமாக போற்றி அவைகளை அடிப்படையாகக் கொண்டு வாழ்வியல் முறை கட்டமைக்கப்பட்டது. கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, சிந்து, காவேரி ஆகிய நதிகளை அனைவரும் இமயம் முதல் குமரி வரை அனைத்து மனிதர்களும் சமமாக கருதி வழிப்பட்டனர். ஆங்காங்கே உள்ள நதிகளும் ஆங்காங்கே உள்ளவர்களுக்கு வாழ்க்கை ஆதாரமாகக் கொண்டு வழிபட்டு வந்தனர். பேதம் பாராட்டபடவில்லை. அது போல் மொழிகளாலும் பேதங்கள் இல்லை. மேலும் ஞானிகளும், சித்தர்களும், அனைத்து பிரதேச மக்களுக்கும் பொதுவாக கருதி மரியாதை செலுத்தினார்கள. இந்த அடிப்படையை ஆதாரமாகக் கொண்டு நவீனபடுத்தபட்ட கொள்கையே வள்ளல் பெருமானாரின் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம். சுபம்.
ஜோதிமைந்தன்
8-07-2021
காலை 5.55மணி
7-07-2021
வள்ளல் பெருமான் அவர்கள் புலால் மறுத்தவர்களை அக இனத்தார் என்கிறார். சன்மார்க்கத்தின் முதல் படி புலால் மறுத்தல். அடுத்ததாக நற்குணங்களை வெளிப்படுத்துதல் . அதன் முலமாக ஒழுக்கங்கள் வடிவமைத்தல். இவையனைத்தையும் இலக்கணப்படுத்தி சன்மார்க்க வாழ்வியலாக கொள்ள வேண்டும். இதை நடைமுறை படுத்தி செயல்படுத்துகையில் ஞானத்தில் கிரியையாகவும் வெளிப்படுகிறது ஆன்ம லாபம் விழையும் சன்மார்க்க அன்பர்கள் அனுபவ ரீதியான அடுத்த செயல்பாடுகளை பற்றி கூட்டாகவோ தனியாகவோ சத்விசாரம் செய்க. அதுவே ஆன்ம லாபம் பெற வழி வகுக்கும். அவ்வாறு செய்கையில் அதுவே வள்ளல் பெருமானின் தெய்வ நிலை சன்மார்க்க சங்கமாக வெளிப்படும் என அறிக. சுபம்
ஜோதிமைந்தன்
7-07-2021
காலை 5.55மணி
6-07-2021
வரலாற்று அறிஞர்கள் தங்கள் வசதிக்காக தற்போதைய கால கட்டத்தில் சுமேரிய நாகரீகம் இருப்பதில் பழமையானது அதற்கடுத்ததாக வருவது சிந்து சமவெளி நாகரீகம் அதற்கடுத்தது வேதகால நாகரீகம் பிறகு புராண இதிகாச கால நாகரீகங்கள் என்று கூறுகிறார்கள். சுமேரிய நாகரீகமே முற்காலத் தமிழர் நாகரீகத்திற்க்கு பிற்பட்டது என்பதை உணர முற்படவில்லை. காரணம் தற்போதுள்ள தமிழர்கள் யாருக்கும் தமிழ்ப்பற்று சிறிதுமில்லை. தமிழர் நாகரீகத்தின் வழித்தோன்றல்கள் தான் சுமேரிய நாகரீகமும், சிந்து சமவெளி நாகரீகமும், வேதகால நாகரீகமும் என்று கூறுவதற்கு தயாரில்லை. ஆன்மீகத்தின் அடிப்படையே மனிதனின் நற்குணங்களும் ஒழுக்கமுமே என்பதை வலியுறுத்தியவன் தமிழன் என்பதை மறந்து நாத்திகம் பேசுபவன் தான் உண்மைத் தமிழன் என்றும் ஆன்மீக நாட்டமுள்ளவன் புறக்கணிக்க பட வேண்டியவன் என்றும் ஒரு சிலரின் கூற்றை வாழ்வாதாரமாக ஏற்றுக் கொண்டுள்ளனர். தமது முன்னோர்களின் பெருமையை நிலை நாட்டுவதை அவமானமாக கருதுகின்றனர். ஆனால் தமிழை மனிதருக்கு தந்தவர் தெய்வ நிலை மனிதர்கள். அவர்களுக்கு தெரியும் எப்படி தமிழை சிறப்பு செய்வது என்று. மனிதர்கள் கர்த்தாக்களிடம் போட்டியிட முடியாது என்பதையும் சத்யயுகம் உருவாகிவிட்டது என்பதையும் வருங்கால வரலாறு பதிவு செய்யும். சுபம்.
ஜோதிமைந்தன்.
6-07-2021
காலை 5.55மணி
5-07-2021
சன்மார்க்கம் என்பது உயிர் பிணி மற்றும் உடல் பிணி ஆகிய இரண்டிற்கும் தீர்வு தருவது. மேலும் இது உடல் பிணி உயிர் பிணி இரண்டையும் வராமல் பாதுகாத்துக் கொள்ளும் வாழ்க்கை இயல்பை கற்பிப்பது . சன்மார்க்கத்தின் மூலம் தற்சுதந்திரம் என்ற அற்புதமான வாய்ப்பை ஆன்ம லாபத்திற்கும் அருளியல் பெறவும் பயன்படுத்தும் உபாயத்தை அழகாக சிரமமின்றி வாழ்க்கை இயல்பாக ஏற்கும் பக்குவத்தை அடையலாம்.
உடற்பிணி யனைத்தையும் உயிர் பிணி யனைத்தையும் மடர்பறத் தவிர்த்த அருட்சிவ மருந்தே என்று வள்ளல் பெருமான் கூறுகிறார். பெரும்பாலான மனிதர்கள் சன்மார்க்க ரீதியான ஆன்மீகம் வயதான ஓய்வு காலத்தில் கடைப்பிடித்தால் போதுமானது எனக் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் ஒரு மனிதன் கர்பத்தில் மனிதக் குழந்தையாக உருவாகும் பொழுது பரியந்தம் வெற்றிகரமான வாழ்வியலுக்கு சன்மார்க்க செயல்பாடுகள் அவசியமேற்படுகிறது. சுபம்.
ஜோதிமைந்தன்
5-07-2021
காலை 5.55மணி
4-07-2021
சன்மார்க்கம் என்பது நற்குணங்களாலும் ஒழுக்கங்களாலும் கட்டமைக்கப்பட்டது. மனதாலும், சொல்லாலும், செயலாலும் இதையே அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கை நடத்தினால் அறம், பொருள், இன்பம், வீடு பேறு அனைத்தும் வாய்க்கும் . பெரும்பாலும் சமயங்கள் அனைத்தும் கிரியைகளாலும் கூட்டு பிரார்த்தனைகளாலும் கட்டமைக்கப்பட்டது.
ஒரு மனிதனை நல்லவனாக உருவாக்க வேண்டும் என்பது தாய் தந்தையர் மனதால் நினைப்பார்கள். குருவானவர் சொல்லால் வடிவமைப்பார். இறைவன் செயலால் நடைமுறை படுத்துவார்.
வள்ளல் பெருமான் அவர்கள் தான் சொல்வதையும் முறைப்படுத்துகிறார். தான் தம்மை நாடியவர்களுக்கு அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன், புரியவில்லை எனில் மிரட்டி சொல்லுவேன் பயனில்லை எனில் தெண்டன் விழுந்து சொல்லுவேன் ஏற்றுக் கொள்ளாத தன்மையெனில் பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன். அப்போதும் சன்மார்க்க செயல்பாட்டை முறைப்படுத்திக் கொள்ளவில்லை எனில் ஆண்டவரிடம் ஒப்படைத்து விடுவேன் என்று குருத்தன்மையை இலக்கண படுத்துகிறார். ஆனால் இறைவன் மனிதனுக்கு வாழ்க்கையில் தற்சுதந்திரம் கொடுத்து விடுகிறார். ஒரு மனிதனை சன்மார்க்கத்தில் தாய், தந்தை, குரு, தெய்வம் அனைவரும் தற்சுதந்திரம் கொடுத்து விடும் சூழ்நிலையில் ஒரு மனிதன் நல்லவனாவதும் கெட்டவனாவதும் அவரவர் மனம், சொல், செயல் தான் நிர்ணயிக்கிறது. சுபம்
ஜோதிமைந்தன்
4-07-2021
காலை 5.55மணி
3-07-2021
சன்மார்க்க சங்கங்கள் அமைப்பதற்கு அதையும் தெய்வநிலையில் செயல்பட வைக்க சங்கம் வைக்க விரும்புபவர் முதலில் அருளாளராக மாற வேண்டும். பிறகு முயற்சித்தால் வள்ளல் பெருமான் உடனிருந்து சன்மார்க்கத்தை நடத்தி இயக்கத்தை நிலை நிறுத்துவார். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் சன்மார்க்க சங்கம் ஆரம்பிக்க நிலம் தேடினால் மனிதர்கள் தமக்கு புண்ணியம் செய்த வாய்ப்பாக கருதாமல் சந்தை விலைக்கு நிலம் வழங்க முன் வருவதில்லை புறச்சமயங்களைப் போல் வெளிநாட்டு பணம் வைத்துதான் சங்கம் வைக்கிறார்கள் என்று பலமடங்கு விலையை கூட்டி சொல்வார்கள்.அல்லது விலை சொல்ல சங்கடப்பட்டு நிலம் தர முடியாது என மறுத்து விடுவார்கள். சன்மார்க்க சங்கத்திற்கு வெளிநாட்டிலிருந்து யாரும் பணம் அனுப்ப வெளிநாடு வாழ் தமிழர்கள் கூட முன்வருவதில்லை அப்படி யாரேனும் இருந்தால் அவர்களையும் பெருமைக்காக சங்கம் நடத்தும் சில அன்பர்களும் நேராக சென்று வாங்கி செலவு செய்து விடுகிறார்கள். உண்மையான அருளாளர்கள் வள்ளல் பெருமான் தவிர யாரிடமும் பொருளை யாசிக்க மாட்டார்கள். வள்ளல் பெருமான் யார் உள்ளத்தில் புகுந்து தாமாக முன்வந்து பணம் தருவார்களோ அதை மட்டுமே பெற்றுக்கொண்டு செயல்படுவார்கள். தெய்வ நிலையில் சங்கம் நடத்த தமது செயலால் வந்த பணத்தையே செலவு செய்வார்கள். இது அந்த அருளாளருக்கும் ஆன்ம லாபம் தரும் அவரிடம் தாமாக முன்வந்து பொருள் கொடுக்கும் அன்பர்களுக்கும் ஆன்ம லாபத்தை வழங்கும் சக்தியை வள்ளல் பெருமான் வழங்குவார். கொடுப்பதும் வள்ளல் பெருமானே வாங்குவதும் வள்ளல் பெருமானே.
ஜோதிமைந்தன்.
3-07-2021
காலை 5.55மணி
2-07-2021
வள்ளல் பெருமான் அவர்கள் இல்லறத்தார்க்கும், துறவறத்தார்க்கும் தனித்தனியே நியதிகளை உருவாக்கி வைத்துள்ளார். பெரும்பாலும் அவருக்கு முன்பிருந்த தமிழ் ஞானிகள் துறவறத்தையே முன்னிலைப்படுத்தி எழுதிவைத்தார்கள். இப்போது சன்மார்க்கம் வாழ்க்கை இயல்பாக கைக்கொள்ள வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. துறவிகளாக இருப்பவர்கள் நற்குணங்கள் நல்லொழுக்கம் ஆகியவற்றை வள்ளல் பெருமான் எழுதிவைத்துள்ளதை கடைபிடித்தால் போதுமானது. இல்லறத்தார்க்கு அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளையும் கடமைகளையும் நடத்தி வர சன்மார்க்கத்தின் அடிப்படையில் வழிக்காட்டப்பட வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை. எனவே நானும் எமது குடும்பத்தாரும், நண்பர்களும், சீடர்களும் பெற்ற சன்மார்க்க அனுபவங்களாகக் கொண்டு இல்லற சன்மார்க்க இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. அதை வெளிப்படுத்தவே மகாமந்திரபீடம் எனும் அமைப்பு உருவாக்கி செயல்படுத்தி வருகிறோம். இந்த அமைப்பில் துறவறத்தார்க்கு பயிற்சி இல்லை. இல்லறத்தார் அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு நிலையும் கடக்கும் வழிமுறை எடுத்தியம்பும் பணியே உலகினில் உயிர்களுக் குறுமிடை யூரெலாம் விலக நீயடைந்து விலகுக மகிழ்க சுத்த சன்மார்க்க சுக நிலை பெறுக என்ற அருளுரையின் படி செயல்படுத்தப்படுகிறது. சுபம்
ஜோதிமைந்தன்
2-07-2021
காலை 5.55மணி
1-07-2021
நமது பாரத தேசத்தில் நடுகல் வழிபாடு முதல் ஞான வழிபாடு வரை அனைத்திலும் முதலில் முழுமையடைந்த மொழி தமிழ். ஆனால் அனைத்தும் அறிந்த தமிழ் குருமார்களாகிய சித்தர்கள் அதை சாதாரண மக்கள் அறிந்து கொள்ளாத வகையில் மறை பொருளாக பாடல்களில் எழுதிவைத்தார்கள். மேலும் யார் மிகக் கடின நடையில் பிறர் பொருள் அறியாத வகையில் பாக்கள் எழுதினார்களோ அவர்களே சிறந்த புலவர்களாக தமிழ் சமூகம் அங்கீகரித்தது மேலும் கற்பனை கலந்த உபமானம், உபமேயம் ஒப்பு ஆய்வு இவற்றை கலந்து பாக்கள் எழுதியவர்களே தமிழ் அரசர்களால் அங்கீகரிக்கப்பட்டு பொன்னும் பொருளும் பரிசுகள் பெற்றனர். வள்ளல் பெருமான் அவர்கள் தான் முதல் முதலில் பாமரரும் புரிந்து கொள்ளும் இயல்பான பாக்களை எழுதினார் அவரது பாடல்களும் பக்குவம் ஏற்பட ஏற்பட எளிமையாக மாறியது. முதல் திருமுறை பாடல்களை விட அடுத்து அடுத்து உள்ள ஆறுதிரு முறைகளும் படிப்படியாக எளிமையாக உள்ளன. உலகிற்கே ஞான மார்க்க வழிகாட்டியான திருவருட்பா பாடல்கள் தமிழர்களாலேயே கையாண்டு முன்னேற இயலவில்லை ஏனெனில் தற்கால தமிழர்கள் ஆங்கில மோகத்தில் தமிழை புறக்கணிக்கிறார்கள். இதன் விளைவு இந்திய ஞானிகள் பெயரால் ஏதேனும் உண்மைக் கருத்துக்களை கூறினால் புறக்கணிக்கும் பெரும்பாலானோர் ஒரு மேல் நாட்டு அறிஞரின் பேரால் வெளிப்படுத்தினால் உடனே அதை பாராட்டி சீராட்டுகிறார்கள். சுபம்
ஜோதிமைந்தன்
1-07-2021
காலை 5.55மணி
30-06-2021
சன்மார்க்கத்திற்கும் சமயங்களுக்கும் உள்ள வேறுபாடு யாதெனில் சமயங்கள் அனைத்தும் குருமார்களால் உருவாக்கப்பட்டு புலமையால் அலங்கரிக்கப்பட்டு சில காலங்களுக்கு பிறகு அதை உருவாக்கிய குருவே புராண ரீதியாக தெய்வமாக மாற்றப்படுகிறார். சமயங்களில் மனதிருப்தியும் சமயங்களை வளர்ப்பவர்களின் பெருமையை வெளிப்படுத்தவும் பயன்படுவதால் அதில் பக்தி மார்க்கம் முக்கியத்துவம் பெறுவதாலும் பொது மக்களின் அவசர கதிக்கு விளம்பரமே முன்னிறுத்துவதாலும் சமயங்களை அடிப்படையாக கொண்ட குருமார்கள் வெகு விரைவாக பொருளாதார வளர்ச்சி பெற்று சமயங்களை பரப்புகிறார்கள்.அதில் சிலர் அந்த சமயத்தை உருவாக்கிய ஞானியின் கருத்துக்கள் மீது நம்பிக்கையை உருவாக்கியதை விட ஞானியின் ஆன்ம செயல் பாட்டில் நம்பிக்கையை உருவாக்குவதில் சிரத்தை கொள்கிறார்கள்.
ஆனால் சன்மார்க்கத்தில் அருட்பெருஞ்ஜோதியர் என்ன கருத்துக்களை வள்ளல் பெருமானுக்கு கொடுத்தாரோ அதையே பாடல் வடிவமாக பெருமானார் மக்களுக்கு வழங்கியதுடன் தம்மை வணங்கினால் எந்த விதத்திலும் உயர முடியாது அருட்பெருஞ்ஜோதியை மட்டுமே வணங்க வேண்டும் என்று கூறியதுடன் தாமே ஒளி தேகம் பெற்று வாழ்ந்து தாம் கூறியதை கவனத்தில் கொண்டு யார் கருத்துக்களை முழுமையாக பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு பரிபூரண அருள்சக்தியையும் ஆன்ம லாபத்தையும் வழங்கி வருகிறார். சுபம்
ஜோதிமைந்தன்
30-06-2021
காலை 5.55மணி
29-06-2021
வள்ளல் பெருமான் அவர்கள் ஒரு முழுமையான தமிழ் மரபில் வந்தவர். அதே சமயம் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் அளவு கடந்த புலமை பெற்றவர். தன்னை தமிழை தாய் மொழியாக கொண்ட மனிதனாக பிறவி கொடுத்ததற்கு மிகவும் இறைவனை நோக்கி சந்தோஷப்பட்டவர். அதே சமயம் சமஸ்கிருதம் புலமை அவருக்கு அந்த மொழியையும் வெறுத்தில்லை. வேறு எந்த மொழியையும் வெறுக்கவில்லை. தமிழ்-சமஸ்கிருதம்-ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் கற்று தரும் பாடசாலை நடத்தியவர். இரண்டு மொழிகளையும் புலமை பெற்றதால் இரண்டையும் ஒப்பாய்வு செய்து ஞானமார்க்கத்திற்கு உகந்த மொழி தமிழ் என்று தேர்ந்து அதில் பாடல்களை பாடினார். மேலும் தமது மொழி புலமையை நிருபிக்கும் வகையில் திருவடி புகழ்ச்சி என்ற பாடலில் பாதி சமஸ்கிருதம் பாதி தமிழும் கொண்டு இயற்றினார். பொதுவாக சமஸ்கிருத தெரியாதவர்கள் சரியான உச்சரிப்பில் சமஸ்கிருத ஸ்லோகங்களை பாராயணம் செய்ய இயலாது. ஆனால் தமிழ் மட்டும் தெரிந்தவர்கள் கூட பாடும் வகையில் எளிய சமஸ்கிருத வார்த்தைகளை கொண்டு அந்த பாடல்களை வடிவமைத்தார். சுபம்
ஜோதிமைந்தன்
29-06-2021
காலை 5.55மணி
28-06-2021
உடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி யனைத்தையு
மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே
– திருவருட் பிரகாச வள்ளலார்(அகவல் வரி 1321-1322)
ஒரு மனிதனுக்கு உடல் பிணி வந்தால் தீர்த்துக் கொள்ள பல்வேறு வகையான மருத்துவங்களும் மருந்துகளும் மருத்துவர்களும் உபகரணங்களும் உள்ளன. ஆனால் உயிர்ப்பிணி சரி செய்ய சன்மார்க்கமே வழியாகிறது. சன்மார்க்கம் மனிதர்களிடையே சாதி, சமய, மத, ஆசிரம, ஆசார,தேசிய வேறுபாடுகளை பார்ப்பதில்லை. எவன் ஒருவன் துர்க்குணங்களை நீக்கி ஒழுக்கத்தை கடைபிடித்து முழுமையாக புலால் உணவை மறுத்து சைவ உணவை உட்கொண்டு ஆன்மநேயத்தை கடைபிடிக்கிறானோ அவனுக்கு உயிர்ப்பிணி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையாலும் வள்ளல் பெருமான் வழிகாட்டுதலாலும் கர்மவினை நீங்கி உயிர்ப்பிணி பாதிப்பிலிருந்து ஆணாயிருந்தாலும், பெண்ணாயிருந்தாலும் முழுமையாக விடுபட இயலும். அதற்கு மகாமந்திரம் துணை நிற்கும். அந்த மகாமந்திரத்தின் அருள்சக்தியை பெருக்கி கொள்ளும் வழிமுறையை அனுபவ ரீதியான ஆய்வுகளை வெளிப்படுத்துவதின் மூலம் மனிதனுக்கு சுயநம்பிக்கையை உருவாக்குவதே இந்த மகாமந்திர பீடத்தின் செயல்பாடு. சுபம்
ஜோதிமைந்தன்
28-06-2021
காலை 5.55மணி
27-06-2021
ஞானத்தில் கிரியையில் மகாமந்திரமானது தனிப்பெருங்கருணையை இரண்டாவது இடத்தில் வைத்து தாரகமந்திரமாக பயன்படுத்தும் உரிமையை வள்ளல் பெருமான் அவர்கள் அகவல் நிலையை கடந்தவர்களுக்கு (ஆண்களில் ஆயிரம் முறை அகவல் படித்தவர்கள் பெண்களில் ஐநூறு முறை அகவல் படித்தவர்கள்) வழங்குகிறார். தாரகமந்திரம் பயன்படுத்தும் போது அகவல் நிலையை கடந்தவர்களே பயன்படுத்த வேண்டும். கூட்டு பிரார்த்தனையாக இருந்தால் அகவல் நிலையை கடந்தவர்களின் தலைமையில் அல்லது முன்னிலையில் செய்ய வேண்டும். தாரக மந்திரம் என்பது விறுவிறுப்பான செயல்பாடுகளை உடையது. எனவே சன்மார்க்கிகள் சர்வ ஜாக்கிரதையாக தாரக மந்திரம் பயன்படுத்த வேண்டும்.
ஜோதிமைந்தன்
27-06-2021
காலை 5.55மணி
26-06-2021
சன்மார்க்கம் என்பது அடுத்த சதுர்யுகத்தை வழிநடத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வள்ளல் பெருமான் வருவிக்க உற்று ஜீவகாருண்யமும் நான்கு ஒழுக்கங்களும் சன்மார்க்க அடிப்படை இலக்கணமாக வகுக்கப்பட்ட ஒரு அருளியல் சட்டமாகும். ஸ்தூலதேகத்துடன் சரியான முறையில் செயல்படும் சன்மார்க்கிகள் சத்யயுகத்தில் சூக்கும தேகத்தில் ஐந்தொழிலதிபர்களாக வள்ளல் பெருமானால் நிலை நிறுத்தப்படுவார்கள். அகத்தே கருத்து புறத்தே வெளுத்து செயல்பட்டால் மீண்டும் பிறவிக்கு அவரவர் பக்குவத்திற்கு ஏற்ற வகையில் அனுப்பப்படுவார்கள். ஒவ்வொரு பிறவியிலும் முழுப்பக்குவம் அடைய வேண்டியே பெருமான் அவர்கள் செயல்படுவார்கள். மகாமந்திரத்தின் பெருமையை ஒருமுறை உணர்ந்தவன் எத்தனை பிறவியெடுத்தாலும் அவனை ஆன்மநேயமிக்க முழு மனிதனாக உருவாக்காமல் விடமாட்டார்கள். ஆனால் துன்பளித்தாங்கே சுகமளிப்பார் என்பதால் இந்த பிறவியிலேயே முழுமையடைய அனைத்து சன்மார்க்கிகளும் முயற்சி செய்ய வேண்டும்.
ஜோதிமைந்தன்.
26-06-2021
காலை 5.55மணி
25-06-2021
இந்த பாரத தாய்த்திரு நாட்டில் பன்னெடுங் காலமாக பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் என்ற பதவிகளும் மக்களின் வாழ்க்கை இயல்பைக்கொண்டு ஆங்காங்கே மக்களின் நல்வாழ்விற்கு பாடுப்பட்டவர்களை இந்த பதவிகளை அடைந்தவர்கள் என்றும் அவர்கள் வாழ்க்கை அனுபவங்களை புராணங்களாகவும் எழுதிவைத்தனர். அவர்கள் ஸ்தூல உடலுடன் இருக்கும் வரை அவர்களை அதிகபட்சமாக குருத் தன்மையாகவே வணங்கி வந்தனர். அவர்கள் ஸ்தூல தேகத்தை விடுத்த பின்னரே அவர்களுக்கு தெய்வத் தன்மை புகுத்த ப்பட்டது. தற்காலத்தில் தம்மை குருவாக பிரகடனப்படுத்துபவர்கள் முன்னோர்கள் எழுதி வைத்த தர்ம சாஸ்திரங்களை மனப்பாடம் செய்து மக்கள் மத்தியில் தமது புலமையை வெளிப்படுத்துகிறார்கள்.
மக்கள் அவர்கள் தொகுப்பாற்றலை நம்பி அவர்களை நோக்கி வரும்போது தம்மை கடவுளின் சொருபமாக வழிபட கூறுகிறார்கள். ஓரு சிலர் உண்மையான கடவுள் தன்மையை வெளிப்படுத்துகிறார்கள். ஒரு சிலர் நற்குணங்களையும், ஒழுக்கத்தையும் சரியாக கடைபிடித்து வழிகாட்டாமல் தம்மையும் கெடுத்து நம்பி வருபவர் வாழ்க்கையையும் வீணடிக்கிறார்கள். இது நாத்திகம் பேசுபவர்களுக்கு சமுதாயத்தை குழப்பமேற்படுத்த வாய்ப்பாக அமைகிறது. எனவே பக்தர்கள் உண்மையான குருவை தேடி கண்டடைந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
ஜோதிமைந்தன்
25-06-2021
காலை 5.55மணி
24-06-2021
பண்டைய கால மன்னராட்சியில் வாழ்ந்த வியாபாரிகளும் தொழிலதிபர்களும் பிற நாடுகளில் பொருளீட்டி அந்த பணத்தை அவரவர் தாய்நாட்டில் கொண்டு வந்து சேமித்தார்கள். நவீன கால வியாபாரிகளும் தொழிலதிபர்களும் பாரத நாடாகிய நமது தாய்நாட்டில் சம்பாதித்த பணத்தை வெளிநாடுகளில் சென்று சேமிக்கிறார்கள். ஆனால் அந்தப்பணம் திரும்பி வராது. தாம் அனுபவிக்க முடியாது என்ற அடிப்படை ஞானம் கூட அறுகிவிட்டது. இன்றைய கோடீஸ்வரர்களுக்கு அந்த பணத்தை இங்கு தாய்நாட்டில் செலவழித்திருந்தால் கூட புண்ணியமாவது கிடைக்கும் . வெளிநாட்டில் சென்று சேர்க்கும் போதே அது உபயோக மற்ற செலவு கணக்கில் இறைவன் எழுதிடுவான் என்பதே அருளியல் சட்டம். சுபம்
ஜோதிமைந்தன்
24-06-2021
காலை 5.55மணி
23-06-2021
பண்டைய மன்னர்களெல்லாம் தமது ஸ்தூல உடலுக்காக அரண்மனைகள் உருவாக்கினார்கள். அவையனைத்தும் நிலையாமையை உணர்ந்தே உருவாக்கினார்கள். அவர்கள் காலத்திற்கு பிறகு அவை அழிந்து போயின. தமிழ் பேசும் நல்லுலகத்தில் வாழ்ந்த மன்னர்கள் தமது ஸ்தூல உடலுக்கு அரண்மனை கட்டியது போல் சூக்கும உடலுக்கு கோயில்கள் கட்டினர். ஸ்தூல உடலை விட்டபின் தமது சூக்கும உடலால் கோயில்களில் இருந்து அரசாட்சி நடத்தினர். இந்த அடிப்படையில்தான் தமிழ் நாட்டில் நாற்பதாயிரம் கோயில்கள் உருவாகின. மேலும் அதில் அருவஉருவமான லிங்கங்களை பிரதிஷ்டை செய்தனர். ஏனெனில் இறைவன் அருளால் தாம் மீண்டும் பிறவி எடுத்துவிட்டாலும் அதன்பின் கர்த்தாவாக மாறிய ஏதேனும் ஆன்மா அந்த கோயிலிலிருந்து அருளரசாட்சி செய்யட்டும் என்ற நற்சிந்தனைதான் அந்த எண்ணம்தான் அவர்களை உயர்நிலைக்கு உயர்த்தியதுடன் அவர்தம் சமுதாயம் நல்லதொரு சூழலில் வாழ்ந்தது. சுபம்
ஜோதிமைந்தன்
23-06-2021
காலை 5.55மணி
22-06-2021
ஆயிரம் முறை அகவல்பாராயணம் செய்த ஆணும் 500 முறை அகவல் பாராயணம் செய்த பெண்ணும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் அங்கீகரிக்கபடுவார்கள் அவர்களால் துர்க்குணங்களை கட்டுப் படுத்த இயலும் நான்கு ஒழுக்கங்களை கடை பிடிக்க இயலும் மேலும் தொடர்ந்து அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரத்தை ஜோதிமுன் அமர்ந்து உச்சரித்து வந்தால் அருளியல் அனுபவங்களும் ஆன்ம இலாபமும் பெறலாம். சுபம்
ஜோதிமைந்தன்.
22-06-2021
காலை 5.55மணி
21-06-2021
ஆன்மநேய அன்பர்களுக்கு வழங்கும் ஆலோசனை யாதெனில் நீங்கள் உங்கள் வாரிசுகளுக்கு பணம், சொத்து ஆகியவைகளை சேர்த்து வைப்பதால் எந்த பயனுமில்லை ஏனெனில் உன்னுடைய வாரிசுகள் அறிவாளிகளாகவும் நல்லவர்களாகவும் இருந்தால் உன் பணம் அவர்களுக்கு தேவைப்படாது, உன்னுடைய வாரிசுகள் முட்டாளாகவும், கெட்டவர்களாகவும் இருந்தால் அந்த பணம் அவர்களுக்கு பயன்படாது. அவர்களுக்கான உனது கடமை உனது வாரிசுகளை அறிவாளிகளாகவும் நற்குணம், ஒழுக்கம் கொண்ட நல்லவர்களாகவும் ஆன்ம நேயமுள்ளவர்களாகவும் வளர்த்து விடுங்கள். மேலும் நீங்களும் உமது முன்னோர்களும் செய்த பாவங்கள் அடுத்த தலைமுறையான உமது வாரிசுகளுக்கு செல்லாமல் நற்காரியங்கள் மூலம் தீர்த்து விடுங்கள். இதுவே மனித சமுதாயத்திற்கு உமது கடமையுமாகும்.
சுபம்
ஜோதிமைந்தன்.
21-06-2021
காலை 5.55மணி
20-06-2021
சன்மார்க்க அன்பர்கள் வள்ளல் பெருமானின் கருத்துக்களை உள் வாங்கி வாழ்க்கை இயல்பாக கொள்ள வேண்டுமென்றால் திருவருட்பா பாடல்களில் அவரது அனுபவங்களை தேடி இயல்பாகக் கொள்ளுங்கள். சித்தர்களிலும், யோகிகளிலும் தேடாதீர்கள். இரண்டையும் உள்வாங்கினால் நமது இயல்புக்கு குழப்பமே மிஞ்சும்.
வள்ளல் பெருமான் அவற்றிலெல்லாம் தேடி அவற்றிலுள்ள நல்லவைகளை எடுத்துக்கொண்டு தமது அனுபவத்தையும் சேர்த்து வழங்கிவிட்டார். மீண்டும் மற்றவர்களில் தேடினால் கால விரயம் தான் ஏற்படும். எனவேதான் வள்ளல் பெருமானின் பேருபதேசத்திலிருந்து அதை ஒட்டிய கருத்துக் களை திருவருட்பா பாடல்களில் தேடி வாழ்க்கை இயல்பாக ஏற்றுக் கொள்ளுங்கள் சுபம்.
ஜோதிமைந்தன்
20-06-2021
காலை 5.55மணி
19-06-2021
கடந்த பன்னிரண்டாயிரம் ஆண்டுகள் கொண்ட சதுர்யுகத்தில் 512 கோடி ஆன்மாக்கள் தெய்வநிலை ஆன்மாக்களாக உயர்ந்து பல்வேறு படிநிலைகளை நிரப்பி அருளரசாட்சி செய்து கலியுகத்தில் மனிதனாக பிறந்து விட்டார்கள். சன்மார்க்க சங்கத்தார் . அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தவிர்த்து வேறு வகையில் அருவஉருவமாகவும் உருவமாகவும் உள்ள தேவதைகளில் அந்த 512 கோடி தேவதைகளில் யாரேனும் ஒருத்தராகத்தான் இருக்ககூடும் அப்படி இருந்த சூழ்ந்லையில் அவர்கள் வள்ளல் பெருமானின் சன்மார்க்க கொள்கைகளை கடைபிடித்து கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதியர் என்று முழுமையாக ஆன்மீக நாட்டம் கொண்டால் தேவையிருப்பின் வள்ளல் பெருமான் அவர்கள் உரியவகையில் அவருக்கு ஆன்ம ரகசியத்தை வெளிப்படுத்துவார். அதை ஞானியாக உணர்ந்து சன்மார்க்க உலக அன்பர்கள் செயல்பட வேண்டும். வள்ளலார் பக்தர் என்ற பெயரில் தம்மை கூறிக்கொண்டு ஏதேனும் சிறுதெய்வங்களையோ கர்த்தாக்களையோ முன்னிலைப்படுத்தி வணங்கி கொண்டிருந்தால் அவர்கள் புராணத்தில் விளங்கிய ஹிரண்யகசிபுவை போல் என்னை வணங்கு என்று கூறும் மனப்பக்குவம் உள்ளவர்களாக வள்ளல் பெருமானால் கருதப் படுவார்கள் அதற்குரிய பலனே அவர்களுக்கு கிடைக்கும்.
சுபம்
ஜோதிமைந்தன்.
19-06-2021
காலை 5.55மணி
18-06-2021
சன்மார்க்கமும் சமயமும் ஒப்பாய்வு செய்கையில் சமயங்கள் தமக்கு வழிகாட்டியாக உள்ள குருவையே இறைநிலைக்கு உயர்த்தி பல்வேறு குருமார்களின் ஞான வெளிப்பாட்டால் பல்வேறு சமயங்களாக மனிதர்களை பிரித்து பார்க்க வழி செய்கின்றன அதற்கு ஆதாரமாக
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
என்ற சுலோகத்தின் வெளிப்பாடாக உள்ளன.
சன்மார்க்கம் என்பது தமது கருத்துக்களை ஏற்று செயல்படும் மனிதர்களை இறை நிலைக்கு உயர்த்தும் வழிமுறையை போதித்து ஞானமார்க்கமாக வெளிப்படுகிறது அதற்கு ஆதாரமாக
எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன்
என்றும்
சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்
என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்
எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்
என்றும் கூறுவதின் மூலம் வள்ளல் பெருமான் ஞானத்தை வலியுறுத்துகிறார்
சுபம்
ஜோதிமைந்தன்
18-06-2021
காலை 5.55மணி
17-06-2021
தமிழர் வாழ்வில் சமயங்களுக்கு முற்பட்ட காலம் என்று ஒன்று இருந்தது. அது தமிழர்களின் ஒழுக்கம். நற்குணங்களை அடிப்படையாகக் கொண்டது அந்த நாகரிகத்தில் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று மட்டுமே கருப்பொருளாக இருந்தது வீடுபேறு என்பது இந்த மூன்றில் வாழ்க்கையில் எப்படி கடைபிடிக்கிறனோ மனிதன் அதனடிப்படையில் தானாக கிடைக்கும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. வீடுபேறு என்பது நான்காவது கருப்பொருளாக தனியாக பிரிக்கும் போது தான் அது சமயங்களாக உருப்பெற்றன.
அதற்கு முன்பு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நிலவகைகளில் வாழ்ந்த மாமனிதர் களின் வாழ்க்கையே புராணமாகவும் அந்த மாமனிதர்கள் கடவுளர்களாகவும் காலம் சித்தரித்தது. இவற்றையெல்லாம் கடந்த நிலையில் இறைசக்தி இருந்தது பிரபஞ்சம் இருந்தது இதையெல்லாம் அறிந்தவர்களே ஞானிகளாகவும் சித்தர்களாகவும் வரலாற்றில் இடம் பிடித்தனர். இதற்கெல்லாம் இலக்கணம் வகுத்த போது சமயங்களாகவும், வேதங்களாகவும், புராணங்களாகவும், இதிகாசங்களாகவும் உருவாகின. பிற்காலத்தில் உருவாகின என்பதற்காக கடவுள் இல்லை என்று அர்த்தமில்லை. அதைதான் வள்ளல் பெருமான் அவர்கள்
சாதியும் மதமும் சமயமும் காணா
ஆதிஅநாதியாம் அருட்பெருஞ்ஜோதி என்றார்.
ஜோதிமைந்தன்
17-06-2021
காலை 5.55மணி
16-06-2021
பக்திமார்க்கம் என்பது மனிதர்கள் தமது துன்பம் நீங்க கர்த்தாக்களை வணங்குவது அவர்களின் துன்பத்தை நீக்குவதால் ஏற்படும் அருள் சக்தி இழப்பை ஈடு செய்ய மனிதர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள். அதனால் கர்த்தாக்கள் ஒரு காலகட்டத்தில்
தன்னுடைய அருள்சக்தி அனைத்தையும் பக்தர்களுக்காக இழந்து மனித பிறவிக்கு வந்து விடுவார்கள். இந்த அருளியல் சட்டத்தால் தான் சதுர்யுகங்கள் ஏற்படுகின்றன. ஞானமார்க்கம் என்பது மனிதர்களாக உள்ள துர்க்குணங்கள் அற்ற ஒழுக்கம் நிறைந்த ஆன்மாவையும் மனதையும் ஒன்றிணைத்த ஆன்மாக்களை கர்த்தாக்கள் நிலைக்கு உயர்த்துவது.வள்ளல் பெருமான் அவர்கள் சன்மார்க்க அருளியல் சட்டங்கள் மூலம் ஞானமார்க்கப் பணியான கர்த்தாக்களை உருவாக்கும் பணியை தமது ஞான தேக செயல்பாட்டின் மூலம் செயல்படுத்திக்கொண்டிருக்கிறார்
ஐந்தொழிலாதி செய் ஐவராதிகளை
ஐந்தொழிலாதி செய் அருட்பெருஞ்ஜோதி
சுபம்.
ஜோதிமைந்தன்.
16-06-2021
காலை 5.55மணி
15-06-2021
வள்ளலாரை குருவாக ஏற்றுக் கொண்ட சன்மார்க்க அன்பர்கள் ஐம்பது வயதுக்குள் மந்திரங் கடந்த நிலைக்கு ( இதன் விவரம் மெய்ஞானத்தை அடையும் வழி கட்டுரை தொகுப்பில் காண்க) உயர்ந்துவிடவேண்டும் அதற்கேற்றவாறு வாழ்க்கை இயல்பை அமைத்துக்கொள்க. முயற்சி செய்யாதநிலை இருந்தால் மூப்பும் பிணியும் வந்து அலைகழிக்கும். மந்திரங் கடந்த நிலை ஏற்பட்டால் அருள்சக்தி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் அபரிமிதமாக வழங்கப்பட்டு அருளாளராக அங்கீகரிக்க விதியமையும். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்ற தத்துவம் உலகெங்கும் பரவ நமது ஞான குரு கருணைமிகு திருவருட்பிரகாச வள்ளலார் எனும் சிதம்பரம் இாமலிங்கம், ஐயா அவர்கள் நமது ஆன்மாவில் தன் ஆன்ம நேயத்தை நிரந்தரமாக பதிப்பிப்பார். நம்மை கருவியாக பயன்படுத்திக்கொள்வார் என அறிக. சுபம்
ஜோதிமைந்தன்.
15-06-2021
காலை 5.55மணி
14-06-2021
வள்ளல் பெருமான் காலத்தில் சாதி அடிப்படையில் யாரையும் அவர் வெறுத்ததில்லை. எல்லா சாதியிலும் வள்ளலாருக்கு சீடர்களும் இருந்தார்கள் வள்ளலாரை எதிர்த்து. கருத்துக் கூறியவர்களும் இருந்தார்கள். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் சார்பாக கோர்ட்டில் வழக்குதொடர்ந்த போது கூட வள்ளல் பெருமானுடன் ஐந்து தில்லைவாழ் அந்தணர்களையும் சேர்த்துதான் வழக்கு தொடரப்பட்டது. தீர்ப்பில் வள்ளல் பெருமான் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மற்ற ஐந்து அந்தணர்களும் அன்றையகால கட்டத்தில் 50 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அதை செலுத்திட்டு வந்தனர். பிராமணர்களும், சிவாச்சாரியர்களும், தமிழ் புலவர்களும் பெரும்பாலானவர்கள் பெருமானிடம் நட்பு பாராட்டியே வந்தனர். ஒருசிலர் மட்டும் எதிர்க் கருத்துக்களை கூறி பிரசுர மிட்டனர். வள்ளல்பெருமான் அவர்கள் பதில் கருத்து கூற முற்படவில்லை. வள்ளல் பெருமானின் அபிமானிகளும், சீடர்களுமே எதிர் கருத்து பிரசுரம் செய்தனர். பிற்காலத்தில் வந்தவர்கள் வள்ளல் பெருமான் பற்றி கூறும் போது பிராமணர்கள் பெருமானின் எதிரிகள் என்று புனைந்துரைத்தனர், வள்ளல்பெருமானை குருவாக எண்ணுபவர்கள் இதுபோன்ற வரலாற்று திரிபுகளை புறந்தள்ளும் மனபக்குவம் கொள்ள வேண்டும்.
ஜோதிமைந்தன்
14-06-2021
காலை 5.55மணி
13-6-2021
ஓவ்வொரு மாதமும் சந்திரன் தமது ஆட்சி வீடாகிய கடகராசிக்கு வரும்போது தாய்மை உணர்வு அனைவரிடமும் மேலோங்கும் அதனடிப்படையில் அன்பு, தயவு, கருணை அனைத்தும் மேலோங்கும். வள்ளல் பெருமான் யோகத்தை முன்னிறுத்தி உயர்நிலையடையவில்லை. கருணையை முன்னிறுத்தி அனைத்து அருள்சக்தியையும் அதன் மூலம் அருளரசாட்சியையும் அதன் மூலம் சுத்தமாதி மூன்று தேகங்களும் பெற்று கொண்டார். சந்திரன் தாய்மைக்கு காரகன் என்பதாலும் பூசம் கடக ராசியில் உள்ளதாலும் வள்ளல் பெருமான் பூச தினத்தன்று சித்திவளாக திருமாளிகையை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கேந்திரமாக உருவாக்கும்படி ஆண்டவரிடம் விண்ணப்பித்து ஞானதேகத்தை பெற்றதாலும் பூசம் என்பது ஞானிகளுக்கும் சன்மார்க்கிகளுக்கும் உகந்தநாளாக உள்ளது.
ஜோதிமைந்தன்
13-06-2021
காலை 5.55மணி
(இன்று மாதப்பூசம் தினம் )
12-06-2021
பொதுவாக மனிதர்கள் திட திரவ உணவுகளை சாப்பிடுகிறார்கள். இறைவன் வாயு உணவாகிய பிராண வாயு எனும் ஆக்ஸிஜனை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உடலை படைத்துவிட்டார். இத்துடன் மேலும் ஓரு உணவாகிய அருளுணவை அவரவர் விருப்பப்படி எடுத்துக்கொள்ள அதை மனதுடன் இணைத்து விட்டார். அதேசமயம் அருளுணவை எடுத்துக் கொள்ளாதவர்கள் சீக்கிரம் மூப்பு வருவதற்கு முன்பே வியாதியால் உடல் பாதிக்கப்படும் இயற்கை நியதியை உருவாக்கிவிட்டார்.
மனிதன் திட திரவ உணவுகளை உண்ணும்போது அருளுணவால் அமுதமாக மாற்றப்படும் உமிழ்நீர் போதுமான அளவு சுரக்காவிட்டால் இன்சுலின் போதுமான அளவு சுரக்காத நிலையையும் படைத்து விட்டார். ஆனால் மருத்துவ உலகம் கணையம் கெட்டு விட்டது என தீர்மானிக்கிறது. உண்மையில் கணையம் கெடுவதில்லை எவ்வளவு உமிழ்நீர் சுரக்கிறதோ அதற்கு ஏற்ற வகையில்தான் கணையம் இன்சுலின் சுரக்கும். தினசரி பிரம்ம முகூர்த்தத்தில் குறைந்த பட்சம் ஒரு நாழிகை (24 நிமிடம்) தியானம் செய்துவிட்டு திட உணவை நன்கு மென்று உமிழ்நீருடன் விழுங்கினால் ஒருமண்டலத்தில் சர்க்கரை நோய் எனும் பெயர் கொண்ட குறைபாடு நீங்கிவிடும்.
ஜோதிமைந்தன்.
12-06-2021
காலை 5.55மணி
11-06-2021
ஐந்தொழிலதிபர்கள் எனும் பிரம்மா, விஷ்ணு ருத்ரன், மகேஸ்வரன் சதாசிவன் என்பது பிரபஞ்சத்தின் பகுதிகளை நிர்வகிக்க ஆண்டவரால் உருவாக்கப்பட்ட பதவிகளாகும். ஸ்தூலதேகத்தில் யோகிகளாகவும் ஞானிகளாகவும் வாழ்ந்தவர்களின் ஆன்மா சூக்கும தேகத்தில் நிர்வகிக்கும் பதவிகள் கடந்த சதுர்யுகத்தில் பதவியேற்ற ஐந்தொழிலதிபர்கள் அனைவரும் ஸ்தூல தேகம் பெற்று மனிதர்களாக கலியுகத்தில் உலவிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் தந்நிலை உணர்ந்து ஞானம் பெற்று சூக்கும தேகத்தை அடைய வள்ளலாரை வருவிக்க உற்று சன்மார்க்க நெறிமுறைகளை அருளியல் சட்ட மாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளியுள்ளார். யுக சந்தியான இன்றைய கால கட்டத்தில் கலியுகத்திலிருந்து சத்யயுகத்திற்கு தமது சன்மார்க்க செயல்பாடுகள் மூலம் மனிதர்கள் சூக்குமதேகம் பெற்று மாறிவிடலாம் உலகத்திலேயே எவ்வளவு பெரிய பொருளியல் கோடீஸ்வரனாக இருந்தாலும் அவனுடைய நற்குணங்களும் ஒழுக்கங்களும் தான் ஸ்தூல தேகத்தில் இருக்கும் போதே சூக்கும தேகத்தை உருவாக்கி கொடுக்கும். அவன் ஸ்தூல தேகத்தை விட்டு பிரிக்கப்படும்போது அவனுடைய வாரிசுகளால் செய்யப்படும் சடங்குகள் அதிகபட்சமாக பிரேத தேகத்தைதான் உருவாக்கி தர இயலும். சூக்கும தேகம் வாழும் போதே அவரவர் உருவாக்கி கொள்ள வேண்டும். அதற்காக ஏற்பட்டதே சன்மார்க்க நெறிமுறைகள் எனும் அருளியல் சட்டம்.
ஜோதிமைந்தன்
11-06-2021
காலை 5.55மணி
10-06-2021
தர்மம் அழிந்து அதர்மம் ஓங்கி செயல்படும்போது வேத மார்க்கத்தில் சதாசிவனை நோக்கி ருத்ரம் என்ற வேதபாராயணம் செய்வார்கள். உண்மையான வேதியர்கள் அவ்வாறாக ருத்ரம் பாராயணம் செய்யும் போது சதாசிவனே ருத்ரநிலைக்கு வந்து தர்மத்தை காப்பாற்றுவார்.
அதர்மம் ஓங்கியுள்ள தன்மைக்கேற்ப பதினோரு முறை பாராயணம் செய்தால் அதை ஏகாதச ருதரம் என்றும் 121 முறை பாராயணம் செய்தால் லகுருத்ரம் என்றும் 1331 முறை பாராயணம் செய்தால் மகாருத்ரம் என்றும் 14641 முறை பாராயணம் செய்தால் அது அதிருத்ரம் என்றும்
கூறப்படுகிறது.
வள்ளல் பெருமான் மூலம் வழங்கிய சுத்த சன்மார்க்கத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நோக்கி 1000 முறை அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்பவரின் ஆன்மாவையே ருத்ர படிநிலைக்கு திறவு கோல் கொடுத்து செயல்பட செய்வார். அப்படி அகவல் பாராயணம் செய்பவர்கள் சர்வ ஜாக்கிரதையாக செயல் படவேண்டும். சரியாக செயல்பட்டால் அவர்களை மந்திர நிலைக்கு உயர்த்தி பஞ்சகிருத்தியங்கள் வழங்குவார்.
ஜோதிமைந்தன்
10-06-2021
காலை 5.55மணி
(இதன் விவரம் மேலும் அறிய மெய் ஞானத்தை அடையும் வழி எனும் தலைப்பிலுள்ள 35 கட்டுரைகளை முழுதும் படிக்கவும்)
9-06-2021
நமது முன்னோர்களின் கல்வியானது குரு குல வாசமாக இருந்தது. பெற்றோர்கள் குழந்தைபருவத்தில் கொண்டு வந்து குருகுலத்தில் சேர்க்கப்படும் சிறுவர்கள் தாய்தந்தியரால் அடிப்படைபண்புகளை மட்டும் பதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் குருமார்கள் படிப்பறிவை பொறுத்தவரை சீடன் பூஜ்யநிலை எனும் தன்மையை குறிக்க முதலில் கருப்பு நிற சீருடை வழங்குவார்கள் அது கல்வியில் ஒளியற்றநிலையை குறிக்கும். மூன்றாண்டு கல்வி முடித்தப்பின் நீலநிற உடை வழங்குவார்கள்
இப்படியாக ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் பச்சை, சிவப்பு, மஞ்சள், வெண்மை என்று 18 ஆண்டுகள் கல்வியை முடித்து அனுப்புவார்கள் தான் படித்ததை அனுபவத்தில் காண சீருடைகளை திரும்ப பெற்றுக்கொண்டு கலப்பு நிறங்கள் உள்ள உடைகளை கொடுத்து திக்விஜயம் அனுப்புவார்கள் ஒரு இளைஞனின் உடையைக்கொண்டு அவன் கல்வியில் எந்த நிலையில் உள்ளான் என்பதை அறிந்து கொள்ளலாம். கல்வியறிவு உயர உயர துற்குணங்கள் நீங்கி ஒழுக்கங்களை கடைப்பிடிப்பான் உடையால் யாரையும் யாரும் வெறுக்க மாட்டார்கள். துற்குணங்கள் நீங்கும் தன்மையே திரைகளாக வள்ளல் பெருமான் எடுத்துரைத்தார் எமக்கு அதை ஆன்மாவின் படிநிலைகளாகவும் அதற்கான உலகங்களாகவும் கருதி சன்மார்க்க செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள கட்டளைகளாக உணர்த்தினார்
ஜோதிமைந்தன்
9-06-2021
காலை 5.55மணி
8-06-2021
நீங்கள் ஆன்மீகத்தின் தாய் மொழி சமஸ்கிருதம் என கருதுவீர்களானால் தமிழ்தான் ஆன்மீகத்தின் தந்தை மொழி என அறிவீர்களாக
வள்ளல் பெருமான் அவர்கள் அவருக்கு சமகாலத்தில் வாழ்ந்த காஞ்சி சங்கர மட பீடாதிபதி சுதர்சன தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுடன் கலந்துரையாடல் செய்யும் போது திருவாய் மலர்ந்தருளியது
வள்ளல் பெருமான் அவர்கள் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் என மும்மொழி பாடசாலை நடத்தியதாலும் மொழி பேதம் பார்க்காததாலும் அவரின் வழியில் நடக்கும் நாமும் மொழிக்கு தகுதி பேதம் பார்க்காமல் அனைத்து மொழிகளையும் சமமாக கருதுவோம். அதே சமயம் தமிழால் வழிபாடு செய்வோம்.
ஜோதிமைந்தன் சோ.பழநி.
8-06-2021
காலை 5.55மணி
7-06-2021
இன்றைய காலம் கலியுகம் முடிந்து சத்யயுகம் உருவாகி பூரண சத்யயுகத்தை இன்னும் எண்பது
ஆண்டுகளில் அடைய (கி.பி 2100) இருக்கும் சூழலில் இது யுகசந்தியான நிகழ்காலமாக உள்ளது. இன்று முதல் சத்ய யுகத்தில் பிரவேசிக்க எண்ணும் அன்பர்கள் அனைவரும் இந்த வலைதளத்தில் உள்ள கருத்துக்களை வாழ்க்கை இயல்பாகக்கொண்டு சத்ய யுகத்தில் பிரவேசித்து தமது வாரிசுகளும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க சுபம் எனும் கருத்துக்களை மனப்பக்குவமாக கொள்ள தொடர்ந்து வலைதளத்தை பயன்படுத்தி உயர்வு அடைக.
என வாழ்த்தி அருளிய திருவருட்பிரகாச வள்ளலார் எனும் சிதம்பரம் இராமலிங்கம் அவர்கள் உணர்த்த வெளியிட்டவர்
ஜோதி மைந்தன் சோ.பழநி.
7-06-2021
காலை 5.55 மணி.